Thursday, September 12, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 3 மறக்க முடியுமா மணிமாறன் உன்னை: கவிஞர் தணிகை


மறக்க முடியுமா மணிமாறன் உன்னை: கவிஞர் தணிகை

நீ எனக்கொரு சகோதரனாய் நண்பனாய் சீனியராய் எல்லாம் இருந்தாய்..உனக்கும் எனக்கும் இடையே நம்மிடம் ஒரு நாகரீகமான உறவு நட்பையும் மீறி இருந்தது. அதை வெறும் ஒரு பெயர்ச் சொல்லி(ல்) குறிப்பிட முடியாது.
Image result for good friend

மணிமாறனை அவர்கள் வீட்டில் ராஜா என்றுதான் கூப்பிட்டதாக நினைவு. 1979 முதல் 1997 வரை வந்த இந்த உறவு அதன் பின் ஏனோ விடுபட்டுப் போயிருக்கிறது. இப்போது அவர் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர். எனக்கு அவர் ஒரு ஆண்டு மூத்தவராக இருந்து எங்கள் படிப்பில் ஆனால் வேறொரு பிரிவில் இருந்து  படித்து முடித்து வேலை  வாய்ப்பு மையம் வழியாக அப்போதைய சேரன் போக்குவரத்துக் கழகத்தில் பணியமர்ந்தார். அவரது அலுவலக சிறப்பிதழ்களில் கூட என்னிடம் ஒரு கவிதையைக் கேட்டு வாங்கி  வெளியிடக் காரணமாகி இருந்தார்.

அவரது திருமணத்துக்கு நானோ அவர் எனது திருமணத்துக்கோ வர வாய்ப்பில்லாமல் காலம் செய்திருந்தது. அவரது துணைவியாரும் அவர் காட்டிய அதே அன்புடன் அவர்கள் வீடு செல்லும்போதெல்லாம் என்னிடம் நடந்து கொண்டதும் அவரது தாய் தந்தை தங்கை தம்பி அனைவருமே என்னை ஒரு வேண்டப்பட்டவராக வைத்துக் கொள்ள இவர் அப்படி என்னதான் அவர்களிடம் சொல்லி என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்திருப்பார் என்றுதான் தெரியவில்லை.

நான் எனது சொந்த வீட்டுக்கு போவது போல அவர்கள் வீட்டுக்கும் போவேன் அப்போது அவர்கள் சிங்கா நல்லூரில் நந்தா நகர் என்ற  இடத்தில்  இருந்தனர். முதல் முறை அவர்கள் வீட்டை தேடிக் கண்டுபிடித்துச் சென்றேன். அது நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது. அதன் பின் பல முறை சென்றேன். எப்போதுமே அவர் அன்பு அப்படியே இருந்தது
Image result for good friend
அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி இருக்கிறார். அவருக்கு என எங்கள் வீட்டில் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டு (பிரத்யோகமாக என்ற வார்த்தையை தவிர்க்க முனைந்திருக்கிறேன்) எங்கள் இருவரையும் மீன் வளத்துறைக்கு அனுப்பி  புதிதாக மீன்கள் வாங்கி வந்து அவருக்கு உண்ண செய்த நிகழ்வு இன்றும் இரசிக்கத் தக்கதாகவே இருக்கிறது.

அவர் ஈரோட்டில் பணியமர்ந்த போது ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கும் அவர் அழைக்க நான் சென்றிருந்தேன். சில பெண்கள் ....எங்களுக்கு தனிச் சிறப்புடன் பஜ்ஜி இதற்கு சரியான தமிழ் வார்த்தை வாழைக்காய்  பலகாரம் என்பது கூட சரியாக இல்லையே சரி ....வாழைக்காய் சீவலுக்குப் பதிலாக  அதில் ஒரு தேங்காய் ஓட்டை வைத்தும் விளையாடியது நினைவிருக்கிறது இப்படி சாப்பிடும் பொருள்களில் கூட விளையாட முடியும் என்பதை நான் அங்கு தெரிந்து கொண்டேன்.

எதிர்பாராது அந்தப் பலகாரத்தில் இருந்த தேங்காய் ஓட்டை நாங்கள் கடிக்க அதைப்பார்த்த அந்தப் பெண்கள் சிரி சிரி என சிரிக்க மணிமாறனுக்கு வந்ததே கோபம் அதை அவரிடம் அந்தக் கோபத்தை அன்று மட்டுமே பார்த்தேன். மற்றபடி மணிமாறனுக்கு  எப்போதும் சிரித்த முகமே எனக்கு  பரிச்சயம். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

நான் விளையாட்டு அறையில் உதவியாளனாக இருந்து பகுதி நேர வேலை கல்லூரி நிர்வாகத்தில் பார்த்த போது அவர் நூலகத்திற்கு உதவியாளராக இருந்தார். அப்போது அவர்  மூன்றாம் ஆண்டு. நான் இரண்டாம் ஆண்டு.

 நாங்கள் எப்படி அறிமுகம் ஆனோம் என்பது கூட சரியாக நினைவில் இல்லை. சரியான  சீனியராக அவர் இருந்தார். என்னை தவறான வழியில் மூன்றாம் ஆண்டு சீனியர்கள் தங்கள் சுயநலத்துடன் வழிகாட்டி சுருக்கெழுத்தை short hand course along with all theory subjects and not selecting banking subject with a wrong selection..தேர்ந்தெடு என ஆசிரியர்களும் வழிகாட்டி திருப்பு முனையை ஏற்படுத்தி அதனால் விளைந்த மோசமான விளைவுகள் எல்லாம் வாழ்வெலாம் பேசப்பட வேண்டியது தொடர்ந்து வருவது. ஆனால் இவருக்கும் அதற்கும் எந்த பழியும் இல்லை.Image result for good friend

முதலாண்டில் ஒரு மனப்போராட்டத்தின் போதுகல்லூரியில் நடந்த ஒரு சச்சரவில்   எனக்கு ஆறுதலாக இருந்து கிணத்துக் கடவில் உள்ள அவர்களது தாத்தா பாட்டி அவர்கள் மொழியில் அப்பத்தா அம்மாச்சி வீட்டில் கூட தங்கி அதன் பின் சொந்த ஊருக்கு திரும்பி வர உதவிகள் செய்தார். அவருடைய நண்பர் ஜோசப் கிணத்துக் கடவில் ஒரு கிறித்தவ அனாதை ஆசிரமத்தில் செல்வாக்குடன் வளர்ந்த இளவரசன் என்பதும் அவரும் அப்போதே கல்லூரிக்கும் கூட தனது சட்டையில் ரோஜா வைத்துக் கொண்டு வருவதும் இன்றும் நினைவில். மேலும் அவர் மின்னியல் படிப்பில் இருந்தார் என்பது நினைவிலிருக்கிறது.

அவர் அப்போதே இருந்தால் 18 அல்லது 19 வயது கூட இல்லாதபோதே தலையெங்கும் முடியின்றி சொட்டைத்தலையுடன் தான் இருப்பார். ஆனால் அது பற்றி எல்லாம் அவர் அலட்டிக் கொண்டதே இல்லை. ஏன் எனில் அவர் ஒரு ஜென்டில் மேன் எனச் சொல்லப்பட வேண்டிய அரிய கனவான். நீட்டாக ட்ரஸ் செய்து கொள்வார். அவர் பேச்சில் என்றுமே ஒரு முதிர்ச்சி இருக்கும். என்னிடம் எதனால் அப்படி பிரியமாக இருந்தார் என்றே எனக்கும் தெரியவில்லை.
Image result for good friend
எனது சகோதரி ஒருவரின் திருமணம் தாரமங்களத்தில் நடந்தபோது ஒரு நண்பர்கள் பட்டாளமே வந்து அதில் கலந்து கொண்டது. அதில் இவரும் வந்திருந்தார் நாம் முன்பு சொன்ன குகனும்  , செம்பண்ணனும், இன்னும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்று மணத்துக்கு முன் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கும் கூட சென்றிருந்தோம் தாரமங்களத்தில் அப்போதிருந்த கார்த்திகேயன் தியேட்டரில்.

அதன் பின் குழந்தைகள் எல்லாம் வந்த பின்னே அவர் கோவையில் உள்ள வேறொரு ஊருக்கு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்பதை அவர்கள் வீட்டுக்கு வழக்கம்போல எனக்குத் திருமணமான பின்னே ஜி.டி. தாமோதரன் இன்ஸ்டியூட்டுக்கு ஒரு பயிற்சிப் பட்டறைக்கு பல்கலைக் கழக மானியக்குழுவின் நிகழ்ச்சிக்கு  சென்றிருந்தபோது அவரை வழக்கம்போல் அவரது வீட்டுக்கு சென்றபோது அறிந்தேன். மிகவும் சோர்வடைந்ததாலும் அது மிக இரவு நேரமாகிவிட்டதாலும் அவரைப்பார்க்க அவரது இருப்பிடம் செல்லாமலே வந்து விட்டேன்
Related image
ஏற்கெனவே 1997 என நினைக்கிறேன் கோவையில் உள்ள திவான் பகதூர் சாலையில் உள்ள தனிஷ்க் கடைக்கு அப்போது சேலத்தில் அது திறக்கப்படவில்லை. கோவையில் தான் இருந்தது. அங்கு சென்ற நான் அவரது சந்திப்பிற்கான நேரமின்றி திரும்பி வந்துவிட்டேன் அது முதல் அவரது வாழ்வும் எனது வாழ்வும் தனியாகிப் போனது.

என்றென்றும் அந்த அன்புக்கு நன்றியறிதலுடனே நான் வாழ்ந்து வருகிறேன் ஆனால் அவை பற்றி அவர் அறியாதிருக்கவும் கூடும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment