Thursday, December 18, 2025

கட உள்(கள்)

 கட உள்(கள்)



சிவம் (உருவமற்றது) சிவன் ஆனது

சக்தி  (ஆற்றல்)ஈஸ்வரி ஆனது

வெளி (திரு) மால் ஆனது

திரு (செல்வம்) இலட்சுமி ஆனது


கருவுரு(தல்) ப்ரம்மம் ஆனது

கற்றல் கல்விக் கடவுள்(சரஸ்வதி) ஆனது

அழகு முருகு ஆனது

படைத் தலைமை கணபதி ஆனது


காற்று காளி (அம்மன்) ஆனது

மழை மாரி (அம்மன்)ஆனது


எல்லையும் காவலும் அறச்சீற்றங்களும் தெய்வங்களானது...


கதிர்கள் மூலம் ஆனது

சூரிய சந்திரர்களும் கோள்களும் கடவுள்கள் ஆனது

விண்மீன்களும் ஆகாயமும் பிரபஞ்சமும்

பூமியும் கடலும் மலையும் மரமும்

இயற்கையானது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment