Friday, July 1, 2016

உலக மருத்துவர்கள் தினமாமே?(01.007.2016): கவிஞர் தணிகை

உலக மருத்துவர்கள் தினமாமே?(01.007.2016): கவிஞர் தணிகை

மருத்துவர் என்பவர் தெய்வம்தான் ஆனால் அந்தத் தெய்வங்களுக்குத்தாம் தாம் தெய்வம் என்பது தெரியாமல் இருக்கிறது.இந்த நாட்டின் கொடுமையான வருந்தத் தக்க விளைவு இது..

எனையறிந்த நானறிந்த நல்ல இரண்டு மருத்துவர்களுக்கு வாழ்த்தும், இன்னும் சில மாதங்களில் மருத்துவர்களாக இருக்கும் 20 பேருக்கு ஆசிகளும் கூறினேன்.



சீனாவுக்கு மாவோ கிடைத்த மாதிரி அப்துல் கலாம் போன்றோர் மாறி இருந்திருந்தால் ஒரு வேளை நம் நாட்டிலும் கிராமங்கள் எங்கிலும் நோய்களும் பிணிகளும் இல்லாது தீர்ந்து போயிருந்திருக்கலாம். எல்லா வைத்திய உதவிகளுமே நகர்புறம் சார்ந்தே இருக்கின்றன.

போய் வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது பாமர மக்களுக்கு.ஏதாவது ஒரு தொழில் வல்லவர்கள் அடங்கிய துறையாவது இந்த நாட்டில் ஒழுங்கமைவுடன் இருந்தால் அதைப் பார்த்து மற்ற துறைகளும் கற்று, அனுபவப் பட்டு ஒரு வேளை வளர்ச்சி அடையலாம்... ஆனால் இங்கு எல்லாத் துறைகளுமே ஒரே மாதிரி புரையோடியே கிடக்கின்றன.

எனவே மருத்துவம் பற்றி மட்டுமே கவலைப்பட்டு புண்ணியமில்லை. ஆனால் மருத்துவம் பற்றி கவலைப்பட்டே ஆக வேண்டும் ஏன் எனில் உயிர் காக்கும், பிணி போக்கும் உன்னத துறை என்பதால்.

காவல் துறை , மருத்துவத் துறை, அரசியல், ஆட்சி, பத்திரிகை, சட்டம் நீதி நிர்வாகம் , ஆசிரியர்,பொறியாளர் இப்படி இந்தத் துறை எல்லாம் நாட்டமை உள்ள நாட்டை கட்டமைவிக்க வேண்டிய துறைகள்/ ஆமாம் ஆனால் இவை எதுவுமே ஒழுங்காக இல்லை.

இதில் எந்த துறையாவது ஒரு துறை நன்றாக அமைந்தால் கூட போதும் நாடு முன்னேறலாம். மேலும் மேலும். மருத்துவத் துறை சிறந்து இருந்தால் நாட்டில் இந்தளவு பிணி பல இருந்திருக்காது. அதனுடையை தொடர்புடைய துறைகள் யாவும் வணிக மயம் அடைந்திருக்காது.

மேட்டூர் மாவட்ட மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த பல கிராமப்புறம் சார்ந்த மக்கள் 24 பேர் கண் பார்வை போன கதை ஒரு மருத்துவத் துறை சான்று.

மருத்துவம் என்பது ஒரு சேவை. தொழில் அல்ல. சாகப் போகும் நிறைய மனித உயிர்கள் நிறைய மடிந்து போகின்றன உரிய நேரத்தில் மருத்துவரும் மருத்துவ உதவிகளும் கிடைக்கப் பெறாததால்.

கோடிக்கணக்கில் மருத்துவப் படிப்பு விற்பனைக்கு விற்கப்படும் நாட்டில் இதை எல்லாம் எதிர்பார்ப்பதும் நமது அறியாமையே.




மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஒரு முறை ஒரு காவல்துறை சார்ந்த இளைஞர் ஒருவரின் தங்கையின் பிரசவ நேரத்தில் மருத்துவர்கள் ஒத்துழைக்க மறுத்து சேலம் கொண்டு செல்லுங்கள் எனச் சொன்ன காலக் கட்டத்தில் மற்றொரு பத்திரிகை நண்பர் அந்த உரிய நேரத்தில் என்னால் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்களை உரிய முறையில் பேசி அந்த பிரசவத்தை நல்ல முறையில் நடக்க ஏற்பாடு செய்தார். அப்போதே அந்த மருத்துவ மனையில் எப்படி என நாமெல்லாம் அறிந்தது. அது இப்போது 24  பேரின் அதுவும் வயது முதிர்வான பெண்களின் கண்பார்வையோடு பறி போயிருக்கிறது.

ஒரு குடையின் கீழ் மருத்துவம் என்பது ஒரு சுரண்டல் தொழிலாகிவிட்டது. ஒரு மருந்துக்கடை எவ்வளவு வியாபரம் செய்திருக்கிறது எனப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் இந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை.

அடியேனும் இப்போது மருத்துவக் கல்வி சார்ந்த தொழில் பணி அல்லது சேவையில் இருப்பதால் பல பள்ளிகளுக்கும், பல நிறுவனங்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எம்மால் ஆன சேவையை செய்ய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பது என்ற செய்தியே இந்த உலக மருத்துவ தினத்தில் உங்கள் அனைவரோடும் நான் பகிர்ந்து கொள்ளும் செய்தியாகும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. எந்த மருத்துவனும் தன்னை கடவுளாக எண்ணிக்கொள்வதில்லை.நோயாளியின் கண்ணுக்கு மருத்துவன் தெய்வம் ஆகத் தெரிகின்றான்.அவனே இறந்துவிட்டால் அதே மருத்துவன் கொலைகாரன் ஆகத்தெரிகின்றான்.

    ReplyDelete
    Replies
    1. well said soundar rajan. Real truth and perfectly correct what you shared. thanks for your feedback on this post. vanakkam.please keep contact.

      Delete