Monday, April 15, 2019

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அரசாங்கமும் ஆட்சி அதிகாரமும்: கவிஞர் தணிகை

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அரசாங்கமும் ஆட்சி அதிகாரமும்: கவிஞர் தணிகை


Image result for darbar rajini movie
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்? வாழும்போதும் செத்து செத்துப் பிழைப்பவன் மனிதனா என்று தலைவர் பாடுவார்...பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதனே மனிதன் மனிதன் அதே படத்தில் வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனிதனை இன்னும் காணலையே என்ற பாடல் இருக்கும்....

பேட்ட படத்திற்காக 65 கோடி சன் குழுமம் வழங்கி இருக்கிறது 40 நாள்  கால் சீட் ஒதுக்கியதற்காக... இது ஆசியாவிலேயே ஒரு நடிகர் வாங்கிய அதிகம் சம்பளமாம்...இப்போது தர்பார் படத்திற்காக 90 நாள் கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாக செய்தி. நீஙகளே யூகித்துக் கொள்ளுங்கள்...

இதெல்லாம் இல்லாமல் படம் நன்றாக ஓடுகிறது என்றால் விநியோக உரிமையும் பிரித்துக் கேட்டு எடுத்துக் கொண்டதும் உண்டு. படம் ஓடாம்ல் நஷ்டப்பட்டதற்கு இழப்பீடு ஒதுக்கியதும் ஒதுக்க முடியாது கொடுக்க முடியாது என்று  சொன்ன செய்திகளும் உண்டு.

சாக்ரடீஸ் பகலிலேயே இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டு தேடிக்கொண்டே செல்வாராம். என்ன தேடுகிறீர் என்றால் மனிதனை என்பாராம்

அதே போல டார்ச் லைட் சின்னத்தை வைத்துக் கொண்டு முயற்சி செய்தபடி இருக்கிறார்கள் கமல்ஹாசனும் அவர்கள் குழுவினர்களும். அவர் கூட மிகவும் உள் வந்து என் போன்ற கிராமிய சமுதாயத்துக்காக உழைத்தவர் எவரையும் பின் பற்றவோ துணைக்கொள்ளவோ இல்லை இருந்தாலும்

எவர் எவரோ எந்த எந்தக் காலத்தையும் மறந்து கவுண்டமணி குரலில் சொல்லப் போனால் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும் அணி அணியாய் சேர்ந்து சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முயல்...

இந்த நடிகர்கள், விஷால், ரஜினிகாந்த், விஜய் போன்றோர் சேர்ந்து கமல்ஹாசனுக்கு ஒத்துழைத்து தனது இரசிகர்களை வாக்களிக்க்ச் செய்தால் அவருக்கும் கணிசமான தேர்தல் முடிவுகள் பலனாக கிடைக்கும் ஆனால் அதெல்லாம் சினிமாவில் தான் சொந்த வாழ்க்கைக்கோ, அல்லது நாட்டு நலன் என்ற பேச்சிற்கோ உதவாது என அனைவரும் வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.

கூத்தாடிகள் இனி வரக்கூடாது அரசியலுக்கு என்று ஒரு வாதமும், ஏன் வரக்கூடாது என்ற ஒரு விவாதமும் இருக்கிறது...இன்றைய தேர்தல் முனையத்தில் பழைய அணிகளுக்கு மக்களுக்கு சேவை செய்வதில் எந்தவித அருகதையும் தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே புது அணிகள் வரவேண்டும். அது கமலின் மக்கள் நீதி மையம், சீமானின் இயக்கம் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்களுக்கு புதிய இரச்சம் பாய்ச்சுவது போல இந்த முக்கிய புள்ளிகளின் ரசிகர் அணிகளும்  சேர்ந்தால் அது வலிமையும் சின்ன அடையாளங்களும் காலம் காலமாக உள்ள வாக்கு வங்கி உடைய அந்த இரு அணிகளுக்கும் பீதியை கிளப்பும்.

நேரடியாகவே மோடி மிலிட்டரி சாதனை என்று பேர் சொல்லி  புதிதாக வாக்கு முதல்முறையாக போட வரும் இளையோர் அதற்காக போடவேண்டும் என்றிருக்கிறார்.

பொதுவாகவே பதுகாப்பு படைகள் செயல்பாடுகள் குறித்து தேர்தலில் பெருமை பேசி வாக்கு கேட்கக் கூடாது அதை தேர்தலில் இழுக்கக் கூடாது என்று ஒரு தார்மீகப் பொறுப்பு அரசியல் கட்சிக்கும் ஆள்வோருக்கும் வேண்டும் என்கிறது இந்திய முறைமைகள் அதை எல்லாம் மீறி அணில் அம்பானிக்கு மோடி உதவி அந்நிய நாட்டின் வரி விதிப்பிலிருந்து விலக்கு வாங்கிக் கொடுத்தது போல... எதை வேண்டுமானாலும் செய்யத் தயராக இருக்கிறார்கள் மோடி அமித் நிதின் கட்காரி குழுவினர்


இவர்களுக்கு ஒத்துழைப்பராம் நதி நீர் இணைப்பு அவர்கள் தேர்தல் அறிக்கை சொல்கிறது என நம்ம ஊர் பேட்ட ரஜினிகாந்த் என்னும் சிவாஜிராவ் கெய்க்வாட்


குழந்தை நட்சத்திரமாகி அறிமுகத்திலிருந்து இன்று வரை கமல்ஹாசன் என்னதான் முயன்ற போதும் அவருக்கு அவ்வளவு இரசிகர் கூட்டம் இல்லை என்றும், இந்த சிகரெட் நாயகனுக்கு  மார்கட்டும், இரசிகர் கூட்டமும் இன்னும் இருப்பதாக இவரை நம்பி பணம் போட்டு படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள்..

இந்த கூட்டம் வழிபடும் கூட்டம் அப்படியே இவர் சொன்னால் வாக்க்ளிக்குமா இல்லையா என்று சட்டசபை தேர்தல் வந்தால் தெரியும் ஏன் எனில் அப்போதுதான் இவர் கட்சியை  ஆரம்பித்து தேர்தலை சந்திப்பாராம். அல்லது இந்த தேர்த்ல் முடிந்தபின் அதன் முடிவுகளுக்கு ஏற்ப தனது முடிவுகளை செயல்பாடுகளை எடுத்துக் கொள்ளலாம்...
Image result for darbar rajini movie
பிழைக்கத் தெரிந்த மனிதனும் மனிதர்களும்..

வாழும்போது செத்து செத்துப் பிழைப்பவன் மனிதனா...

இப்படி ஒவ்வொரு தனிமனிதர்களிடமும் எத்தனை முடைகள், தடைகள், உள் ஒதுக்கீடுகள் நல்லதை நியாயத்தை எவருமே நம்ப மறுக்கிறார்கள் சுயநல வழிகளில் மக்கள் தமது தரங்கெட்ட வாழ்வில் வாழ்ந்து வருகிறார்கள் எனவே வேட்பாளரும், கட்சிகளும் ஆட்சியும் அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. தேர்தல் இருக்க இருக்க மக்கள் இடையே இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு நல்லாட்சி தத்துவத்திலிருந்து விலகி விலகியே போய்க் கொண்டிருக்கிறது. இதை எல்லாம் எப்படி சீர் செய்ய முடியும் என்று சிந்தித்தாலும் அதன் விடை காண முடியா நிலைகளே அதிகம்.

ஒரு பேருந்தில் எவர் அக்கம் பக்கம் அமர்ந்திருக்கிறார் என யோசித்து கவனித்து பார்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். எத்தனை எத்தனை மனித எண்ணங்கள் வண்ணங்கள்...அமர்ந்து கொண்டு நகர மறுப்பவர்களும், பெண்கள் வழி விடச் சொன்னால் கூட வழி விடாதாரும், பெண்கள் அமர்வதற்கு இடம் கொடுக்காதாரும்....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாம் அவரவர்க்கென்று ஒரு உலகில் அவரவர் ப்ரி அரசாங்கத்திலும் ஆட்சி முறைகளைலும் கூடு கட்டு வசித்து வாழ்ந்து வருகிறார்கள். சாமான்யமாக இவர்களைஇ நல்வழிப்படுத்தி பொதுமைப்படுத்தி இழுத்து செல்வது இயலா காரியமாகவே படுகிறது.

( சிறு சிறு முயற்சிகள் வழியே எடுத்து செல்லும் தீபமே பின் விரிவடைய வேண்டும். அதை மட்டுமே அதனால் மட்டுமே நிலை சரியாகும் என்ற ஒரு சிறு கீற்றுப் பொறி மட்டும் இருந்து கொண்டு இருக்கிறது...)

அதே போல தூத்துக் குடி சம்பவங்களும், எட்டு வழிச் சாலைகளும்,  எல்லாமாக இருக்கும் அணிக்கு இந்த மனிதன் ஒத்துழைப்பாராம் ஆனால் ஆதி முதல் தம்முடன் சேர்ந்து ஒரே துறையில் பணி புரியும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொண்டு இருந்தபடியே அவர் நல் முயற்சிக்கு கை கொடுக்க மாட்டாராம்...

எங்கேயோ இடிக்கிறது இல்லையா, ரெய்ட் எங்கெங்கோ போவது இங்கே வந்து விடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாமோ....எம்.ஜி.ஆர் கூட இது போன்ற பயத்தில் இருந்ததாக செய்திகள் சொன்னதுண்டு... கமல் பொது இடத்திலேயே அறைகூவல் செய்கிறார் தமது அரசு வரிக் கணக்கில் தெளிவாக எந்தவித பாக்கியும் இல்லாதிருப்பதாக...

செயல்பட ஆரம்பித்திருக்கிறார் பயமின்றி...தொல்லைகளுடன்...ஆனால் ரஜினிகாந்த் இனிமேலும் இந்த வயதுக்கும் பின்னும் என்ன செய்யப்போகிறார்,,,ஒரு வேளை பாராதிய ஜனதாவின் ஒத்துழைப்புடன் தமிழக முதல்வராக இருக்கிறாரோ?
Image result for darbar rajini movie

 ஓரு வேளை கட்சி நடத்த பணம் போதவில்லை என்றுதான் அடுத்தடுத்து எவ்வளவு விரைவாக எவ்வளவு படத்தை நடித்து முடித்து பணம் சேர்க்க முடியுமோ அவ்வளவும் சேர்க்க முயற்சிக்கிறாரோ...

சாருஹாசன் இதை எல்லாம் கருத்தில் கொண்டே தம்பி கமல் வாய்ப்பில்லாமல் போகலாம் என்றும் ரஜினிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சொல்லி இருக்கலாம்...

நேரடியாக மோதினால் பாறையில் தலை சுக்கலாகும்... சுற்றி வளைத்து சம்பவ சாங்கியங்கள், வாய்ப்புகள்  கூட்டு சேர்தல், காலத்தை பயன்படுத்தல் இப்படி காய் நகர்த்தி தலைமைக்கு குறி வைப்பார் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள் கலைஞர் கருணாந்தி காலத்தில் இருந்து...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment