Thursday, April 19, 2018

அவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.

 அவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.

Image result for asibaa kasmir raped 8 year old child



மேட்டூர் பயணிகள் ரயிலில் ஏறி அமர சிவப்பு நிற ஈரலைத் துண்டையும் இரு தோள்களில் மாட்டும் பையையும் வைத்து விட்டு வெளியில் வந்த கொஞ்ச நேரத்தில் சீட் மேல் போட்டிருந்த துண்டைக் காணோம்.

அப்போதுதான் அந்த கடைசிக் கம்பார்ட்மென்டில் ஏறியிருந்த 3 பெருங்கூட்டுப் பெண்களில் இருவர் படுத்துக் கொண்டிருந்தனர் ரயில் சீட்களில், இரண்டு சிறுவர் சிறுமிகள்...ஆண் ஒருவர்...

அவர்களைக் கேட்டால் அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என எல்லாருமே ஒரே  மாதிரி குரலில் கூறினர்....நான் விடாமல் தீவிரமாகத் தேட ஆரம்பித்து வாய்க்குள் முணகலாக திட்ட ஆரம்பித்த நேரத்தில் ஆரம்பத்தில் பார்க்கவே இல்லை, நாங்கள் எடுக்கவே இல்லை என்றவர்கள்...என்ன தோன்றியதோ எங்கள் துண்டு மாதிரியே இருந்தது என எடுத்து வைத்துக் கொண்டோம் என பையிலிருந்த துண்டை எடுத்துக் கொடுத்தார்கள்...உடனே அதை இன்று துவைக்க ஊறவைத்திருக்கிறேன். நாளைதான் அதை துவைக்க வேண்டும்.

அந்த குடும்பத்து சிறுவன் ஓடி ஆடிக் கொண்டிருந்தான், நல்ல வேளை விழவில்லை எங்கும். ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே படியருகே எல்லாம் சென்றான் நான் என்னையறியாமல் கத்தி எச்சரிக்கை செய்தேன்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் அந்த சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள் அந்த வாந்தியை நீர் கொண்டு கழுவி விடாமல் ரயிலின் இரண்டு ஓய்வறைகளிலுமே அசுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள்..அதைப் பற்றி எந்தக்கவலையுமே சுத்தப்படுத்தல் பற்றி அவர்களுக்கு இல்லை.

அவர்கள் பேச்சும், நடையும், ஏன் இன்னும் இவர்கள் இப்படியே இருக்கிறார்கள் ஏன் இவர்களுக்கு தூய்மை பற்றி சிந்தனை இன்னும் வரவே இல்லை... இந்த திருட்டுக் குணம் அல்லது பொய் சொல்லும் போக்கு எல்லாம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது...

நான் இவர்களுக்காக பல்லாண்டு காலம் சேவை செய்தேன்...எல்லாரும் செய்திருக்கிறார்கள்...


Image result for asibaa kasmir raped 8 year old child

அதே போல அந்த காஷ்மீரக் காடுகளில் திர்ந்த அசிபா கதை...கால்கள் முறிக்கப்ப்ட்டு மாத்திரை கொடுக்கப்பட்டு, முதுகெலும்பு ஒடிக்கப்பட்டு, தலையில் கற்களை போட்டு அந்த உடலை தூக்கி எறிந்து இறுதியாக நல்லடக்கத்துக்கும் வழி தராமல் துரத்தி அடித்து...தேசியக் கொடியை பிடித்து...காவலர்கள் என்று போர்வை போர்த்தி,...அரசு ஊழியர்கள் எனப் பாசாங்கு செய்து இந்து என்ற மதமாச்சரியம் செய்து....விலங்கையும் விட கேவலமான பொல்லாங்கு செய்து கோவில் இவர்களுக்கு எல்லாம் ஒரு கேடு, சாமி ஒரு பாடு என...இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் இப்படியே இருக்கிறார்கள்?

தினசரிகளில் ஒன்றிரண்டு செய்திகளாவது தினமும்...சொந்த தாத்தாவே பேத்தியை 6 வயது பேத்தியை என்றெல்லாம். அந்தக் கிழவனுக்கும் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு தண்டனையாம்..
Image result for asibaa kasmir raped 8 year old child



என்னடா நடக்குது நாட்டுல? இது நாடா வெறும் காடா? நாதி இல்லையாடா கேட்க என்னடா ஒங்களுக்கு மதம் போட்டுக் கிழிக்குது...

வேலை படிப்பு எல்லாவற்றிலும் இட வசதி...இப்படியாக 70 ஆண்டுக்கும் மேலாக செய்தும்...ஏன் இவர்கள் எல்லாம் இப்படியே இருக்கிறார்கள்...ஆய்வு செய்ய வேண்டிய நிலை...ஐநாவில் இதுவரை இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் எழுபத்தி ஏழாயிரம் பேர் என்று கணக்கு கொடுத்துவிட்டு அந்த நபர் அழுகையை நிறுத்த முடியவில்லை என வீடியோ காண்பிக்கிறாது...பாக்கிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை எல்லாம் குற்றம் சொல்ல இந்தியாவுக்குத் தகுதி இருக்கிறதா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: