Sunday, September 15, 2019

பேரறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு: கவிஞர் தணிகை

பேரறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு: கவிஞர் தணிகை


Image result for anna birthday chief minister of tamil nadu

இன்னும் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கூடிய மக்கள் வெள்ளத்தின் உலக  சாதனையை எவராலும் விஞ்ச முடியவில்லை.  40 ஆண்டுகள் ஆனபின்னும் பிறந்தாலும் இவர் போல என பேர் சொல்ல வேண்டும் இவர் தான் என ஊர் சொல்ல வேண்டும். அண்ணா இந்த சாதனைகளுக்கெல்லாம் முற்றிலும் தகுதியனவர்.



பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வர் ஆன பின் வேம்படிதாளம் அரசு மருத்துவமனைக்கு வந்து ஒரு மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார்.1967/68 அதன் புகைப்படம் இன்றும்  அதன் முக்கிய இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் நாம் அந்தக் காலத்துக்கு செல்ல முடிகிறது.

  அடியேன் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அந்த இடத்திற்கு தொடர்புடையவனாகி இருக்கிறேன்.

 முதன் முதலாக அந்த அரசு மருத்துவ மனைக்கு சென்ற போது அதன்   தலைமை மருத்துவர் வேண்டா விருப்பாக இருந்தார். காரணம் சேவை செய்ய சென்றவர்கள் சரியாக செயல்படவில்லை என்பதே.

அதை சீர் செய்யவே வந்திருக்கிறேன் எனச் சொல்லி இந்த கடந்த  3 ஆண்டு காலத்தில் மிகவும் சீரிய முயற்சியுடன் இயங்கி வேண்டா விருப்பாக இருந்த அதே தலைமை மருத்துவரால் மெச்சி மகிழ்ந்து வாரத்தில் இரு நாள் இயங்கி வந்த பல் மருத்துவத்திற்கான பிரிவை அவருடைய உதவி மற்றும் இணை சுகாதார இயக்குனரகம் ஆகியவற்றின் ஆதரவுடன் தினமும் இயங்கும் வண்ணம் மாற்றி அமைத்து சேவைகள் சென்று சேர ஒரு கருவியாக இருந்திருக்கிறேன்

இதற்காக இணை சுகாதார இயக்குனரகம் ஆணை வழங்கிட வேம்படிதாள தலமை மருத்துவரும் எங்கள் கல்லூரியின் முதல்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு மேற்கொண்டு இருக்கின்றனர். எங்கள் கல்லூரி இதற்கான அத்துணை பொருளாதார உதவிகளையும் செய்ய அரசு அதற்குண்டான பங்களிப்பை செய்து வர இரு கை ஓசையாகி இருக்கிறது இங்கொரு சேவை.

இது ஒரு சத்தமில்லா சாதனைதான். ஏன் எனில் பல் வலியோடு வரும் நோயாளிகளுக்கு வாரம் இரண்டு நாள் போதாது அவ்வப்போது அன்றைய தினமே நோய் தீர்வு செய்யப்படுவதுதான் சரியாக இருக்கும் என்ற பொதுமக்களுக்கான சேவை மனப்பான்மையோடு இந்த செயல்பாடு சேவையாக செய்யப்பட்டு வருகிறது.

இங்கு பணி புரிய வரும் மருத்துவர்களிடம் நான் உவந்து சொல்வதுண்டு இதை அறிஞர் அண்ணா திறப்பு விழா செய்திருக்கிறார். என. இது மட்டுமல்ல  அப்போது மத்திய மந்திரியாக இருந்த  மரகதம் சந்திரசேகர் 1953ல்  தற்போது இயங்கி வரும் சித்த மருத்துவ பிரிவுக் கட்டடத்துக்கு வந்து திறப்பு விழா செய்து சென்றிருக்கிறார்.

அதை அடுத்து அறிஞர் அண்ணா அளவு எவருமே பெரிய பேச்சாளராக இருக்க வழியில்லை. இருந்தாலும் நானும் ஒரு நல்ல பேச்சாளர் என்ற  பேச்சு இருக்கிறது அது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவையில் பேசுமளவு எனைக் கொண்டு சேர்க்குமளவும் காலமும் வாழ்வும் செய்திருக்கிறது. அவர் கன்னிமாரா நூல்கள் அனைத்தையும் படித்து முடித்ததாக சொல்வார், நானும் எங்கள் ஊரில் உள்ள இரு கிளை நூலகம் நூல்கள் படித்து அதன் பின் மற்றொரு தனியார் ஆலையின் மனமகிழ் மன்ற நூல் நிலையத்தின் நூல்களை எல்லாம் படித்து முடித்தேன். அதன் பின் சேலம் மைய நூலகம் சென்றேன். பெரியார் படிப்பகமும் சென்றேன் தொட்டுக் கொள்ள மட்டும்.
ஒரு முறை தலைவாசல் அரட்டை அரங்க தேர்வின் நிகழ்வில் உதயம் ராம் என்னையும் என்னுடன் இருந்த மற்றொரு தம்பியையும் விளையாட்டாக என்ன அண்ணாவும் கலைஞருமாக என என்னை அறிஞர் அண்ணா எனக் குறிப்பிட்டது யாவும் சுவைபடப் பகிரத்தக்கதாகவே உள்ளது.

அண்ணா ஓரிவில் என்ற நாடகத்தை ஒர் இரவில் எழுதி முடித்தார் அது சினிமாவாகவும் எடுக்கப்பட்டது அடியேனும் அளவுக்கு மிஞ்சினால் என்னும் சுமார் 30 பக்க நூலை ஒரே இரவில் எழுதி முடித்து அப்போது என்னுடன் தொடர்பிலிருந்த இரு நண்பர்களுக்கு காட்டினேன்


அறிஞர் அண்ணா கலாம் படித்த பள்ளிக்கு எப்படி வரவழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டார் என கலாமே தமது நூல் குறிப்பில் குறிப்பிடுகிறார் அது ஒரு சுவையான நிகழ்வு. அந்த கலாமிடம் கூட எனக்கு தொடர்பிருந்ததும் அந்தக் கலாமும் அடியேனும் கூட அறிஞர் அண்ணாவை பின் பற்றுவாரே. .மேலும் காமராசர் மட்டுமல்ல அறிஞர் அண்ணாவும் மிகவும் எளிமையானவரே. சுயநலம் இல்லாதவரே அவர் அவர் குடும்பத்துக்கு எல்லாம் எதையும் சேர்த்தவர் அல்ல. அவருக்கு எனக் குழந்தையே இல்லை. தத்து எடுத்து வளர்த்தவரே டாக்டர் பரிமளம் போன்றோர். அவரது மனைவி ராணி அம்மையாருக்கு முன்னாள் முதல்வர் ஜெ உதவியதாக வந்த செய்திகள் இன்றும் நினைவில்.

பேரறிஞர் நல்ல மனிதர். பானுமதி பற்றி ஊடகம் கேள்வி எழுப்பியபோது கூட உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக நயம்பட அவள் ஒன்றும் பத்தினியுமல்ல நானொன்றும் புத்தனுமல்ல என்று கூறிய கதையை உலகே பேசும்.
Image result for anna birthday chief minister of tamil nadu
ஆனால் கலைஞரின் அரசியல் சாகசம் அவரையும் பீடித்து விட்டது. கண்ணதாசனும் கலைஞர் கருணாநிதியும் கட்சிப் பணி செய்து வென்ற ஒரு தேர்தல் பற்றி தான் அண்ணாவிடம் பாராட்டு பெற பொதுக்கூட்டத்தில் தான் விலைக்கு வாங்கிக் கொடுத்த மோதிரத்தை அண்ணாவிடம் இருந்து பரிசாகப் பெற்றதாக வெளிக்காட்டிக் கொண்டு பேர் வாங்கிய கதையை பற்றி கண்ண தாசன் கேட்க அறிஞர் அண்ணாவோ நீயும் வாங்கிக் கொடுத்திருந்தால் உனக்கும் மேடையில் பரிசாக கொடுத்திருப்பேன் என சமாதானப்படுத்தி சமாளித்ததாக வனவாசம் மனவாசம் நூல் குறிப்புகள் சொல்கின்றன.

அந்த அரசியல் சாகசம்  பாசாங்கு மக்களுக்கும் பிடித்துப் போக  அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரைத் தேவைப்பட நல்லவர் அரசியலில் நுழைய முடியாத போக்கும் வித்தை தெரிந்தவர் மட்டுமே கோலோச்சும் போக்கும் காணப்படுகிறது சுயநலம் மட்டுமே குடும்பம் மட்டுமே தலைமை ஏற்றிருக்க அதிலிருந்து தமிழக அரசியல் தலைவிதி அண்ணாவுக்கும் பின் கலைஞர் கை வர எம்.ஜி.ஆர் உதவ அதன் பின் அதே எம்.ஜி.ஆர்  மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் என்று பாடி விமர்சித்து அரசியலுக்கு வந்து அ.இ.அ.தி.மு.கவை அரியணை ஏற்றி வைத்தார்.

இன்று ப்ளக்ஸ் தலையில் விழுந்து சுபஸ்ரீ மரணத்துக்கு ஸ்டாலின் குரல் கொடுப்பது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வரவேற்கத்தக்கதே எனினும்  மது ஆலைகள் எல்லாம் இவர்களிடம் சொந்தமாக இருக்கிறது அவர்கள் போன்றோர்தான் டாஸ்மாக்கிற்கே மதுவை விநியோகம் செய்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் இருப்பதை  மறுப்பதற்கில்லை.

கலைஞருக்கும் பின் ஸ்டாலின் ஸ்டாலினுக்கும் பின் உதயநிதி என்றே வளரும் கட்சி....இப்போது ஏனோ அழகிரியின் குரல் அடங்கி இருக்கிறது இந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றியும் பெற்று விட்டது. ஆனால் அதனால் அதற்கு எந்த வித பெரும்பயனும் இல்லாமல்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Related image
 எல்லோரும் இன்று அண்ணாவைப் பற்றி நினைக்கிறார் எனவே நானும் சொல்ல வேண்டுமல்லவா எனக்கும் பேரறிஞர் பிடித்தமானவர்தானே...மயிலும், காகமும் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு இன்று அமித்ஷாவும் அண்ணாவும் என நினைத்துப் பார்க்கிறேன் இன்றும் பொருந்த...

No comments:

Post a Comment