Wednesday, April 3, 2019

நரகம் என்பது வேறல்ல அரக்கன் என்பவர் வேறு யாருமல்ல: கவிஞர் தணிகை

நரகம் என்பது வேறல்ல அரக்கன் என்பவர் வேறு யாருமல்ல: கவிஞர் தணிகை

Related image

நரகம் என்பது வேறல்ல பூமிதான் பூமியில்தான், அரக்கன் என்பவர் வேறு எவருமல்ல இந்த மனிதர்கள் தாம்.

7 வயது சிறுமியை இரு முறை வன்புணர்ச்சி செய்த பின் அவர் அதை வெளியே சொல்லாமல் இருந்ததால் 3 ஆம் முறை  அவரைத் தூக்கிச் சென்று வன்புணர்ச்சி செய்யும்போது அவர் கத்தியதால் சத்தம் வெளிவராதிருக்க, செய்தி வெளித்தெரியாமல் போக அடித்துக் கொன்றேன் அந்த சிறுமியின் பிணத்தை வீட்டில் வைத்துவிட்டு பாட்டியின் சவ நிகழ்ச்சியையும் நடத்தி முடித்தேன் என்றிருக்கிறார் கோவை சார்ந்த ஒரு பெயர் குறிப்பிட அசிங்கமான ஒரு கட்சி சார்ந்த ஒரு அரக்க மிருகம்.

தேனியில் 10 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த 3 மிருகங்களுக்கு தூக்கு தண்டனை என்றிருந்ததை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை என்று மாற்றி உள்ளதாக இன்றைய செய்தி...

டில்லியில் நிர்பயா வழக்கு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற இலண்டன் மருத்துவமனைக்கு கூட விமானம் பறந்தது...

காஷ்மீரில் அசீபா பானு என்ற 8 வயது கால்நடை மேய்க்கும் சிறுமிக்கு நேர்ந்த கதி பற்றி எல்லாம் உலகே பேசியது ஆனால் தேனி, தர்மபுரி, கோவை என்றால் அது பெரிதாக அலை எழுப்புவதில்லையே ஏன்? ஊடகங்கள் கவனிக்க வேண்டும் இது பற்றி எல்லாம்.
Image result for coimbatore 7 year old rape case
கழிப்பறைகள் போதுமான அளவில் இல்லா நாடு உலகின் 4 ஆம் நாடாக துணைச் செயற்கைக் கோள்களை ஏவுகணை வீசி அழிக்கும் ஆற்றல் பெற்றிருக்க‌

குடிக்க நீர் கிடைக்கா நிலையில் எல்லார் கையிலும் செல்பேசிகள் இருக்க‌

ரயில்வே இருப்புப் பாதை நெடுக எங்கும் எங்கும் எங்கெங்கும் இன்னும் துர்நாற்றம் இல்லா மனிதக் கழிவு இல்லா நிலையே இல்லா நிலையில் வாக்கு எந்திரத்தின் வழியே வாக்குப்பதிவு

சாதாரண மனிதர்க்கும் ஏழை எளியவர்க்கும் தம்முடைய காசையே வங்கியில் இருந்து எடுக்க ஆயிரம் சட்ட திட்டங்கள் வரைமுறைகள் ஆனால் டிஜிட்டல் மனி, அக்கவுண்ட்ஸ் ட்ரான்ஸ்வர், நெவ்ட், ஆர்டிஜிஎஸ் என்ற சேவை எல்லாம் இருக்க இந்த மாபெரும் மனிதர்கள் எப்படி இவ்வளவு கருக்கழியா புது நோட்டுகளில் புரள்கிறார்கள்...
Image result for coimbatore 7 year old rape case
இந்த நாட்டின் ஒரு சதவீத மக்களிடம் மொத்தமாக 73 சதவீத சொத்து உள்ளடங்கிக் கிடப்பதாக ஆதாரபூர்வமான செய்தியும் விவாதமும் வெட்டவெளிச்சத்தில்.

 அந்த ஒரு சதவீதத்தைக் கண்டறிந்து மிக எளிதாக அதை நாடெங்கும் விநியகம் செய்ய முடியாததா என்ன... நீரவ் மோடியும், விஜய்மல்லையாவும் லலித் மோடியும் இதே போல எத்தனை மோடிகள் ஏழைகளின் நாயகர்கள் எனச் சொல்லியபடியே அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் ஸ்டெரிலைட் முதலாளிகளுக்கும் ஏவல் நாய்களாக....

இங்கொருவர் துணைவியின் தாலியை வைத்துதான் தேர்தலில் நிற்பதாக நின்று மக்கள் காலடியில் வேண்டி வென்று, அதன் பின் மந்திரியாகி, சபாநாயகராகி வெறும் எம்.எல்.ஏ ஆகி ஒரு கூட்டத்தில் ஒரு  நபர் எட்டு வழிச்சாலை தடுப்பது பற்றி பேசினீர்களே, விவசாயிபக்கம் நிற்பதாக எல்லாம் சொன்னீர்களே என்ற ஒரு நபரை வாய் மீதே அடித்து துர்த்துகிறார்.

சேவை வழியில் வளர்வதாக இருந்தால் மிகவும் கால தாமதம் ஏற்படுமே...ஏன் எங்களைப்போல அடையாளம் தெரியாமல் கூட போய்விடலாமே... எனவே உடனடியாக முன்னேற வேண்டுமெனில் தாயுடன் உறவு கொள்வது போல என்று பேசினாலும் அதன் பின் உறவு கொள்வது அவசியம்தானே....மேலும் பல நூறுகோடிகள் கைமாறி இருப்பதாக செய்தி வருகிறதே என்றால் அந்த அடிப்படைத் தொண்டர்களே  எங்கே ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்களே...

அதாவது இவர்கள் ஆதாரம் வைத்துக் கொண்டு பணப்பரிவர்த்தனை செய்து கொள்வார்களா இந்த அடிப்படை கூடவா தெரியமல் இவர்கள் இருப்பார்கள்..

 ஒரு மந்திரி அங்க வாங்க பார்க்கலாம் என ஒரு வேலைக்காரப் பெண்ணின் அம்மாவிடம் சொன்னதும், பொள்ளாச்சி விவகாரம் சிரிப்பாய் சிரித்து அடங்க மறுப்பதுமாய்....

ஒரு பொதுக்கழிப்பறையைக் கூட தூய்மையாக வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கிற நாடு இது நரகமல்லாமல் வேறென்ன....இங்கு தேர்தலில் நிற்பவர் யாவருமே குற்றவாளிகளாகவே இருக்க‌

குற்றவாளிகளின் ஆட்சியில் மக்கள் எல்லாம் குற்றவாளிகளாகவே இருப்பார்கள்... குற்றவாளிகளாய் இருக்கும் மக்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் குற்றவாளிகளாகத்தானே இருக்க முடியும்...

இந்தியா எச்சரிக்கயுடன்  பயணம் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது....
Image result for asifa banu
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment