Tuesday, September 24, 2019

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, உலக மகாப் புளுகு :கவிஞர் தணிகை.

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, உலக மகாப் புளுகு எது என்றால்
அது மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டில் இந்தியாவில் யாரும்
வெளியிடத்தில் கழிப்பதே இல்லை என்பதை அமெரிக்காவில் அறிவித்ததுதான்
இப்போது உலகுதான் சுருங்கிவிட்டதே...யார் எங்கே சொன்னால்தான் என்ன‌
தெரியாமலா போய்விடும்?

கலாம் 2020ல் இந்தியா ஒரு நல்லரசாக மாறி விடும் என்ற கனவுகாலத்தின் கனத்த பாதங்களின் முன்
கலைந்து சுக்கு நூறாகிப் போனது அதை உறுதிப்படுத்த  இன்னும் 3 மாதங்கள் மட்டுமே
பாக்கி.
Image result for elephant crushes small egg

Image result for universal lie
இந்நிலையில் ரஷியாவுக்கு கடன் 72000 கோடி கடன் கொடுக்குமளவு
இந்தியா வளர்ந்து விட்டதாக வெளிநாட்டில் படியளப்பதும்
இங்கே விவசாயம் நலிந்து போவதும், படித்த இளைஞர்க்கு வேலைவாய்ப்பே
இல்லாமல் போவதுமாக....

நடப்பதையும் நடந்ததையும் மட்டுமே சொல்லி இருக்கிறேன்
இதில் எனது சொந்தக் கருத்து எதுவுமே இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு: தூய்மைப் பாரதத் திட்டத்தில் நோடல் ஆபிசராக பணிபுரிந்தவன்
என்ற உரிமையிலும், அனுபவத்திலும் இதை சொல்லி இருக்கிறேன்.

No comments:

Post a Comment