Tuesday, August 2, 2016

மடமை ஓவியம்: பாரதி தாசன்

மடமை ஓவியம்: பாரதி தாசன்







பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்
               படத்தின் நோக்கமெனில்
போர்த்த அழுக்குடை மாற்றமும், வேறு
                 புதுக்கலும் தீ தாமோ?

காத்தது முன்னைப் பழங்கதை தான் எனில்,
                கற்பனை தோற்றதுவோ?
மாத்தமிழ் நாட்டினர் எந்த புதுக்கதை

                 பார்க்க மறுத்தார்கள்?

பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
            படங்களின் நோக்கமெனில்
நாமம் குழைத்திடவோ அறிவாளர்கள்
            நற்கலை கண்டார்கள்!
தூயமைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்
            தொடங்கையில் செல்வரெலாம்
தாமறிந்துள்ள தமிழ்ப்புல வோர்களைச்
           சந்திப்பதேனும் உண்டோ?

நேர்மை இலாவகை இத்தனை நாளும்
          நிகழ்ந்த படங்களெல்லாம்
சீர்மிகு செந்தமிச் செல்வர்கள் பார்வைத்

           திறத்திற் பிறந்தீருந்தால்

ஓர் தமிழ்நாட்டில் சமத்துவ நாட்டையும்
          உண்டாக்கித் தீர்த்திடலாம்
ஆர் செய்யும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்?
          அடிமையும் தீர்த்திடலாம்!


பாதி தளபதி பாதி நாயகன் பற்றி எல்லாம் பாரதி தாசன் சொல்லவே இல்லை....

 மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment