Wednesday, June 28, 2017

சூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை என் வார்த்தைகள் வளரும்....கவிஞர் தணிகை.





வீண் வார்த்தைகளால் உங்களை
யாரும் ஏமாற்ற விடாதீர்கள்.

பொன்னையும் முத்துகளையும் விட‌
அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்

தக்க வேளையில் சொன்ன சொல்
வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனி(க்குச் சமம்)

மட்டுக்கு மிஞ்சின பேச்சு
அளவற்ற தீமைகளை விளைவிக்கும்

நினைவு அரும்பும்போதே முடிவு சொல்வதே
இறை வாக்கு

வார்த்தை என்பது குறியீடு

ஞானிகளின் அறிவுரை வாழ்வளிக்கும் நீருற்று.

பொய்யர்களை விட திருடர்கள் மேலானவர்

சத்தமாகப் பேசுவது சக்தியை இழப்பது

சூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை
என்/இந்த வார்த்தைகள் வளரும்....

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment