Thursday, April 14, 2016

தமிழகத் தேர்தல் 2016. மேட்டூர் தொகுதி நிலவரம்: கவிஞர் தணிகை

தமிழகத் தேர்தல் 2016. மேட்டூர் தொகுதி நிலவரம்: கவிஞர் தணிகை



அர்த்தானரி ஈஸ்வர கவுண்டர், கே.பி.நாச்சிமுத்து,சுரேந்திரன், சுந்தராம்பாள் மாரப்பன், ஜி.கே மணி, ஸ்ரீரங்கன், கோபால் இப்போது எஸ்.ஆர். பார்த்திபன் என கட்சிகள் மாறி மாறி எம்.எல்.ஏ ஆன தொகுதி மேட்டூர் தொகுதி.

தொகுதியை சீர்திருத்தம் என்ற பேரில் சூறையாடி ஓமலூர் ரெயில்வே கிராஸ் வரை அரசு கொண்டு சென்றுள்ளது, சாதி மத சார்பாகவா என்பது எமக்குத் தெரியாது. தாரமங்களம் என்ற தொகுதியே இல்லை என்பதற்கு இது தேவலாம்.



இப்போது போட்டியே தற்போதைய எம்.எல்.ஏ மக்கள் தி.மு.க வேட்பாளர் அல்லது தி.மு.க கூட்டணி வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் நிற்கும் எஸ்.ஆர் பார்த்திபனுக்கும் செம்மலைக்கும் தான். எந்தக் கழுதையை, குதிரையை, ஜீவனை அம்மா கை காட்டி நிறுத்தினாலும் அந்தக் கட்சிக்காரர்கள் வாக்களிப்பார்கள். வேட்பாளரைப் பார்த்துத்தான் வாக்களிப்பது என்பது அவர்கள் கட்சியில் இல்லையே.அம்மாவின் கன்றுகுட்டியாக மறுபடியும் செம்மலை மேட்டூரில் எடப்பாடி பழனிசாமியின் தடையை மீறி அம்மாவின் கருணை மனம் கொண்டு...

செம்மலை, பார்த்திபன் இருவருமே சேலத்து வாசிகள்தான். ஆனால் எஸ். ஆர். பார்த்திபனுடைய தோட்டம் சாத்தப்பாடியில் உள்ளது இவர் சேலம் கேம்ப் வீட்டு நில பங்கீட்டு மக்கள் பிரச்சனை, மேட்டூர்  காவிரி ஆற்றுப் பாலம், பாலமலை மேல் சாலை வசதி போன்றவற்றில் மண்ணின் மைந்தராக பார்க்கப்படுகிறார்.

செம்மலைக்கு கட்சியை விட்டு வெளியே செல்வாக்கு பொதுமக்களிடம் இல்லைதான். ஆனால் அவர்கள் கட்சிக்காரர்கள் கண்ணை மூடிக்கொண்டு போடுவார்கள் எதுவாக இருந்தாலும்.... அது செம்மலைக்கு கூட்டலா கழித்தலா தேர்தல் சொல்லும்.

ஜி.கே.மணி பாமக வில் நின்றிருந்தால் மும்முனைப்போட்டி ஜோராக இந்த சுட்டெரிக்கும் வையிலை விட அதிகமிருந்திருக்கும். ஆனால் அவர்  நிலை அறிந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

இவர்கள் இன்னும் நாங்கள் தான் பார்க் கொண்டு வந்தோம், நாங்கள் தான் ரயில் விட்டோம் மறுபடியும், அரசுக்கல்லூரி கொண்டு வந்தோம் என்றெல்லாம் சொல்லிக் கேட்கலாம்.. ஆனால் எல்லாம் மறந்து விட்டார்கள்.

கடந்த முறையே பார்த்திபன் தே.மு.தி.கவில் நின்று அ.இ.அ.தி.முக கூட்டணி சார்பாக சுமார் 2600 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரான பா.ம.க வேட்பாளர் ஜி.கே மணியை வென்றார்.

கேநகூ, மநகூ , பி.ஜே.பி பற்றி எல்லாம் எழுதி உங்கள் நேர விரயம் வேண்டாம்.

காஞ்சனா பழனி சாமி ஈரோட்டில் ரூபாய் 100,500 எனக் கொடுத்து அ.இ.அ.தி.மு.க மேல் மநகூ சாட்சியத்தோடு தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க அவர்கள் அதை உறுதி செய்து வழக்கு தொடர்ந்தும் இருக்கிறார்கள்.



எனவே அ.இ.அ.தி.மு.க தேர்தலில் இருந்து நிற்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் கொண்டுவர வேண்டும்.


1967 அல்லது 1971 என நினைக்கிறேன் நான் 5 வயதுக்குள் இருக்கும் சிறுவன். சுரேந்திரன் என்னும் பிரஜா சோஷலிஸ்ட் மற்றும் சுயேட்சையாக நின்றும் வெற்றி பெற்ற தோழர் சுரேந்திரன் சார்பாக எங்கள் வீட்டில் கருக்கழியா புதுக்கட்டிலிருந்து 1 ரூ, 2 ரு என வாக்களிக்க கொடுக்கப்பட்டது.

அவர் மேட்டூர் தொழிலாளிகள்  ஆதரித்த மலையாளித் தந்தை நிலையில் எவர் வீட்டில் வேண்டுமானாலும் உண்ணும் வழக்கம் உள்ளவர் தொழிலாளிகளுக்காக நிறைய போராட்டங்கள், சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தவர், நல்ல பேர் பெற்றவர். கடைசியில் மகனுக்காக பணி ஒப்பந்தங்கள் சுயநலமாக பெற்றார் என்றும் கேள்வி.

அது முதல் இன்று வரை தேர்தல் ஒரு விழாதான். ஆனால் எவருமே என் போன்றோருக்கு கொடுப்பதாக வருவதுமில்லை.  தருவதுமில்லை. பக்கம் கூட எட்டிப் பார்ப்பதில்லை.

தேர்தல்  வாக்குக்கு காசு வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்பது போல ஆனால் இரண்டுமே இந்திய ஜனநாயகத்தில் குற்றம் ஆனால் குற்றமில்லை. வரும் ஆனால் வராது , கிடைக்கும் ஆனா கிடைக்காது, இருக்கும் ஆனால் இருக்காது என்பது போல...

தேர்தல் ஆணையம் இன்னும் போக வேண்டிய தூரம் மிகத் தொலைவிருக்கிறது.

எப்போதும் போல் 49 ஓ  போடச் செல்வதா நிலவும் பொருளற்ற பொருள் ஒன்றையே கூட்டிக் குவித்த ஆட்சிக்கு எதிரான வேட்பாளருக்கு எமது வாக்கை அளிப்பதா என சிந்தித்து வருகிறேன்.

கருத்துக் கணிப்பல்ல இது, ஒரு யூகம் இம்முறையும் எஸ்.ஆர் பார்த்திபனுக்கு ஒரு யோகம் இருக்கிறதோ என்று எண்ணுகிறேன். மநகூ, கேநகூ, கம்யூனிஸ்ட் கட்சிகள் சொற்ப வாக்கை பிரித்தாலும்,பிஜேபி அற்ப வாக்குகளை வாங்கி டெபாசிட் இழந்தாலும் வாக்கு பிரிவதால் செம்மலைக்கு வாய்ப்பு என்று கணிக்கலாம். ஆனால் ஓதம் எஸ்.ஆர். பார்த்திபனை ஓடத்தை கரை சேர்க்கும் என்றே நம்புகிறேன் தரையில் இழுத்து விடும் ஓடமாக அல்ல சுவாசித்து காவிரிக்கரையில் சென்று வரும் ஓடமாக..

மேட்டூர் நகர தேமுதிக இளைஞர்கள் பார்த்திபனுடன் இருக்கிறார்களா? அல்லது விஜய்காந்த் கேநகூவில் இருந்து இடம்பெற்று தேர்தல் பணி புரிகிறார்களா என்பதுதான் தெரியவில்லை..

ஏழையின் கண்ணீர்த்துளிகள்
அரசின் நாடியை அறுத்தெறியும் கூர் வேல்கள்

ஏழையின் கண்ணீரைத் துடைக்க‌
இன்னும் நிறைய கைகள் தேவை....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment