Sunday, October 16, 2016

டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.அந்த நாள் நேற்று போல...கவிஞர் தணிகை.

கலாம் போல் யாமறிந்த மனிதரிலே இனிதாவது ஒருவர் எங்கும் காணோம்: கவிஞர் தணிகை

Image result for apj abdul kalam


விரும்பியவாறே நீ இறந்தாய் தலைவா!
யமனையும் உன் செயல் அழகால்
மயங்கச் செய்தாய்!

1931 அக்.15 முதல் 2015 ஜூலை 27 வரை
ஏகப்பட்ட சம்பவங்கள்
உன் வாழ்வில் விதம் விதமாய்
விதை விதையாய்...
வகைப்படுத்த...

என்றாலும் ஒன்று சொல்லலாம்...

நீ மறுபடியும்
நிற்க மாட்டேன்
என தமிழ்க் கலைஞரால்,
இந்தியக் கட்சிகளால்
இடறி விழுந்ததை சொல்லலாம்.

மேடையிலேயே கைத்தடி
தடுக்கி கீழே விழுந்தாற்போல...

உழைப்பில் அந்த உடல்
ஓய்ந்தது அய்யா!
பிற பிரபலங்கள் போல
நீ பிழைக்க அது ஓயவில்லை

நீ மண்ணில் நிலைக்க
அது உனை ஊன்றி சாய்த்து
என்றும் நீ இருக்க உதவியது...

நீ பள்ளி கல்லூரிகளை நேசித்தாய்.
நீ செய்ததை
சட்டத்துக்கு மீறிய புரட்சி அல்ல
 என்பார் எல்லாம்
உனை புரிந்து கொள்ளாமல்...

எங்கிருந்து அது ஆரம்பிக்க வேண்டும்
தெள்ளத் தெளிவாக தெரிந்ததால்;-அது
அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் -என
புதிய விதைகளை  அங்கே விதைத்தாய்
எண்ணத்தை அள்ளி அங்கே தெளித்தாய்,
புரட்சிக்காரர் பற்றி கவலைப்படாமல்..

நீ வாசித்த வீணை
படித்த நூல்கள்
பிடித்த குறள்கள்
பேசிய சொற்கள்
எழுதிய எழுத்துகள்
எல்லாம் ஒளி பெற...

85th birth day 
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






No comments:

Post a Comment