Friday, March 22, 2019

ஊடகங்களின் தகிடு தத்தம்: கவிஞர் தணிகை

ஊடகங்களின் தகிடு தத்தம்: கவிஞர் தணிகை

Image result for world water day theme 2019


1996 என நினைக்கிறேன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள டான் போஸ்கோ இன்ஸ்டியூட்டில் இந்து என் ராம், ஆசியா நெட் சசிகுமார், இந்து இப்போதிருக்கும் பன்னீர்செல்வம் இன்ன பிற ஊடக நண்பர்களுடன் அப்ப்போது ஞானியும் இருந்தார். ஊடகங்களின்  சுரண்டல்  என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தேன். அதன் பிறகும் அங்கு வேறு ஒரு நிகழ்வுக்கு சென்றிந்த நினைவு உண்டு.

முதல் முறை சென்ற பின் வந்து திருமணமானது\
இரண்டாம் முறை சென்ற பின் மகன் பிறந்திருந்தான்

அப்படியானால் அடிக்கடி வாருங்களேன் என்றார் அந்த நிறுவனத் தலைவர்.

இப்போது நான் சொல்ல முனைவது:

தேர்தல் நாட்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவுக்கும் முன்பே வாட்ஸ் ஆப்பில் தேர்தல் தேதி என இருமுறை போட்டிருந்தார்கள் என்னைப்போல முட்டாள்களும், ஏமாளிகளும் அதை நம்பி அடுத்தவர்க்கும் சொல்லியதை எண்ணி வெட்கமுற வேண்டியதாயிற்று.

பொள்ளாட்சி பொல்லா(ர்)ட்சி சம்பவத்தில் உள் சென்ற  4 பேரும்  பெயிலில்  வெளி வந்து விட்டனர் என்றும் சொன்னார்கள் ஆனால் அப்போதும் அவர்கள் உள் தாம் இருந்தனர் என்பது அடுத்த சில நாட்கள் செய்தி மூலம் தெரிந்தது..

வேண்டுமென்றே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் செய்தியாக கொட்டை எழுத்தில் உள்சென்று கவனித்தால் அந்த செய்தியே இருப்பதில்லை...அதைச் சென்று படிக்கத் தூண்டிட பொய்கள் புனைசுருட்டுகள் போலிகளாக....

ஒரு வரி செய்தி இருப்பதை ஒருப்பக்கத்துக்கும் பழைய செய்தியை இட்டு நிரப்பி கடைசியில் ஒரு வரி சொல்லி இருப்பர் தலைப்பில் சொன்னதையே...

 இப்படிப்பட்ட வீடியோக்கள் ஏராளம் உண்டு...

இப்போது ஊடகங்களின் போட்டி பொறாமையிடையே தக்கவைக்க விளம்பரங்கள் மற்றும் கையூட்டு கேட்டு நிறுவனங்களின் வாசலில் சென்று தவம் கிடக்கும் ஊடகவியலாளர்கள் நிறைய உண்டு....

செய்தியை பணத்துக்காக மாற்றி  போடுவதும் இல்லாமல் செய்வதும் நல்ல செய்தியைக் கூட பணம் தராததால் போடாமல்விடுவதும்....

செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள், தணிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் , அரசியல்வாதிகள் இவர்கள் எல்லாம் உண்மையாக நல்லவராக சமூகப் பற்றாளர்களாக இருந்தால் உலக தண்ணீர் தினம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய அளவில் அனைவர்க்கும் குடிக்கத் தண்ணீராவது கிடைத்திருக்கும்....
Image result for world water day theme 2019
எல்லா  உள்ளீடற்ற போலிகளையும் உருவாக்கித் தந்தவர்கள் இந்த பொறுப்பற்றவர்கள்தானே...

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. 'தகிடுதத்தம்' மிகவும் பொருத்தமான வார்த்தை.

    ReplyDelete
  2. thanks for your feedback on this post. vanakkam.please keep contact

    ReplyDelete