Wednesday, April 10, 2019

கருப்பு சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ரஜினி வேஷம் கலைஞ்சுப் போச்சு டும் டும் டும்: கவிஞர் தணிகை

கருப்பு சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ரஜினி வேஷம் கலைஞ்சுப் போச்சு டும் டும் டும்: கவிஞர் தணிகை

Image result for neela sayam veluthu


நதி நீரை இணைப்பதாக பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாம் அது நம்மூர் புலி வருது புலி ராசா ரஜினி காந்துக்கு பிடித்துப் போய்விட்டதாம், அதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறாராம். கருத்து நல்லதுதான் ஆனால் அதை யார் சொல்வது பாரதிய ஜனதாவா...அதாவது கடந்த தேர்தலில் இதே கட்சி அயல் நாட்டில் முதலீட்டில் உள்ள இந்தியப் பணத்தை எல்லாம் மீட்டு வருவோம் என்ற கட்சி, தாங்கள் பதவிக்கு வந்தால் காங்கிரஸ் செய்ய முடியாததை எல்லாம் செய்வோம் இந்த ஆதார் தேவையில்லை, எரிவாயுவுக்கு இப்படி மானியம் தேவையில்லை, ஜி.எஸ். டி காங்கிரஸ் முயல்கிறது அது தேவையில்லை  என எதற்கெடுத்தாலும் காங்கிறஸ் ஆட்சிக்கு இவர்கள் வந்தால் பரவாயில்லை என நம்ப வைத்தார்கள்...கழுத்தறுத்து விட்டார்கள்.

இப்போது காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை என்று இவர்கள் ஆட்சி சொல்லிவிட்டது சொல்லாமல் சொல்லி விட்டது.

இந்த காங்கிரஸ் கட்சிக்கு விவஸ்தையே கிடையாது மாநிலத்தில் பிரியாணி பொட்டலம் கட்சித்தலமை அலுவலகத்தில் உனக்கு முந்தியா எனக்கு முந்தியா சண்டை...அதை ஊடகம் ரெடியாக ஊதி வைத்து பெருக்க வைத்து செய்தி ஆக்கி வரும் நிலையில் கே.எஸ் . அழகிரி மாநிலத் தலைவர் நதி நீரை இணப்பது சாத்தியமில்லை என தேவையில்லாத நேரத்தில் பேசிக் கெடுத்து வருகிறார். ராகுல் கூட அப்படி பேசித்தான் பாதிக் கெட்டார். எல்லாக் கட்சிகளையும் அரவணைத்துப் போகவேண்டும் என்று எங்கள் ஊர் ஓ.பிஎஸ் ஈ.பி.எஸ் கேட்டாவது தெரிந்து கொண்டிருக்கலாம்....
Related image
இந்நிலையில் நம்ம சூப்பர் ஸ்டார் கறுப்பழகன் என்றும் பதினாறு கட்டழகன்  தர்பார் நடத்த தில்லி செல்கிறார். அவர் தமக்கும்  கமலுக்கும் இருக்கும் நட்புறாவை சொல்லாத எதையாவது எழுதி கெடுத்து விடாதீர் எனக் கேட்டுக் கொண்டு அவருக்கு தமது ஒத்தழைப்பு ஆதரவு இல்லை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி, நதி நீர் இணைப்பு பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் இருக்கிறது அவர்கள் அதை நடத்தி விடுவார்கள் நள்ளிரவில் பணத்தை எல்லாம் செல்லாது என ஓரிரவில் அதுவும் நள்ளிரவில் சொல்லியபடி ஓரிரவிலேயே நடத்தி விடுவார்கள் என மகிழ்வடைந்ததாக பூரித்திருக்கிறார்.  அதையே சொல்லாமல் சொல்கிறார் யார் பக்கம் தாம் என்பதையும்...பிழைக்கத் தெரிந்தவன் 167வது படமாக தர்பார் செய்வார் அவர் பின்னால் பிழைக்கத் தெரியாத ஒரு கூட்டம் போய்க் கொண்டே படுகுழியில் விழுந்தபடியே....

அதற்கு கமலே பரவாயில்லை துணிச்சலுடன் எத்தனை பேர் வாக்களித்தாலும் இல்லையென்றாலும் நின்றே பார்த்துவிடுவது என கட்சி ஆரம்பித்த புதிதிலேயே நாடாளுமன்றம் வரை தமது குரலை கொண்டு போக‌
 இருக்கிறார்
Related image
காமராசர் சொன்னாராம்  என்று ஒரு காட்சி உலவுகிறது வாட்ஸ் ஆப்பில், கூத்தாடுகிறவனிடம் நாட்டை கொடுங்கள், அவன் கூத்தியாவிடம் அதைக் கொடுப்பான், அவள் அதை குற்றவாளிகளிட‌ம் அதைக் கொடுப்பாள் அவர்கள் அதை அடமானம் வைப்பவர்களிடம் கொடுப்பார்கள் என திண்டுக்கல் தேர்தலில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக தமது கட்சிக்கு வேட்பாளரை நிறுத்தியபோது  சொன்னாராம் அது அப்படியே நடந்தும் விட்டதே...
Related image
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment