Thursday, September 26, 2019

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: கவிஞர் தணிகை

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: கவிஞர் தணிகை
Image result for nenjamundu nermaiyundu odu raja


சிவகார்த்திகேயன் தயாரித்த ஒரு நல்ல படம். இது ஜுன் 14 அன்று வெளியிடப்பட்டு காற்றோடு காற்றாக போய்விட்டது. கடுகு என்று ஒரு படம் வந்ததே உங்களுக்கு எங்கே நினைவிருக்கப் போகிறது...அது புலிவேசம் என்ற கருத்துருக் கொண்டு வந்த படம் அது


அதே போல இதுவும் ஒரு நல்ல படம் ஆனால் அதை விட நல்ல கதை என்றே சொல்ல வேண்டும். பொது இடத்தில் ஒரு வன்முறை அல்லது ஒரு அசம்பாவிதம் அல்லது அநியாயம் நிகழும்போது எவருமே அதை தட்டிக் கேட்க வருவதில்லையே எல்லாமே செல்பி எடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சப்புக் கொட்டிக் கொண்டே போய் விடுகிறார்களே என்ற ஆதங்கத்தையும்

அப்படி நடக்கும் அநியாயத்தை வெளிபடுத்த முனையும் சமுதாய நலம் சார்ந்த மனிதரை எப்படி வீழ்த்தி விடுகிறார்கள் என்பதுவும் படம். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம்.

ரியோ ராஜ் தொலைக்காட்சி தொடர் நடிகர் சத்தமில்லாமல் அடக்கமாக அலட்டல் இல்லாமல் நடிக்கிறோம் என்று தெரியாமல் நன்றாகவே நடித்திருக்கிறார் தனது நண்பராக‌ விக்னேஷ் காந்த் என்னும் நடிகருடன். இதில் ராதாரவி பத்திரிகை நிருபராக இருக்கும் தன் மகனை இழந்த அப்பா மற்றும் கதையை நகர்த்தும் முக்கிய பாத்திரம்.

மயில்சாமி, நாஞ்சில் சம்பத் போன்ற துணை பாத்திரங்களுடன்  விவேக் ப்ரசன்னா அடுத்த சத்யராஜாக வலம் வரலாம்.

இந்தப் படம் இன்றையத் தேவை ஆனால் இது அவ்வளவு சென்றடைந்ததா என்றே சொல்ல முடியாது.
தெரிந்தவர் பாருங்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment