Sunday, March 17, 2019

காதல் அன்றும் இன்றும்: கவிஞர் தணிகை

காதல் அன்றும் இன்றும்: கவிஞர் தணிகை

Image result for true love


மின்னல் கேந்திரங்கள்
உன் விழிகள்

மெய் ஞானப் புறப்பாடு
உன் மௌனப் புன்னகை

மொழிகளிலேயே உயர்ந்தது
உன்
மௌன மௌழி

ஜதி சொல்லும்
உன் பாதங்களுக்கு
வெறும் மேம்பூச்சு தான்
என் கண்கள் சொல்லும்\
கவிதைகள்

அளவெடுத்த
அங்கங்கள் உனக்கு
உலக சிருஷ்டியின்
முழுமி பெற்ற அழகாக!

நான் சொல்லிய
கவிதைகளை எல்லாம்
உன்
ஒரு பார்வைச் சாயல்
அர்த்தமற்றதாகிவிடுகிறது

ஏங்கியவை
எட்டியபோதும்
எட்ட மறுப்பதுதான்
திருப்தி

இதுதான் பொதுநியதி
இதன் விதிவிலக்காய்
உலகையே
ஒளிபெறச் செய்யும்
காதல் மூலம்தான்
மாறத நிலை பெற்றது
இதில்
பிரபஞ்சமே அடக்கம்

அதனால்
நீயும் நானும்
பெருமைப்படத்தக்கவர்களே!

அடித்தளம் இல்லாத‌
பார்வைகள் மூலம்
கட்டிடங்கள்
கட்டிவிட்டோம்

இந்தப் பார்வைக் கட்டிடங்களே
நம் பயணங்கள் புறப்பட‌
அடித்தளங்கள்!

நீ என்னதான்
பேசாமல்
மௌனம் சாதியேன்
உன் எண்ணங்களே
எனக்குப் புரிகிறதே!

நீ
இவ்வுலகில்
ஏதோ ஓர் மூலையில் இருப்பதால்
கடுமைப் பிரிவுகளில் கூட‌
உன் பர்வைகள்
என் செயல்களை
உறுத்துப் பார்க்கும்
உணர்வுகள் எனக்கு

உனக்கு?

      மறுபடியும் பூக்கும்

 என்ற கவிதைத் தொகுதியில் 1991ல் வெளியிட்ட கவிதை...

ஒரு தலை இராகம் என்ற படம் உண்மையிலேயே ஒரு தலை இராகம் அல்லாமல் இரு தலைக்காதலை கடைசியில் காதலனின் மரணத்தோடு இரயிலில் முடித்திருக்கும் அந்தப் படத்தை பொள்ளாச்சியில் 1980களில் பல முறை பார்த்திருந்த நினைவுகளுடன்...

பொள்ளாச்சியா இன்று பொல்லா(ர்) ஆட்சியா என்று கேட்கும்படியான நடவடிக்கைகள் அரங்கேறியதன் காலப் பதிவுகள்...

மோடியும் முகேஷ் அம்பானியும் ஒரு நாளைக்கு ஜியோவின் ஒரு ஜிகா பைட்டுக்கும் மேலும் பயன் படுத்தச் சொல்லித் தர,

எல்லா இளசுகளின் கையிலும் மொபைலும் , காமிராவும், இணையமாக இருக்க சமூக வலைதளங்களைக் குறை சொல்லியபடி...

அன்று பேசினாலே பெரிய விசியம், பார்த்தாலே பெரிய விசியம். இன்று லிவிங் டுகெதர்,  apart from that why not before marriage?....

ஜப்பான், சீனாக்காரர்களுக்கு தாய் மொழி மட்டுமே தெரிய, அவர்கள் நாட்டை மட்டுமல்ல உலகையே ஆள அவர்கள் எல்லாம் இணையத்தை தேவையில்லாததை கட்டுக்குள் வைத்து அரசாட்சி செய்ய, இங்கே எல்லAAம் திறந்த வெளியாக....என்றாலும் உயிர்களை எடுப்பது இயற்கைக்கு முரணாகும் செயலே.... மனிதர்கள், நாடுகள், சட்டஙக்ள், நீதி, ஆட்சி, குற்றம்.... குற்றம் நிரூபிக்கப்பட்ட அரேபிய சிறுமியை வன்புணர்ச்சி செய்த 7 பேரை தலை வேறு முண்டம் வேறாக்கியை வாட்ஸ் ஆப் படங்கள் உலா வர..

இங்கு கொஞ்சம் ஆங்கிலம் அறிந்த காரணம் பண்பாட்டுக் கரண‌ம்....பாலியல் படங்கள், இணையம், பள்ளிச் சிறார்களுக்கே மடிக்கணினி அதில் ஆபாசப்படம், புதுப்படம் தரவிறக்கம்...

OPM ஓபிஎம்...அதர்ஸ் பீப்பிள்ஸ் மணி என்று அடுத்தவரிடம் அவர்களிடம் உள்ள பணத்தில் வாழக் கற்றுக் கொண்டுள்ளார்கள்... அதற்கு மேலை நாடுகளிடம் இருக்கும் ஆண் விபச்சார முறையை இங்கும் கொண்டு வந்துள்ளார்கள் அது மட்டுமல்ல அறிவியல் உபகரணத்தை பயன்படுத்தி அதை பதிவு செய்யவும் அதை ஆய்தமாக்கவும் அதன் மூலம் தமது அளவற்ற ஆசைகளை தீர்த்துக் கொள்ளவும் அதற்கு அரசு, அரசியல், ஆட்சி, காவல்துறை என்ற துறைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதற்காக ப்ளாக் மெயில் செய்து வழிகள் மேற்கொள்ளவும் கும்பல் பயன்படுத்தி நிறைய எண்ணிக்கையிலான சபலப்பட்ட பெண்களை சீர் குலைத்திருக்கின்றன....அவர்கள் தாம் இவர்களுக்கு கல்லூரிக்கு கட்டணம் கட்டுகிறார்களாம், கார் , பண்ணை வீடெல்லாம் வைத்துக் காட்டு மிராண்டிக் கூட்டமாக மாற பாதுகாத்திருக்கிறார்களாம்

அவர்கள் இவர்களை அதிக நாள் காவலில் கைதியாக விட மாட்டார்களாம். சென்னையில் ஒரு பெண் மருத்துவர் இது வரை ஒன்னரை கோடி வரை கூட செலவு செய்துள்ளாராம்

இப்படி எல்லாம் செய்திகள்...

நாட்டை சீர் குலைக்க நாட்டு மக்களை திசை திருப்பி..

சினிமா பார்த்து இவர்களும் , இவர்க்ளை பார்த்துத்தான் சினிமாக்களும் என்றபடி கடைசியில் பொதுமக்கள்தாம் பிடித்து அடித்து உதைத்து துவம்சம் செய்து காவல் துறையிடம் அரசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்...

எப்படி அந்தக் காலத்தில் காட்டு மிராண்டிகளாய் வாழும்போது நாடு, எல்லைக் கோடுகள், அரசு, ஆட்சி, மொழி தலைமை, காவல் ஏதும் இல்லா நாட்கள் இருந்தனவோ அப்படியே இப்போது எல்லாம் இருந்தும் அப்படியே...காரணம் நாம் அறிவியலைக் குறை சொல்ல வசதி இருக்கிறது...அனால் இங்கு இருப்பது யாவும் சுயநலம் வானாளாவிய சுயநலம் மட்டுமே...எனவேதான் யாவும்...

ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு என்பதன் உள்ளடக்கம்.
இந்தியா தனித்துவம் இழந்து அமெரிக்க ஐரோப்பியர் பார்த்து அதிலும் உள்ள குற்றப் பின்னணியினர் பார்த்து வளர்ந்து வருகிறது...

எனவே இவை இப்படித்தான் இருக்கும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment