மிலிட்டரி ரெமினிசென்ஸஸ் பை ஜேம்ஸ் வெல்ஸ் (ஆங்கிலம்): கவிஞர் தணிகை
ஜேம்ஸ் வெல்ஸ் என்ற போர் வீரர் சுமார் 40 ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனியில் அடி மட்டப் போர் வீரராக தம் வாழ்வைத் துவங்கி லெப்டினன்ட் கர்னல், மேஜர் ஜெனரல் போன்ற உத்தியோக உயர்வுகள் பெற்று போர் குழுக்களுக்குத் தலைமை தாங்கி பணி புரிவதுடன் அல்லாமல் போர் புரிந்த சாகசங்கள் அல்லது வாழ்ந்த உயிர் போய் நழுவி விடாமல் தமது அனுபவங்களை நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் 1790 முதல் 1828 வரை.
இந்த நூல் 2 பாகங்களாக அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை அப்படியே எவ்விதக் கலப்புமின்றி தந்திருக்கிறது.அதில் இந்திய இரத்தம் நிறைய சிந்தியது பற்றிய விவரங்கள் உள்ளன எனவே அது நமது கவனத்திற்கும் உள்ளாகி உள்ளது. மற்றபடி தனிப்பட்ட ஒரு வெள்ளைக்கார போர் வீரரின் சுய வாழ்வு மட்டுமெனில் இது அத்தனை பெருமை பெற்றிருக்காது.
முதல் பாகம் சுமார்:354 பக்கங்கள், இரண்டாம் பாகம் சுமார் 347 பக்கம் எமது கணினி வழியில் 384 பி.டி.எப் பக்கங்கள். எனதருமை பிரவீன்குமார் முதல் பாகத்தை வாங்கி நான் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார், அதன் தொடர்ச்சியாக நான் எனது முயற்சியை தொடர்ந்து இந்த எழுத்துகளை முழுமையாக உள் வாங்க முயற்சித்தேன்.
பொதுவாக நான், எனது, என்னுடைய என்ற நடையில் இலக்கியம் இருப்பின் அவை பெரிதாக பாதிப்பலைகள் ஏற்படுத்துவதில்லை என்ற கருத்துக்கு மாறாக இந்த நூலின் வடிவம் எல்லாமே இவரது சுய விவரக் குறிப்புகளாகவே நான் எனது என்ற அழகியலாகவே எழுதப்பட்டிருக்கிறது.
இந்த நூலின் எல்லா விவரங்களையும் தருவது இந்தப் பதிவின் பகிர்வின் நோக்கமல்ல, அது முடியவும் முடியாது. ஏன் எனில் 18- 19 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆங்கில வார்த்தைகள் பிரயோகம் சற்று கடினமானதாகவே தெரிந்து கொண்டு படிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. மொழி நூற்றாண்டுகளில் மாறி விடுகிறது இல்லையா? ஏன் நமது தமிழே கூட 1960க்குப் பின் பிறந்த நம்மிடையே அதன் பின் மாற்றமடைந்து லை, வை, போன்ற உயிர்மெய் மாறியதை குறிப்பிட வேண்டுமல்லவா அது போல அந்த ஆங்கிலம் சற்று கரடு முரடாக இருக்கிறது என்றாலும் மொழி மூலம் என்பது மொழி பெயர்ப்பை விட உயர்ந்தது என்பதாலேயே இந்த நூலை ஆங்கில வழியில் படிப்பதுவே படிக்கும் ஆர்வமுடையார்க்கு ஏற்றது.
காலம் எவ்வளவு விரைவாக செல்கிறது அதன் கதை சொல்கிறது...480 கோடி ஆண்டுகளாக சுழன்று வரும் புவிச் சுற்றுடன் பத்தாயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த எரித்ரியா எத்தியோப்பியா எரிமலை இப்போது வெடித்து 4000 கி.மீக்கு மேல் அதன் துகள்கள் கண்டம் விட்டு கண்டம் 25,000 அடிக்கும் மேல் பறந்து வருகிறது என்ற காலப் பதிவை எல்லாம் கவனித்தால் நமது வாழ்வு அதில் எங்கே என்று கேட்கத் தோன்றும்.
இந்த வெள்ளைக்கார ஆங்கிலேய மனிதர் நமது எல்லாத் தரப்பு மக்களிடையேயும் ஊடுருவி நேயம் காட்டி வாழ்ந்த புதிர்கள் இதில் உள்ளன, சின்ன மருதுவுடன் நெருங்கி பழகியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.அந்த வம்சத்தின் தொரசாமி பற்றி பதிவு இருக்கிறது.
கொல்கொத்தா , சென்னை என்ற துறைமுகப் பட்டணங்களில் கால் பதித்ததில் இருந்து திரும்பி பணி அல்லது இவரது ஓய்வு ஆரம்பித்து மீண்டும் கொல்கொத்தா துறைமுகத்தில் கப்பல் ஏறி திரும்பி செல்வது வரை இயற்கை , செயற்கை, போர், மரணம், போன்றவற்றில் இருந்து இவரும் இவர், இவரது , குடும்பம், உறவு, நட்பு, சூழல் எல்லாம் உயிருடன் பயணம் செய்துள்ளன என்பவை நிறைய முரண்களுடன் பதிவு செய்யப் பட்டுள்ளன.
பர்மா, இலங்கை,சீனா, சீனா உள்ளடங்கிய இந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தில் எல்லா இடங்களிலும் இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியராக கிழக்கு மேற்காக வடக்கு தெற்காக வாழ்ந்திருக்கிறார். அதில் தெற்கே ஓமலூர், சங்கரி துர்க், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, ஈரோடு, சேலம் COIMBATORE இப்படி எல்லா இடங்களிலும் இவரது பயணம் நடந்திருக்கிறது. அப்போது மேட்டூர் அணையும் மேட்டூர் என்ற ஊருமே இல்லை. காவிரி நதியும் வெள்ளமும் இருந்திருக்கிறது.
கலிலியோவை அறிவியலில் தந்தை என்பார், அவரை ஐசக் நியூட்டன் சீடராகத் தொடர்ந்தார் என நாடு வேறான போதும், காலம், நூற்றாண்டுகள் வாழ்ந்த காலம் வேறான போதும் முயற்சிகள் தொடர்ந்தன என்பது போல இந்த நபரை நான் தொடர்ந்திருக்கிறேன்.
இது இராமகிருஷ்ணர்,விவேகானந்தர்,நிவேதிதா,பாரதி,பாரதிதாசன்,சுரதா, பட்டுக்கோட்டை போன்ற குரு சீடர் போன்ற தொடர் வாழ்வல்ல பாரம்பரியம் அல்ல. இது வேறு.நானும் அந்த மனிதர் பயணம் செய்த இடங்களில் ஒரு துளி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே இந்தியாவில் எனது இளமைப் பருவத்தில் சில இடங்களைத் தொட்டு இயற்கை வாரி இறைத்த இன்ப, துன்ப நிகழ்வுகளில் அனுபவித்த காரணத்தால் இந்த வாழ்வை படிக்க நேர்ந்ததோ என்ற எண்ணம் என்னுள் எழுவதை தடுக்க முடியவில்லை. ஆனால் அது வேறு எனது வாழ்வு வேறு. அதன் ஒப்பீடு துளியும் பொருந்தாது என்றாலும்...
இதை எப்படி படிக்க நேர்ந்தது எனில்: ஊமைத்துரை வரலாறு, அதைக் கண்டு வியந்த மனம், கெட்டி பொம்மு எதிரியை அவர் தம் இடத்திலேயே சென்று சந்தித்து போர் புரிந்து அதன் விளைவை சந்திக்க, அந்த சந்ததியின் ஊமைத்துரை, மருது சகோதரர்கள் எப்படி எதிர்களை எதிர் கொள்கிறார்கள் என்பதில் இருந்தே ஆரம்பித்தது.
இடது உள்ளங் கையில் பதர்களை வைத்து வலது உள்ளங்கை வைத்து அதை தேய்த்து காண்பித்து வாயில் ஒரு விசில் ஒலியை அனுப்பி எதிரிகளை ஊதித் தள்ளுங்கள் என தமது சுற்றத்திற்கு கட்டளை பிறப்பித்த ஊமைத்துரையின் ஆணையை ஏற்று எதிர்களை களம் கண்ட பதிவு, நமது மண்ணிலேயே நம்மை வீழ்த்த எதிரிகளுக்குத் துணை செய்யும் மனிதர்கள் அக்குள் மயிர்களுக்கு சமம் என்ற பதிவு, ஏன் எப்படி ஒரு பாளையக்காரர் இறப்பான் தெரியுமா என ஒரு முதிய பாளையக்காரரை இறக்கும் தருவாயில் ஒரு பலகையில் வைத்து தூக்கிச் சென்று எதிரிகளிடம் காண்பிக்கையில் தமது இருபக்க மீசையை முறுக்கிக் காட்டிக் கொண்டு இப்படித்தான் வீரமாக சாவான் என்று செத்தும் சாகும்போதும் வீரமாக சாவது...இப்படிப் பட்ட சம்பவங்கள்...
சுமார் மார்ச் இறுதியில் இருந்து மே வரை ஊமைத்துரையை வேட்டையாடிய வரலாறு பதிந்துள்ளது... அந்த வீரியத்துக்காகவே இதைப் படிக்க முனைகையில் அது போன்ற நிகழ்வுகளை முன்னெடுத்த இந்த நூல் அதன் பின் இந்த ஜேம்ஸ் வெல்ஸ் நாட்குறிப்புகளில் அவரது பார்வையில் தனிப்பட்ட பாதையில் புகுந்து செல்கிறது. வேட்டையாடுதல், பல்வேறுபட்ட இயற்கைச் சீற்றம், நோய்கள்,பிணிகள், நட்பு, இப்படி போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியில் கிழக்கிந்தியக் கம்பெனி உலகின் மிக உயர்ந்த கம்பெனி நான் பணி புரிந்தது பெரிய வாய்ப்பு என்றபடி இந்த எழுத்தாளர் முடிவில் சொல்லிச் சென்றுள்ளார். James Welsh (12 March 1775 – 24 January 1861) was a Madras Army officer.[1] 85 ஆண்டுகள் வாழ்வில் சுமார் 40 ஆண்டுகள் இந்தியாவில். தமது 58 ஆண்டு கால பணியில்.
நிறைய குறு நில மன்னர்களை சந்திக்கிறார், அவர்களுடைய சுத்தம், சுகாதரமின்மை பற்றி எல்லாம் குறிப்பிட்டு உள்ளார், மேலும் ஒரு குறிப்பிட்ட இனப் பெண்கள் தாம் போட்ட துணியை அவர்களின் உடல் பாகங்கள் கன்றிப் போகும் வரை கழட்டுவதே இல்லை அவ்வளவு அழுக்குடன் நாற்றத்துடன் வாழ்கிறார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் அதைப் பற்றி எல்லாம் இப்போது அப்பட்டமாக சொன்னால் அவை மதத் துவேசம் என்ற பட்டியல் கீழ் கொண்டு வரப்பட்டு பெரிய பிரச்சனை கூட ஏற்பட்டு விடலாம் எனவே இந்நூலை படிக்க வேண்டிய நூல் தாம் என்ற ஒரே காரணம் பற்றியே இங்கு பதிவு செய்து பகிர்ந்துள்ளேன். ஒரு நல்ல அனுபவம் நல்ல நூல்தாமே.
பி.கு: புலியை, கரடியை,மான்களை , பறவைகளை வேட்டையாடுவது, ஒரே குண்டில் இரு பாம்புகளைக் கொல்வது, இப்படி ஏராளமான நிகழ்வுகள் சொல்லப் பட்டுள்ளன அவை பற்றி படிக்க விரும்புவோர் படிக்கலாம்.மொத்தத்தில் இதில் இந்திய விடுதலைப் போரில் உயிர் நீத்த, நாடு கடத்தப்பட்ட வரலாறுகளின் இடங்களும் இருக்கிறது என்பது தவிர மற்றபடி முழுவதுமான ஒரு வெள்ளைக்கார மனிதரின் வாழ்வுக் குறிப்புகள். படிக்கத் தக்கதுதான். ஆனால் பாரட்டப் பட வேண்டுமானால் இவர் நம் மனிதர் மேல் கொண்டிருந்த நட்பு பற்றியும் எல்லா நடப்புகளையும் சுய விருப்பப் படி மாற்றாமல் அப்படியே காலப் பதிவு செய்ய வேண்டும் போன்றவற்றிற்காக்த்தான்.
அன்றைய தமிழ்க் குடி செய்த வேல்கம்பு 20 அடி முதல் 30 அடி வரை நீண்டிருந்ததும், அதை எதிரியின் உடலை துளைத்து துருவி சென்று மாய்த்த வரலாறு பற்றி படிக்கும் போது 6 அடி கடப்பாரையையே நம்மால் தூக்க முடியவில்லையே இவர்கள் எப்படி இப்படி என எண்ணிக் கொண்டே ஜாவ்லின் த்ரோ, ஈட்டி எறிதல் போட்டி விளையாட்டு பற்றி எல்லாம் நினைவு செல்ல...ஒரு பதிவை முற்றுப் பெறாமலே முடித்துக் கொள்கிறேன்...ஏன் எனில் எண்ணங்கள் நிறைய எழ, எழுதுவது அவை பற்றி எல்லாம் இயலாதது என்பதால்...வாழ்வில் எப்படி எப்படி எல்லாமோ நாளும் நேரமும் செல்கிறது, ஒரு முறை இதைப் படிக்கவும் நேரம் செலவிடுங்கள் அது உங்கள் வாழ்வில் ஒரு நல் அனுபவத்தை ஏற்படுத்தும்...
நான் இதைப் படித்து முடித்ததும் ஒரு பைத்தியக்கார மனநிலையில் சென்று இன்பம் அடைந்ததாக எமது துணை க் குறிப்பிட்டதும் அதை அப்படியே அதே மனநிலையுடன் இதை யாம் அனுபவிக்க காரணமாக இருந்த மற்றொரு துணைக்கு நான் செய்தி பகிர்ந்து கொண்ட நினவலைகளுடன்....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
P:s: In their Military strength STARTS with warriors in hundreds, grows in many thousands and ends in lakhs The Military contains Native...Local or Indian sipoys, musselmans,Arabs, English with cavalry, artillery, infantry even with Elephants etc.Selfishness, Money making mind,Poverty,Lot of small kingdoms, India's wealth, and plundering...All makes this history and lot of English men or East Indian company men or England men are also killed in many thousands and lakhs...these are also reasons before Gandhi appearance in our Liberation fight against Whites to Quit our nation. we lost our sacrificed souls in many crores of numbers to this achievement to make our country free from them ...



