Monday, October 29, 2018

29 10.18 இன்றைய கல்லூரி ஃபேர்வெல்லில் எனது எண்ண அலைகள்: .கவிஞர் தணிகை

29 10.18 இன்றைய கல்லூரி ஃபேர்வெல்லில் எனது எண்ண அலைகள்:  கவிஞர் தணிகை



இனி நாம் எவருமே தாயின் கர்ப்பப் பைக்குள் புக முடியாது, தொப்பூள் கொடியை அவரிடமிருந்து துண்டித்து நாம் தனியே அவர் தனியே எனப் பிரிந்ததே ஃபர்ஸ்ட் ஃபேர்வெல்

தாய்ப்பால் குடி மறந்தபோது இரண்டாம் ஃபேர்வெல் நடந்தது.

பெற்றோரை விட்டு பள்ளிக்குள் புகுந்ததும் மூன்றாம் ஃபேர்வெல்

ஒவ்வொரு வகுப்பைத் தாண்டும்போதும் ஒரு ஃபேர்வெல்

பிரிவோம் சந்திப்போம் என்ற அந்த ஃபேர்வெல் இன்று உங்களை டாக்டர்களாக்கி நீங்கள் டாக்டர்களாகி பிரியும்போது வந்திருக்கிறது...

நாம் எவருமே தனித்தனியல்ல... நீ என்ற உனக்குள் எப்போதும் பிரியாமல்
உன் பெற்றோர், ஆசிரியர்,நட்பு, யவுமே இருக்கின்றன...விதைகளாக, சதையாய் எலும்பாய் நாம் சிறிதிலிருந்து பெரிதாகும் வரை இது போல் நிறைய ஃபேர்வெல்கள் வரும் போகும்...இங்கு நீ எனக் குறிப்பிட்டது மரியாதையைக் குறைக்க அல்ல...ஒருமையைக் குறிப்பதற்கே...

நமது அனைவர்க்கும் ஒரு நிரந்தரமான ஃபேர்வெல் உண்டு. அதைச் சொல்ல  சந்திக்க பயப்படத்தேவையில்லை. அது பற்றி பேசவும் கூச்சப்படவும் தேவவையில்லி..ஆனால் அதற்குள் நம்மை நாம் நிலை நாட்டிக் கொள்ள என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்திருக்கிறோம்? அதைப் பொறுத்துத்தான் நமது பெயர் விளங்கும். நமக்கான ஃபேர்வெல் இருக்கும்

ஒவ்வொருவருக்கும் சாதனை செய்ய ஒவ்வொரு தனித்தனியான முகம் இருக்கிறது...வாழ்த்துகள், ஆசிகள் என்றென்றும்..,

பாலமலை தூய்மை பாரதத் திட்டத்தின்  பயிற்சியில் வெற்றி பெற்ற இந்த இருபது பேரைப்பற்றி நிறைய சொல்லலாம்...ஆனால் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்:
Image may contain: 2 people, people smiling, people standing
இந்த திட்டத்துக்கு நோடல் ஆபிசராக என்னை நியமித்த முதல்வர் பேராசிரியர் டாக்டர் பேபிஜான் தற்போதைய இந்திய உபகண்டத்தின் சிறுவர் பல் மருத்துவத்துறையின் தலைவராக உயர்ந்திருக்கிறார் இப்போது மாநில அளவில் இந்திய பல் மருத்துவக் கழகத்தின் முதல் மாநாடாக வரும் நவம்பர் 10 11 ஆம் தேதிகளில்  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்து  எங்கள் கல்லூரி சார்பாக நடத்துகிறார் அவருக்கே முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்...
Image may contain: 4 people, people smiling, selfie, mountain, outdoor and nature
டாக்டர்    கவித்ரா முகாமின் பெயிண்டிங் பணி இவரால் முன்னெடுக்கப்பட்டது.
டாக்டர் ஆனந்த் ப்ரகாஷ்: நல்ல களப்பணியாளர் மற்றும் தலைவர்
டாக்டர் பீட்டர் ஸ்டீபன்சன்: சமூக அக்கறையுள்ள மருத்துவர்
டாக்டர் சோபியா: வார்த்தை மாறா பணி அர்ப்பணிப்பாளர்.
டாக்டர் ப்ரவின்குமார்: துன்பம் பொருட்படுத்தாமல் சேவைக்கு வந்தவர்
டாக்டர் ஜெயபால்: சேவை மனப்பக்குவமுள்ள பம்பரக் கால்கள்
டாக்டர் சினுமோல் சாஜன்: மிகவும் சுறுசுறுப்பான ஒத்துழைப்பாளர்
டாக்டர் அருண் விக்னேஷ்: ஆக்கபூர்வமான உழைப்பாளி
டாக்டர் ரஞ்சித்: எதற்கும் தயாரான முகாம் உறுதுணை
டாக்டர் சி.பி.நந்தினி: எதற்கும் தயார்
டாக்டர் இலக்யா: முகாம் முழுதும் பாலமலையில் தங்க ரெடி என்றவ்ர்
டாக்டர் ஏ. ஆசிக்கா: மத நல்லிணக்கத்தின் அடையாளம்
டாக்டர் வெங்கடேஷ்: சலியாத மனம்
டாக்டர் கார்த்தி: தொழில் நுட்பம் அறிந்த முகாமுக்கு பிள்ளையார் சுழி
டாக்டர் சுஜிதா: விளையாட்டாகவே வினை செய்பவர்
டாக்டர் கிருஷ்ணகுமார்: குறி தவறாதவர்
டாக்டர் ஸ்ரீ ஹரிணி: குடும்பப் பாங்கு
டாக்டர் விக்னேஷ்வரி: தோழமையில் பிடிவாதம்
டாக்டர் கௌதம்: மண்ணின் மைந்தர்
டாக்டர் ஆர்.ஜி.ஆர்: சித்தார்த்: நுட்பமான அறிவுடைய முதல் பதிவாளர்

அத்துடன் ஒர் விபத்திலிருந்து எமைக் காத்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் மலை அடிவாரத்தில் காத்திருந்த பாலமுருகன் போன்ற கல்லூரி ஓட்டுனர்கள் அனைவர்க்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றி நவிலலை உரித்தாக்கி ஃபேர்வெல் பாரட்டும் என்றென்றும் அன்புடைய...

மறுபடியும்பூக்கும் வரை
கவிஞர் தணிகை

4 comments:

  1. அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. nanri thouanvakal markamal valithiya uigaluku vanakkam. very good sir. This program what is going to give the Tamilnadu.

    ReplyDelete
  3. thanks for your feedback on this post Raja Ratna Sekhar.vanakkam.please keep contact.

    ReplyDelete