Friday, April 29, 2016

பாரதி தாசன் : கவிஞர் தணிகை

பாரதி தாசன் : கவிஞர் தணிகை
பாரதியின் கவிதா மண்டலத்தின் தலைமை சீடர்,ஏன் பாரதிக்கே பாண்டிச்சேரியில் உதவி புரிந்தவர். ஒரே பிள்ளை மன்னர் மன்னனுக்கு வாழ்க்கைக்கு வழி செய்யாதிருந்தவர்,பாரதி தாசன் என்ற கனக சுப்புரத்தினத்துக்கு இன்று பிறந்த நாள் சிறு அசை போடல் அந்த அண்ணலுக்கு நாம் செய்யும் சமர்ப்பணமாய்.


இவரது நண்பர்தான் இவரது மகனுக்கு மன்னர் மன்னனுக்கு வானொலி நிலையத்தில் வேலை கிடைக்கச் செய்து பாரதி தாசனின் குடும்ப வாரிசு பொருளாதார சுழலில் சிக்காமல் காத்தவர்.

பாரதி தாசன் கடைசியில் சினிமா எடுக்கிறேன் பேர்வழி என ஸ்டுடியோக்களில் சிவாஜி கணேசன் போன்றோருக்காக காத்திருந்து நொந்து போனவர்.எம்.எல்.ஏ ஆக ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சரியாக கவனம் செய்யாமல் மறுமுறை தோல்வி உற்றவர்.

பாரதியை விட நிறைய நூல்களை படைத்தவர். தமிழுக்கும் அமுதென்று பேர் என்றும் இவர் பேர் சொல்லும் கவிதைப் பாடல்.
இவரின் புத்தகத்தை வீட்டு நூலகத்தில் இடம் பெறச் செய்ததே ஒரு கதை.இவர்தான் பாரதியை பாண்டிச்சேரியில் மறைத்து வெள்ளையர்களிடமிருந்து பாரதிக்கு அடைக்கலம் கொடுத்தவர்.

திடீரென பள்ளியில் இருந்து வந்த மகன் ஒரு நாள்  கேட்டான், பாரதி தாசன் கவிதைப்போட்டி என ஆனால் பாரதி, நாமக்கல் கவிஞர் தொகுதி எல்லாம் இருக்க இவருடையது இல்லை. நான் எல்லாம் என்ன கவிஞர் சிக்கனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் என உடனே செய்ய வேண்டியதாக தொகுதியை பாரதி போல நாமக்கல் கவிஞர் போல ஒரே தொகுதி என நினைத்து தேட..இவரது நூல்கள் பல பல பலப்பல என்று தெரிந்தது.

கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடத்தி வரும் பெரியார் படிப்பகத்துக்கு படை எடுத்தேன. இருக்கும் நூலை எல்லாம் எடுத்து வந்தேன். அதன் பின்னர் ஒரு தொகுப்பு நூலை வாங்கி விட்டோம் என்பது வேறு.

பதினோராம் வகுப்பு படிக்கும்போது பில்கணீயம் என்ற வடமொழி நூலை புரட்சிக் கவி என்ற தலைப்பில் இந்த புரட்சிக்கவி இவரது மொழிபெயர்ப்பில் கவிதையாய் வார்த்திருந்தார்கள். அனலுக்கும் புனலுக்கும், கக்கும் விடப் பாம்பினுக்கும் போராடி அழகியதாய் வசதியதாய் செய்து தந்தார் அவரெல்லாம் இந்நேரம் எலியாக முயலாக இருக்கின்றார்கள், ஏமாந்த காலத்தில் ஏற்றம்கொண்டோன் புலி வேடம் போடுகின்றான்..என்றெல்லாம் ஒரு நெடுங்கவிதை ...ஒப்புவித்து முதல் பரிசு ஈட்டியது இன்றும் நிழலாட...ஓடப்பர் எல்லாம் உதையப்பர் ஆகிவிட்டால் ஒப்பப்பர் என்ற இவரது வாசகம் பிரபலம்.

பீரங்கி கொண்டு பிள்ளையாரை பிளப்போம் என பெரியாரின் பிரச்சார பீரங்கியாக இருந்தவர் கடைசிவரை. சாணிக்குப் பொட்டு இட்டு சாமி என்பார் ஞாணி நீ கண்ணுறங்கு  நகைத்து நீயும் கண்ணுறங்கு என்று தாலாட்டுப் பாடியவர் அழுது கொண்ட தூங்க மறுத்த பிள்ளைக்கு..

விவேகானந்தரின் சீடர், நிவேதிதா நிவேதிதாவின் சீடர் பாரதி, பாரதியின் சீடர் பாரதி தாசன், பாரதிதாசனின் சீடர் சுரதா, பட்டுக்கோட்டை இப்படி ஒரு தலைமுறை முடிய அடுத்த தலைறையை எழுகை செய்தது இந்த சமுதாய நல விரும்பி கவிக்கூட்டம்...

தற்போது வீரமணி அணியில் பெரும் பேச்சாளராய் இருக்கும் வழக்கறிஞர் அருள் மொழியும் நானும் சேலத்துப் பாசறையில் பாரதி பாரதிதாசன் இருவரைப்பற்றி விவாதம் புரிந்தோம் ஒரு இளம் வயதில்.அனுபவம் இருந்ததா என்று தெரியாது..அவர் பாரதி தாசனை உயர்த்தியே பேச, நான் பாரதியை தூக்கிப் பிடிக்க...ஆனால் இருவரும் அப்போதும் இப்போதும் அவரவர் வழியில் இருக்கிறோம். அந்த கூட்டம் முடிந்ததும் ஒன்றாக சேர்ந்து நடந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

பாரதி ஸ்டைல் வேறு இவர் அவரது சீடராக இருந்தபோதும் இவரது ஸ்டைல் வேறு. தனித்தமிழ் விளையாடும். சீறும், வெட்டும் போராடும் இவரது எழுத்துகளில்.

பாரதி தாசனை எல்லாம் படித்தால் தன்மானம் இருக்கும், வீரம் பிறக்கும், தமிழின் தமிழன் என்ற செருக்கு மேலிடும்.புரட்சி செய்யத் தூண்டும்.

ஆனால் அந்த இன்பத்தை எல்லாம் நுகராமல் அனுபவிக்காமல் இந்த தமிழ் இளைஞர்கள் மாய்கிறார்களே என்று எண்ணினால் வருத்தமே மிஞ்சும்.

கொடுவாளை எடடா அந்தக் கொடியோர் செயல்  மிக அறவே  என மிரட்டுவார் விட்டெறிந்த வெள்ளித் தட்டோ என நிலவை உவமை சொல்வார்...

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் அளவின்றி...பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் இருந்தால்...நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் மட்டுமே பணிக்கு செல்ல முடியும். அதென்னவோ இந்த மண்ணை நேசிக்கும் புலவர்களுக்கும் சேவையாளர்களுக்கும் அது பாரதி.பாரதி தாசன் அனைவருக்குமே வறுமைத் தொடர் வளர்ந்திருக்கிறது... அது நமக்கும் கூட எனவே இங்கு முடித்துக் கொண்டு இந்த பதிவை அந்த மாபெரும் கவிஞர்க்கு அஞ்சலியாக அஞ்சல் செய்து நினைவோட்டமாக ஆக்கி விடைபெறுகிறேன் நன்றி. வணக்கம்.

அவர் எழுதிய முதல் கவிதை பிரசுரிக்கப்பட்டது: எங்கெங்கு காணிணும் சக்தியடா....அதை இளமைத் திமிரில் எங்கெங்கு காணிணும் செக்ஸேயடா...என நான் எழுதி சாடிய நினவெல்லாம் தொடர்கிறது...இந்த பதிவை நான் விட்டு விலகிய போதும் என்னுள் அவரின் நினைவு தொடர்ந்தபடியே...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment