Friday, October 28, 2016

ஒரே இடத்தில் இரு வேறு நேரில் கண்ட சாலை விபத்தும் பால் குட விளைவுகளும்: கவிஞர் தணிகை

 ஒரே இடத்தில் இரு வேறு நேரில் கண்ட சாலை விபத்தும் பால் குட விளைவுகளும்: கவிஞர் தணிகை

Image result for yesterday accident in front of vinayaka bike and car on highway


வேம்படிதாளம் மருத்துவ மனை முகாம் பணி முடித்து சுமார் 12 மணிக்கு எங்களது வாகனம் கல்லூரி வளாகத்துள் நுழைய முனைகையில் இடி இடித்தது போன்ற ஒரு பெரும் சத்தம்.வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு பின் சென்று பார்த்தோம்.ஒரு ஆடி கார் சாலையில் முன்புறம் சேதமாகி கண்ணாடி எல்லாம் உடைந்து, இரு சக்கர வாகனம் முன்னால் பறக்க, பின்னால் அந்த வண்டியில் வந்த இருவரும் பின்னால் சாலை செடிகளிடை வீழ்ந்து கிடக்க...

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இந்த 7 மாதத்தில் பல விபத்துகளை கல்லூரியின் எதிரே வீரபாண்டி நெடுஞ்சாலையில் கண்டு விட்டேன். விநாயகா தலைமை அலுவலகத்தின் எதிரே என்றும் சொல்லலாம். ஆனால் இன்று பார்த்தது மிகவும் சினிமா பாணியில் வண்டியும் விபத்தில் சிக்கிய பைக்கின் 2 நபர்களும் சுமார் 10 அடி உயரே எழும்பி சாலையின் வலப்புறம் உள்ள செடிகள் நிரம்பியிருக்கும் குழிப்பகுதியில் விழுந்துள்ளனர். இவர்களின் பைக் முன்னால் சென்று விழுந்து கிடந்தது.இருவருக்குமே மண்டையில் நல்ல அடி காயம், இரத்தம் வழிந்து ஓட... வேகம் , வேகம் , ஒரே வேகம். தடையில்லா வேகம். பெரும் சோகம்.

Image result for ariyanoor highway at vinayaga dental college

ஒருவர் காலமாகிவிட்டார் மற்றொருவர் நிலையோ கவலைக்கிடம்.கேரளாவிலிருந்து மாண்ட் போர்ட் ஏற்காடு பள்ளிக்கு வந்து தமது பிள்ளைகளை தீபாவளி விடுமுறைக்கு அழைத்து செல்ல வந்த ஆடி கார் வெகு வேகமாக வர, குறுக்கே பாய்ந்த இந்த பைக் தூக்கி விசிறி எறியப்பட்டது.

காரில் இருந்தவர்களுக்கு ஒரு சேதமும் இல்லை. ஆனால் அந்த பைக்கில் வந்தவர்கள் இனி வாழ்வதே கூட அரிதுதான். முன்பே சொன்னபடி ஒருவர் அங்கேயே...மற்றொருவர் மிகவும் மோசமான நிலையில்..

108ஐ அழைத்தோம். முதல் உதவி இல்லாத வண்டி வந்து சேர்ந்து , அதில் இரு நபரையும் தூக்கி சென்று போட்டோம்.

அதை வேடிக்கை பார்த்த கூட்டம் சேரச் சேர ஒரு கார் திடீரென்று பிரேக் போட ஒரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கர்ப்பிணிப் பெண் அந்த வண்டியில் மோதி கீழ் விழுந்து இரத்தக் கசிவு...
Image result for yesterday accident in front of vinayaka bike and car on highway


நிலை இப்படி எல்லாம் இருக்க நெய்காரப்பட்டியில் உள்ள ஒரு கோயிலில் இதன் முதல் நாளில் அம்மாவுக்காக பால்குடம் ஏந்திய கூட்டத்தில் ஒரு 55 வயது மதிக்கத் தக்க மனிதர் ஒருவர் கீழே விழுந்து இறந்து விட்டார்.

அந்த இடத்திலும் நாங்கள் அன்று சென்றபடியும் வந்தபடியும் இருந்தோம். நவம்பர் 14 குழந்தைகள் தினவிழாவிற்கு பள்ளிகளுக்கு அழைப்பிதசழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது.கேள்விப்பட்டது வேறு. . ஒரு குடம், சேலை,ஒரு மதிய உணவு, 200 ரூபாய் என கூட்டம் சேர்த்தி டெம்போவில் பிற பகுதிகளில் இருந்தும் ஆள் அழைத்து வரப்பட்டனர் அப்படி வந்தவருள் ஒருவரே அப்போது இறந்தவர்.ஒரு நாளைக்கு ஆசைப்பட்டு இறப்பை அடைந்தவர் இது போல் எத்தனையோ?

இந்த 2 சம்பவங்களுமே தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் விளைந்த விபத்துகள். ஆபத்து தவிர்க்க எச்சரிக்கை அவசியம், ஒரு மயிரிழையில், ஒரு சிறுக் கீற்றுப் பொழுதில் மரணத்தை தழுவிடும் ஆபத்துகள் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமல்ல சாலையில் சென்றாலே நல்ல கவனத்துடன் சென்று செல்ல வேண்டிய ஊருக்கு சென்றடைவீராக.

சில நாளுக்கும் முன் எமது ஊர் இளைஞர் ஒருவர் கூட இரு சக்கர வாகனத்தில் சென்றவர் புளிய மரத்தில் அடித்து கண்கள் வெளித் தெறித்து ஓட மாண்டது...மற்றொரு விபத்தில் பாதை இருளில் புலப்படாமல் வண்டி மரத்தில் அடித்து வண்டி ஒரு புறமும், ஓட்டிச் சென்ற இளைஞர் மறுபக்கமும் விழுந்து கிடந்து அப்பாவுக்கு விபத்தாகிவிட்டது என செல்பேசியில் சொல்லி விட்டு யாருமற்ற ஆளரவமற்ற புதரில் அரை மணிக்கும் மேல் கிடந்து உயிர் இழந்த மனிதர் இப்படி நிறைய விபத்தாய் கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம்.

சாலையை கவனத்துடன் கையாளவும். நமது உயிர் நமது கையில். காலனின் பையில் அல்ல.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment