Monday, April 25, 2016

வைகோ தேர்தலில் நிற்காதது நாட்டின் மாபெரும் பிரச்சனையல்ல: கவிஞர் தணிகை

வைகோ தேர்தலில் நிற்காதது நாட்டின் மாபெரும் பிரச்சனையல்ல: கவிஞர் தணிகை




ஊடகமும், திருமாவும் சொல்லுமளவு வைகோ தேர்தலில் நிற்காதது மாபெரும் நிகழ்வல்ல...எப்போது தம் மகன் சிகரெட் விற்கலாம் அது மது போல கேடனதல்ல எனப் பேசினாரோ அப்போதே அவரது பொதுவாழ்வுக்கான தார்மீகக் கடமை முடிந்து போனது...

ஆட மாட்டாத தே....மத்தளம் சாக்கு என்றும் ஆட மாட்டாத தே.....மேடை கோணல் என்றும் ஒரு பழமொழி சொல்வார்கள்.
அது போல இவர் எதையுமே எப்போதுமே ஒரு பிடிமானமாக பற்றோடு ஒரு விடாமுயற்சியுடன் கடைசிவரை இறுதிப் பிடிப்போடு செய்தாரில்லை

சசி பெருமாள் மது விலக்கு மரணத்தின் போது  நாடெங்கும் ஒரு மாபெரும் அலை எழுப்புவது போன்று வேடிக்கை காட்டினார். அப்புறம் திசை திரும்பி மாறிப் போனார்.

கலிங்கத்துப் பட்டியில் தாயுடன் டாஸ்மாக்கை எதிர்த்தார் அதன் பின் விட்டு விட்டார்.

ஜெயலிலிதா சிறுதாவூரில் இரவு நேரத்தில் லாரிகள் உலவல்,நிலவறையில் பணம் பதுக்கல் என்றார் விட்டுவிட்டார்.

இப்போது சாதிய சதியை தி.மு.க பேரில் சார்த்தி  போட்டி இட வில்லை என்கிறார். இதில் ஏதோ உள் குத்து உள்ளது. மேலும் இவருக்கு இந்த தேர்தலில் இவர்களது இடம் என்ன எனத் தெளிவாகத்  தெரிந்து விட்டது போலும்...

மேலும் இவரின் போக்கு எப்போதும் ஒரு நிலைத்தன்மையுடன் இருப்பதில்லை.

இவர் ஏற்றுக் கொண்ட தலைமை நிற்கவே தடுமாற இவர் எடுக்கும் நிலைகளில்தான் தடுமாறுகிறார் பரவாயில்லை. இத்தனைக்கும் இவர் இவரது கூட்டணியை முன்னணிக்கு கொண்டு வர ஒரே மூச்சாக இரவு பகல் பாராமல் உணவு உறக்கம் இல்லாமல் உயிரைக் கொடுத்து பாடு படுவேன் என்கிறார்.

சாதிக் கலவரம் உண்டாக்க தி.மு.க பார்க்கிறது. எனவே விலகிக்கொண்டேன் தேர்தலில் நிற்கவில்லை என்பதை விட தோல்விபயம் துரத்துகிறது எனவே தோல்வி காணப் பயந்து விலகிக் கொண்டேன்..எனவும் சொல்லி விலகி இருக்கலாம்.

வை கோ வைக்கோ (ஆங்கிலத்தில் leave it here and Go)




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment