Tuesday, March 5, 2019

மஹா சிவராத்ரி நேற்று பார்த்தேன்,இன்று கேட்டேன்...கவிஞர் தணிகை

மஹா சிவராத்ரி நேற்று பார்த்தேன்,இன்று கேட்டேன்...கவிஞர் தணிகை

Image result for isha mahashivratri 2019


பிரமிப்பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது ஈஷா யோகா மையத்தின் மஹா சிவராத்ரி. பிரமை.

இந்திய நாட்டின் முதல் குடிமகன் கலந்து கொள்ள ஜக்கி வாசுதேவ் வழக்கம் போல் தனது மேல் துணியை பெண்கள் அடிக்கடி மேலாக்கை சரி செய்வது போல் சரி செய்து கொண்டே ஆடி, பாடி, பேசி நாயகனாக விளங்க\\

பாம்பு பிரமணை சுற்றிய லிங்கம், அண்ணாந்து பார்க்கும் நிலவை சூடிய சிவன் எனச் சுற்றி வந்த காமிராக்கள் ஆடல் பாடல் மேடையில்...

மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு. அனைவர் கையிலும் ஒரு அடையாள வளையம் இருந்ததைக் காணமுடிந்தது.
Image result for isha mahashivratri 2019
பல தொலைக்காட்சிகளும் நேரலையை ஒளிபரப்பின‌
Image result for isha mahashivratri 2019
அங்கே நேரடியாக சென்று பார்ப்பதை விட இது நன்கிருந்தது.

ஜக்கி வாசுதேவ் தமன்னா, காஜல் அகர்வால், சுஹாசினி போன்ற நடிகையரை  எல்லாம் அருகழைத்து ஆடினார்...

உடன் பச்சை துண்டை போட்டிருந்த விவசாயிகளா அவர்கள் அவர்களும் ஒரு பாடலுக்கு மேலேறி ஆடினார்கள். அதன் பின் அந்த இடத்தை அங்கேயே தக்க வைத்துக் கொண்டார்கள்.

பாடகர் கார்த்தி மிக நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சளைக்காமல் அருமையாகப் பாடினார். அதில் எம்.ஜி.ஆர் பாடல் வேறு....ஆயிரத்தில் ஒருவனிலிருந்து அதோ அந்த பறவை போல ....பாரதியாரின் பாடல், இப்படி அலே அலே...என்றெல்லாம்...

இவ்வளவு கூட்டத்தை நெறிபடுத்தி இந்த நிகழ்வை செய்வாரைப் பாராட்டுதல் வேண்டும்.
Related image
இந்த ஆதி சிவன் இமயம், கங்கை, நெற்றிக் கண் ஆகியவற்றை மையப்படுத்திய மதம் சார்ந்தவர்....

இந்நிகழ்வை முடித்து விட்டு தூங்காமல் தமது காரை தாமே ஓட்டிவந்து தூங்கி வழிந்து ஒருவர் சேலம் வரும்போது விபத்துக்குள்ளாகீ மரணம் அடைந்தார் அவர் எங்களது கல்லூரி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு மதிப்பிற்குரிய நண்பரின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
Related image
அதற்கு முன் தினசரியில் 60 ஆம் வயது கல்யாணம் செய்த தம்பதியர் விபத்தில் பலி என்ற செய்தியையும் கண்டேன்...
Related image

நேற்று இரவு  11.45 வரை விழித்திருந்தேன்....காரணமாக...அதன் பின் 4 மணிக்கு அதிகாலையில் எழுந்தேன்...ஆனால் அந்த உறக்கமே எனக்குப் போதவில்லை... என்றுமே இது போல முழு இரவெல்லாம் நான் விழித்திருப்பதில் உடன்படுவனல்ல. ஆனால் ஒரு முறை எமது அலுவலகத்துக்காக 3 பகல் 2 இரவு தொடர்ந்து பணி புரிந்தது ஹைதராபாத்தில் நினைவிற்கு வந்தது .அப்போது கணினி புதிதாக பயன்படுத்தப்பட்ட நேரம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment