Tuesday, January 29, 2019

தங்கர்பச்சானின் நல்ல எண்ணம்: கவிஞர் தணிகை

தங்கர்பச்சானின் நல்ல எண்ணம்: கவிஞர் தணிகை


Image result for thangarbachan and thamil

வாட்ஸ் ஆப்பில் சில நிமிடம் மட்டுமே அந்தக் காணொளி பார்த்தேன். தமிழ் மொழியில் முன்னோர்கள் 2000 வார்த்தைகள் அறிந்திருந்தார்கள் அதை புழங்கினார்கள் அந்த பண்டைக்காலம் போக அது அதை அடுத்த காலத்தில் 1000 வார்த்தையாகி  கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி 500 வார்த்தை இப்போது வெறும் 200 வார்த்தை கூட தமிழ் சிறுவர் சிறுமிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது  என ஆதங்கப்பட்டு இனி தமிழில் எழுதும் செயலை அதிகம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது எனக் குறிப்பிடுகின்றார்.

மிகவும் உண்மையான தமிழ் மொழிக்கான தற்போதையத் தேவை இது.

எனவே மூளைச் செல்களிலும் நரம்புகளிலிருந்து ஏற்படும் எண்ணங்களுக்கு வடிவத்தை கைகள் வழியே எழுத்துகளாக்கும் பயிற்சியை மறுபடியும் தீவிரமான எண்ணம் கொண்டு ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்.


தட்டச்சு, சுருக்கெழுத்து முற்காலத்தில் நாம் எழுதுவதை ஒரு வாறு மாற்றியது அதை அடுத்து இப்போது கூகுள், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளில் பேசுவதை என்ன மொழியானாலும் அதை அப்படியே எழுதி விடுகிறது அதை நாம் சொல்ல வேண்டிய நபர்க்கு அப்படியே அனுப்பி வைக்கும் வேலை ஒன்றை செய்ய வேண்டியதுதான் என்றாகிவிட்டது

முற்றிலும் எழுதும் வேலையே இல்லை. அறிவியல் முன்னேற்றம் இந்த அளவு உள்ள நிலையில் தாய் மொழி தமிழ் பற்றி உண்மையிலேயே அக்கறையும் கவலையும் கொண்டிருக்கும் அவரின் அந்தப் பகிர்தல் என்னைத் தொட்டு விட அதற்காகவே இந்த சிறு பதிவை உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள சித்த வைத்திய நாட்காட்டியின் இந்த 2019 ஆம் ஆண்டின் ஏடுகளில் மாபெரும் அறிஞர்களின் தமிழ் மறவர்களின் குறிப்புகள் இருந்தன அவற்றில் கூட ஓரிடத்தில் எழுத்துப் பிழையை கவனிக்க நேர்ந்தது மூன்று சுழி ணகரத்துக்குப் பதிலாக இரண்டு சுழி னகரத்தை போட்டிருந்தார்கள்.

உண்மையிலேயே இரண்டு ஒரே மாதிரியான எழுத்துகள், மூன்று ஒரே மாதிரியான எழுத்துகள் அதாவது லகரம், ளகரம், ழகரம், னகரம் ,ணகரம் ரகரம் றகரம்

போன்ற எழுத்துகளை எழுதுவதில் மிகவும் மோசமான நிலையிலேயே நமது தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல நல்ல தொழில் வல்லமையுள்ள வேறு வேறு துறைகளில் சிறந்து விளங்கும் விற்பன்னர்களிடம் கூட இந்தக் குறைபாடு இருப்பதை மறுப்பதற்கில்லை.


எல்லாம் ஒரே அவசரகதி, அல்லது கவனக்குறை அல்லது தெரிந்தவரை வைத்து செய்து முடிக்காமை இவை யாவுமே இது போன்ற பிழைகள் நேரக் காரணம்.

எனவே ஒவ்வொரு ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொள்ளும்போதும் அது காலத்தை விஞ்சி நிற்கப் போகிறது என்ற இறுமாப்புடன் உறுதியேற்று அதற்குரிய கால நேரத்தை அதற்கு ஈந்து எழுதும் பணியை அதைப் பிரசுரிக்கும் பணியை செய்ய வேண்டியது முதலில் முன்னோரின் மூத்தோரின் கடமையாகிறது.

இப்போது எதில் பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் பிழைகள் நிறைய மலிந்துவிட்டன. தமிழ் தள்ளாடிக் கொண்டிருப்பது உண்மைதான். இனியாவது தமிழ் தெரிந்தார் தமிழில் சிறிது நேரம் தமது குடும்பத்தாரை எழுதச் சொல்வது எழுதச் செய்வது இன்றியமையாதது.


இப்படி எழுதாமலும் பேசாமலும் இருந்த நிறைய மொழிகள் காணாமல் போயிருக்கின்றன.இப்போது தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னடம் பேசுவோரின் மொழிகளை எல்லாம் நீங்கள் கவனித்துப் பாருங்கள் பெரிய நகைச்சுவையாய் இருக்கும்.

நன்றி: தங்கர் பச்சான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, January 27, 2019

இலவசத்தின் உச்சம் மடிக்கணினியில் பள்ளி மாணவர்கள் ஆபாச நீலப்படம் பார்ப்பது: கவிஞர் தணிகை

இலவசத்தின் உச்சம் மடிக்கணினியில் பள்ளி மாணவர்கள் ஆபாச நீலப்படம் பார்ப்பது: கவிஞர் தணிகை
Image result for lap top to school students in tamil nadu free scheme is utter failure useful to see blue films


பள்ளி மேனிலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவது கல்வி தொடர்பானதுதான் அதை புது சினிமா பார்க்க பதிவிறக்கம் செய்வதும், ஆபாச‌ நீலப்படம் பார்ப்பதும் தேவையில்லா நச்சுக்களை பதிவேற்றம் செய்வதும் இலவச விலையில்லா மாணவர்கள் சலுகைகளின் உச்சம். கிடைப்பதென்னவோ இது போன்ற எச்சம் மட்டுமே.

மதிய உணவு அளித்த காமராசர் கல்விக் கண் கொடுத்த கர்மவீரர் என்று கருதப்பட்டார் அவர்க்கு முன்பே சென்னையில் ஒரு அறிஞர் அந்தக் காரியத்துக்கு அந்த இலவச மதிய உணவுத் திட்டத்துக்கு முன்னோடியாக இருந்து ஒரு கல்விக்கூடத்தில் அந்த அரும்பணி ஆரம்பமாகக் காரணமாக இருந்திருக்கிறார் என்ற செய்தியும் உண்டு. தேடினால் விவரம் கிடைக்கும் இப்போது அது என் நினைவில் இல்லை. காமராசரை எம்.ஜி.ஆர், கருணாநிதி ஜெ எல்லாம் மிஞ்சினார்கள்  இலவசம் பள்ளிக்கு அளிப்பதில் பின்னணியில் காரணங்கள் பலப்பல.
Related image
அந்த மதிய உணவு ஆரம்பத்தின் உச்சம் இப்படி மடிக்கணினி கொடுக்கப்பட்டு மாணவர்கள் ஒழுக்கம் கெடுக்கப்படும் வரை அரசியல் மற்றும் பல்விதக் காரணங்களாலும் சென்று கொண்டிருக்கிறது.

பள்ளி மேனிலை வகுப்புகளில் மாணாவர் ஒருவர் பள்ளியிலேயே வந்து ஆபாச‌ நீலப்படம் பார்க்கிறார் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என ஒரு ஆசிரியர் மற்றொரு உடற்கல்வி இயக்குனரிடம் தமது தீராத பொருமலை வெளிக் கொட்டி இருக்கிறார்.

எங்கே நாமும் நமது சமுதாயமும் நமது இளைய சமூகமும் சென்று கொண்டிருக்கிறது?

 ஆசிரியர் கேட்டால் கத்தியால் குத்துவேன் , அடித்து வீழ்த்துவேன் என எகிறிக்கொண்டிருக்கிறது ஒரு ரௌடிகள் கூட்டம் மாணவர்கள் என்ற பேரில்

கடந்த வாரத்தில் ஆசிரியரை எள்ளி நகையாடிய  ஒரு மாணவரின் தந்தை பள்ளியிலேயே வந்து தமது மகனை செருப்பால் அடித்திருக்கிறார்

அரசுப்பள்ளியில் நிலை சொல்லத் தரமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அரசுப்பள்ளியில் துவக்கப்பள்ளி, இடைநிலை, உயர் நிலை, மேனிலை இவற்றில் எல்லா இடங்களிலும் செருப்பு, புத்தகம், பை, சைக்கிள், நோட்டுகள் இப்படி எல்லாம் மதிய உணவு, முட்டை, மடிக்கணினி இன்ன பிற இலவசங்கள் படுக்க இடம் ஒன்று தவிர வாழ்வின் தேவைகளை எல்லாம் நிறைவு செய்து தருகிற மாதிரி அரசு போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களுக்கு எல்லாம் செய்கின்றன. ஆனால் ஒழுக்கம், என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சுத்தம் சுகாதாரம் குடிநீர், கழிப்பறை வசதிகள் எல்லாப் பள்ளிகளிலும் சொல்லத்தரமில்லை. அவற்றை அந்த அந்த ஊரின் பிரமுகர்களிடம் விட்டாலும் ஒழுங்கு செய்வார்கள். ஆனால் குடிநீரை தனியாரிடம் விட்டதனால் நீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகையில் மின்சாரமும் காவிரி நீரும் எல்லாவற்றுக்கும் கிடைக்கும் என தொழில் முனைவோரிடம் சிவப்புக் கம்பளம் விரிக்கிறதாம் தமிழக அரசு...

இந்த மடிக்கணினியை வாங்கி ஒரு விலை நிர்ணயம் செய்து விற்று விடுகிற செயல்களும் இல்லாமல் இல்லை அதைக் கட்டுப்படுத்த அரசிடம் எந்த நியாயத் தராசுகளும் இல்லை.

ஆனால் எந்த சலுகையும் செய்யாமல் ஆண்டுக்கு மிகப்பெரும் தொகையை கட்டணமாக வசூலித்து வரும் தனியார் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது( ஜெ அரசை விட செங்கோட்டையன் கல்வி அமைச்சு ஏதோ செய்ய நினைக்கிறது என்பதை செய்திகள் வாயிலாக அறியலாம் ஆனாலும்)

இவற்றில் எங்கே முரண்பாடு இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்
தனியார் பள்ளிகளில் மட்டுமே மிக அரிய ஒழுக்க நெறிகள் எல்லாம் போதிக்கப்பட்டு கற்றுக் கொடுப்பதாக எல்லாம் கருத முடியாது

பின் ஏன் இந்த இரட்டை நிலை?
Related image
அரசு அப்படித்தான் எப்போதும் எல்லாத் துறைகளிலுமே தனியார், அரசுத்துறை என்ற இரு குதிரை சவாரிகளை ஒரே நேரத்தில் செய்ய முயன்று தோற்று மண்ணைக் கவ்வி தர தர வெனெ இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்து, கல்வி, மருத்துவம், தொழில், குடி நீர், மின்சாரம் பால் பொருட்கள் விநியோகம் இப்படி நாட்டின் மக்களின் எல்லா முக்கிய‌த்துவம் சார்ந்த துறைகளிலுமே இரு குதிரைச் சவாரிகளே செய்கின்ற அரசுகள்...

கள்ளச் சாராய ஒழிப்புக்காக பாடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தின சிறப்பு விருதுகள் தருகின்றன மது விற்பனையை அரசே நடத்திக் கொண்டு... எங்கே சிரிப்பது எனத் தெரியவில்லை

இந்நிலையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் வேலை நிறுத்தம்...போராட்டம் இன்ன பிற...

ஒன்று எல்லாவற்றையும் தனியாரே நிர்வகிக்கட்டும் அரசும் அமைச்சும் ஆட்சியும் அதிகாரமும் நிர்வாகமும் மட்டும் அரசின் கைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையுள் இருக்கட்டும்

அல்லது எல்லாவற்றையும் அரசே எடுத்துக் கொள்ளட்டும்...குவிந்து கிடக்கும் செல்வத்தை பரவலாக்கலாம்...இருப்பதை சமமாகப் பிரி அது எதுவானாலும் நட்டம் என்றால் எடப்பாடி சொன்னபடி  மக்களே ஏற்றுக் கொள்ளட்டும் இலாபமானாலும்

இலாபத்தை அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும்,தனியார் முதலாளிகளும் எடுத்துக் கொள்ள நட்டத்தை மட்டும் மக்களுக்கு பிரித்துக் கொள்ளச் சொல்வது என்ன அரசு குடி அரசு...அதுவே இந்தியக் குடியரசு. எனவே நாம் மாணவர்கள் என்ற நல் ஒழுக்கம் மலர வேண்டிய அரும்புகளில் இலவசம் என்ற பேரில் நச்சு விதைகளை விதைத்து வருகிறோம்

விஸ்வாசம் படம் பார்க்க பெற்ற தந்தையைக் குத்தும் ஒரு சினிமா இரசிகனாக இல்லை இல்லை வெறியனாக‌

குடிக்க காசு தரவில்லை என்று தந்தையைக் கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்று போடும் போதை வெறியனாக‌

எண்ணத்துக்கு தடைபோடுகிறார் என ஆசிரியரைக் குத்தி கொலை செய்யும் கொலைகாரர்களாக...
Related image
70 ஆம் ஆண்டு குடியரசில் இன்னும் இதைப் போன்றவற்றைப் பற்றி எல்லாம் நிறைய சிந்திப்போம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




ஆண் தேவதை ஆம் இது ஒரு சமுத்திரக்கனிக்கொரு பொற்காலம்: கவிஞர் தணிகை

 ஆண் தேவதை ஆம் இது ஒரு சமுத்திரக்கனிக்கொரு பொற்காலம்: கவிஞர் தணிகை

Image result for thamira director

பாரதிராஜாவின் தொடர்ச்சியாகத் தெரியும் சமுத்திரக்கனி நல்ல ஆக்கபூர்வமாகத் தெரிகிறார் சினிமா பிம்பங்களில். நேற்று அவருடைய நடிப்பில் தாமிராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டின் அக்டோபரில் வெளியான "ஆண் தேவதை" என்ற படத்தை நடைப்பயிற்சி கூட மேற்கொள்ளாமல் பார்க்க நேர்ந்தது. எனது துணைவியார் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என குறித்துக் கொண்டு பார்க்க விழைந்தார். அதில் ஒரு காட்சி பள்ளியில் ஹவுஸ் ஹஸ்பண்ட் என தந்தையைக்  குழந்தைகள் குறிப்பிடும்போது அதைக் கேலி செய்து வகுப்பில் உள்ள அனைவரும் எள்ளி நகையாடுகிறார்கள் ....உன் தந்தைக்கு என்ன தெரியும் அவருக்கு என்ன தொழில் என்ற வகுப்பாசிரியரின் கேள்விக்கு நன்றாக ஐஸ்க்ரீம் செய்வார், நன்றாக கதை சொல்வார் என்றும் பிள்ளைகள் சொல்ல மற்றொரு இவர்கள் குடும்பம் பற்றி அறிந்த குழந்தை இளங்கோ ஒரு வெட்டி ஆபிசர் வேலை இல்லாதவர் எனக் குறிப்பிடுகிறது.

இது ஒரு ஆணாதிக்க சமுதாயம் என்கிற அதே வேளையில் இப்படி பொறுப்புள்ள ஆண்களை அவமதிக்கும் சமூகமாகவும் இருக்கிறது என்பதை அழகாக படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

பால் வேறுபாடு பற்றி கதை சொல்ல ஆரம்பித்தவுடன் என்னால் அதை விட்டு வெளியேற முடியவில்லை.

பெண்களை ஹவுஸ் ஒய்ப் என்றவுடன் அல்லது வேறு பேர் கொண்டு ஹவுஸ் மேக்கர் என்றவுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இருக்கும் இதே சமூகத்திற்கு ஆண்களுக்கு ஹவுஸ் ஹஸ்பண்ட் என்றாலோ ஹவுஸ் மேக்கர் என்றாலோ ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. புதிதாக இருக்கிறது.

பழைய தமிழர் பண்பாட்டில் இருபாலரும் கால்விரலில் மிஞ்சி அணிந்தே வந்தனர். இப்போது ஒரு சில பெண்கள் தங்களது தாலிக் கயிற்றை சரட்டை எடுத்து மறைத்துக் கொள்வதையும் இல்லை என்று சொல்ல முடியாது.

உண்மையில் சொல்லப்போனால்: விதவை என்ற சொல் விளங்குவது போல விதவன் என்ற சொல் புழக்கத்தில் இல்லை என்பது உண்மைதானே...மணமனவர் என்றவுடன் பொட்டு, பூ, வண்ணச் சேலை போன்றவை மங்கல திருமணமான பெண்ணின் அடையாளங்களாக கருதப்பட்டவை...இன்று பூ விலை ஏற்றத்தால் பூ வாங்கிக் கொடுக்க முடியாத அல்லது வாங்கிக் கொள்ள முடியாத சூழலில் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் ஏகப்பட்ட திருகல்களில் சீரழிவில் சென்று கொண்டிருக்கின்றன‌
Image result for naadodigal
இந்த சூழலில் இந்தக் காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட படங்கள் தேவைதான். இதன் இயக்குனர் தாமிரா என்பவரை இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்தமைக்காக உண்மையிலேயே பாரட்டப்பட‌த்தான் வேண்டும். இவர் ஏற்கெனவே 2010ல் இரட்டைச் சுழி என்ற படத்தை எடுத்து பாரதிராஜா, பாலச்சந்தரை வைத்து இயக்கியவர் அந்தப் படம் இயக்குனர் சங்கர் தயாரிப்பில்  வெளிவந்து படுதோல்வி அடைந்து நட்டம் ஏற்படுத்தியபிறகு இந்தப்படத்தை செய்திருக்கிறார். 18 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக செய்திகள். ஆனால் இந்தப் படம் இன்னும் நன்றாக தமிழ் கூறும் நல்லுலகால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மனநிறைவு என்பது பொருளாதாரம் பணத்தில் மட்டுமே இல்லை என்ற ஒரு நல்ல இளைஞரும் வாழ்வில் வேறு ஆதாரம் இல்லை என அவரை மணந்து ஒர் ஆண் ஓர் பெண் குழந்தைகளுக்குத் தாயான இன்றைய காலக்கட்டத்தின் மாயாலோகத்தில் ஈர்க்கப்படும் ஒரு அடிப்படையில் நல்ல பெண்ணும் வாழ்கிறார்கள் அதில் ஏற்படும் புயலும் அலையும் ஆட்டமும் அசைவும் படம்.

மாதாந்திர தவணை முறையில் வீடு கார் வாங்குவது தனியார் கம்பெனியில் பெரிய பணியில் இருப்பதாகவும் அவர்களுடைய இச்சையை தீர்க்க முடியாதபோது ஒரே நொடியில் தூக்கி வெளியே வீசப்பட்டு மறு வேலை தேடவேண்டிய நிர்பந்தத்தில் மாத தவணை கட்ட முடியாமலும், தற்கொலைக்கு முயலவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதுமான சூழல்களை கதை விளக்குகிறது.

அதிகமாக ஆசைப்படாதே ஆசைப்பட்டால் விளைவு இப்படித்தான் என்னும் கணவனை தூக்கி எறிந்து வீட்டுக் கணவனாக தனக்காக தமது குடும்பத்துக்காக குழந்தைக்காக வாழும் ஒரு நல்ல மனிதரை வீட்டுக்கு வெளியே போ எனத் துரத்தியபின் அவன் படும் துயரும், அவளின் பிரிவும் குழந்தைகளின் பாடும் நன்கு இயல்பான நடைமுறை எதார்த்தத்துடன் சொல்லப் பட்டிருக்கின்றன.

 வேட்டியை அவிழ்த்துக் காண்பிப்பதான ஒரு கதாப்பாத்திரம் சொல்கிறது என்னைக் கூட ஒதுக்கி அடித்து வீழ்த்தி விடலாம் ஆனால் எனக்கும் பின்னால் என்னைப் போன்றே வரும் எல்லாரையும் வீழ்த்தி விட முடியுமா கடன் வாங்கினால் கட்டித்தானே ஆகவேண்டும் இல்லையேல் நிலை இதுதான் என அந்தப் பாத்திரம் வழியே  அனைவர்க்கும் பாடம் சொல்கிறது அந்தக் கதையும் படமும்...எஸ்பி ஐ மாணவர் படிக்க கடன் கொடுத்து விட்டு ரிலையன்ஸை விட்டு வசூல் செய்யச் செய்தது போல...தனியாரும் அதன் நகங்களும் எத்தனை வலிமையானவை அதில் சென்று சாதாரண மனிதர்கள் வசதி என்ற இச்சைக்கு ஆட்பட்டு சிக்கிவிடக்கூடாது என்று சொல்லாமல் சொல்கிறது...என்ன அந்த வீட்டை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் நாங்கள் வேறு இடம் போகிறோம் என எளிய வாழ்க்கைக்கு செல்வதை அதில் காட்டவில்லை.

Image result for thamira director
முன் அனுமதி கிடைக்காத ரயிலில் பயணம், பெண்குழந்தையுடன்  விபச்சாரம் நடைபெறும் ஒரு கீழ்த்தரமான விடுதியில் தங்குவது என கணவனின் வாழ்வு போக,,,இவளை மறைமுகமாக உபயோகிக்க நினைக்கும் இவளது பணிக்குழுத் தலைவன் அவனது இச்சையை இவள் தீர்த்து வைக்க வில்லை என்றறிந்ததும் அவளை வேலையை விட்டு உடனே அனுப்பி விட்ட பிறகு அவள் மாதாந்திர தவணையை வீட்டுக்கு கட்ட முடியாமல் வசூல் செய்ய வருபவர்களின் அட்டகாசத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தனது தோழிக்கு நேர்ந்த கதி தமக்கும் நேருமோ என்று கலங்குவது  இதனிடையே கணவன் இளங்கோ சந்திக்கும் நல்ல மனிதர்களால் சிக்கிக் கொண்ட சுழியில் இருந்து மீண்டு எப்படி மீள்கிறார்கள் மறுபடியும் வாழ்வில் எப்படி சேர்கிறார்கள் என்று சொல்கிறது இந்த 115 நிமிடக் கதைக்குண்டான படம்.

இந்தப் படத்தை ஜீ தமிழில் வெளியிட்டார்கள் நேற்று, அதன் முன் நாள் கே தொலைக்காட்சியில் சமுத்திரக்கனியின் நாடோடிகள் படம் வெளியிட்டார்கள் இப்போது ஒர் செய்தி ஆர் ஆர் ஆர் எனப்படும் இராம இராவண இராஜ்ஜியம் என்னும் பாஹுபலி இயக்குனர் ராஜ மௌலியின் இயக்கத்தில் 300 கோடி செலவில் தயாராகும் படத்தில் இராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு வில்லனாக சமுத்திரக் கனி நடிப்பதாகவும் இவரின் நாடோடிகள் இரண்டு திரைப்படம் பார்த்து இராஜமௌலி இந்த முடிவுக்கு வந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
Image result for aan devathai
தாமிரா, சமுத்திரக்கனி போன்றோரை இன்னும் தமிழ் உலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . தெலுங்கு இராஜமௌலிக்கு தெரிந்திருக்கிறது பயன்படுத்த ஆரம்பித்து விட்டார் சமுத்திரக்கனியை. இவர் ஏற்கெனவே சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் என தேசிய அளவில் பரிசு பெற்றதும் நமக்கு எல்லாம் நினைவிருக்கும்...இவரின் நோக்கம் நன்றாக இருக்கிறது சினிமா மீடியத்தை ஒரு நல்ல சமூக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகிறார் இவரின் சில முயற்சிகள் தோற்றபோதும் முயற்சிகளை விடாமல் தொடர்கிறார் இவர் போன்றோரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, January 26, 2019

இடைவெளிகள் இட வெளிகள்: கவிஞர் தணிகை

இடைவெளிகள் இட வெளிகள்: கவிஞர் தணிகை

Image result for space and distance


கீத்தா மேத்தா பத்மஸ்ரீ விருதை நிராகரிக்க, பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட இருக்க...தேர்தல் காலம் நெருங்க நெருங்க...தமிழகத்தில் ஆசிரியர் போராட்டம்.

ஒரு புறம் தற்காலிக ஆசிரியர்க்கு மாத ஊதியம் 7,500 ரூபாய் இருந்ததை ரூ. 10,000 உயர்த்தி வழங்க அரசு முடிவும், மேலும் புதிய ஆசிரியர்களை 7,500க்கு சேர்க்க இருப்பதாகவும், பணி நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை உடனே வேலைக்குத் திரும்பாவிட்டால் கடுமையான சட்டம் பாயும் என்றும் மந்திரிகளும், செயலாளர்களும் நீதிமன்றமும் எச்சரிக்கை விடுக்க....போராட்டக்காரர்களோ போராட்டத்தை கடுமையாக்கப்போவதாக செய்திகளில் தெரிவித்திருக்க...

இதெல்லாம் செய்தி படிப்பார்க்கு தெரிந்ததுதானே ஏன் இதை எல்லாம் நீங்கள் மறுபடியும் சொல்லிக் கொண்டு இருக்கிறீர் என நீங்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. காரணமும் இருக்கிறது.

தனியார் பள்ளிகளில் ரூபாய் இரண்டாயிரத்துக்கு பணி புரியும் ஆசிரியர்கள் இருக்கும் இதே நாட்டில் இலட்சக்கணக்கான ஊதியத்தைப் பெறும் வங்கிப் பணி ஊழியர்களும், ஆசிரியப் பணியிலும் அரசுப் பணியிலும் இருக்கும் நபர்களும் ரயில்வேயில் இருக்கும் பணியாளர்களும் அடிக்கடி யூனியன் சங்கம், வேலை நிறுத்தம், பயமுறுத்தல் உத்திகளில் அரசை மிரட்டி வருவது வாடிக்கையாகவே நடந்து வருகிறது...அதில் அடுத்து முக்கியத்துவமாகக் கருதப்படும் போக்குவரத்துத் துறையும்.

இதற்கெல்லாம் சரியான முடிவுகள் அரசால் எடுக்க முடியாமல் இருக்கும் நிலை ஒரு பக்கம்....எல்லாமே முதலாளித்துவ சிந்தனை மட்டுமே பரப்பி வரும் ஊடகங்கள், சமூகத் தளங்கள், மறுபக்கமாயும்,

சமூகப் பற்றோ பிடிப்போ பொது நலமும் இல்லாத மக்கள் அதன் அடிப்பக்கமாகவும் தாங்கி இருக்கும் அரிய குடியரசு இந்தியக் குடியரசு.

உங்கள் அனைவர்க்குமே தெரிந்திருக்கும் செய்தி: தனியார் பள்ளிகளின் நிலையும், அரசுப் பள்ளிகளின் நிலையும். வேடிக்கையாக சொல்வதுண்டு: அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்கள் வளமை செழுமையுடன் இருக்க பள்ளிகள் இன்னும் பாவமாகவே இருக்கின்றன பெண் பிள்ளைகளுக்கான ஓய்வறைகள் கூட சரியாக இல்லாமல். பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளில் தேவையான போதுமான நீர் குடி நீர் வசதிகள் கூட இல்லை. தனியார் பள்ளிகள் வளமாக செழுமையாக இருக்க அதன் பணியாளர் யாவரும் பரிதாப நிலையில் இருப்பதும் உண்மை. நாட்டின் முக்கியமான அமைப்பு அடிப்படையைக் கட்டமைக்கும் அமைப்பு அதிக முக்கியத்துவம் இன்றியும் மதுக்கடைகள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவும்...நமது குடியரசு தினங்கள் 70 ஆண்டுகளாக..
Related image
மேலும் சொல்ல இந்தக் குடியரசு தினத்தில் ஒன்று உண்டு அது  என்ன வெனில் இந்த நாட்டில் குடிமகன்கள்கள் பேருந்து நிலையத்திலும் ரயிவே சந்திப்புகளிலும் வானே கூரையாய் மண்ணே வீடாய் படுத்துக் கிடக்க, ரெயில்வே நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் திறந்த வெளிக் கழிப்பிடங்களாய் மாற்றிக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ளாதிருக்க...

இந்தியா ஒரு பெரும் வல்லரசு முப்படைகளில் என வருடம் தோறும் குடியரசுதின அணிவகுப்பு நடத்தி உலகையே அசத்திக் கொண்டிருக்கிறது.

எமது மாணவர்கள் ஆசிரியர்களை பயத்தில் ஆழ்த்தி கத்தி எடுத்துக் குத்திக் கொல்வதும் குடித்துவிட்டு பள்ளிக்குச் சென்று சட்டையை கழட்டிவிட்டு ஆசிரியரை மிரட்டி ஆடிக் கொண்டிருப்பதுமான காட்சிகளை வாட்ஸ் ஆப் போன்ற ஊடகங்களில்  கண்டு கொள்ள பகிர்ந்து கொள்வதைக் காணமுடிகிறது. அதெல்லாம் நம்பாதீங்க என்று ஒரு குரலும், நடந்ததைத்தானே நாங்கள் எடுத்துப் போடுகிறோம் என மற்றொரு குரலுமாய் இருக்கின்றன. இல்லையென்றால் இன்னொரு பக்கம் பள்ளிகளின் ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் என்ற பேரிலும் பள்ளியின் முதல்வர் என்ற பேரிலும் அவர்களை பூட்ஸ் காலால் வயிற்றில் உதைப்பதும், சிகையை கத்தரிப்பதும், கை கால்களை உடைப்பதும், அடித்த அடியில் மயக்கமாகி ஏன் சில நேரம் இறந்து விடுவதுமான நிகழ்வுகளும் இந்த நாட்டில் நடந்திருப்பதை செய்திகளாக நாம் படித்திருக்கிறோம்.

இன்றும் நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என அவர்களைத் தம் ஊரில் தக்கவைக்க போராடும் ஊர்களும் இருக்கின்றன ஓய்வு பெறும் ஆசிரியர்க்கு காசு திரட்டி புல்லட் பைக் எல்லாம் வாங்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் மறுத்து விட முடியாது.
Related image
குடி அரசு என அரசு விடுமுறை என்பதே தனியார் முதலாளிகளும் கடைப்பிடிக்காமல் இருக்கும் முறையில் நாட்டில் நிறைய நிறுவனங்களும், மேலும் சொந்த தொழில் செய்யும் நபர்களும் கடைப்பிடிக்காமல் இருப்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.

குடி அரசு என்றால் என்ன என்பதை நமது குடியரசில் உள்ள மக்களிடம் கேட்டு ஒரு சர்வே கணக்கீடு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுப் பாருங்கள் அதிலிருந்து நாம் மிகவும் அரிய விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் முடியும். நாம் நிறைவு செய்ய வேண்டிய இடைவெளிகளும், இடவெளிகளும் எவ்வளவு இருக்கிறது என...வணக்கம் 70ஆம் குடியரசு தினத்துக்கு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, January 23, 2019

மேட்டூர் ஆர்.சி.பிளான்ட எனப்படும் கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலை முன் பல உயிர்கள் ஊசாலாடிக் கொண்டிருக்கின்றன: கவிஞர் தணிகை

மேட்டூர் ஆர்.சி.பிளான்ட எனப்படும் கெம்ப்ளாஸ்ட் சன்மார்  ஆலை முன் பல உயிர்கள் ஊசாலாடிக் கொண்டிருக்கின்றன: கவிஞர் தணிகை

Related image

தினமும் இந்த தை மாத அடர் குளிரில் நான் பணிக்கு பேருந்து பயணம் செல்கையில் இரத்தக் கண்ணீர் வடிக்க நேரிடுகிறது இந்த ஆர்.சி.பிளாண்ட் கேட் வாயிலில் பல பயிற்சி தொழிலாளர்கள் படுத்துக் கிடக்கிறார்கள். உண்ணாவிரதம் நடந்தபடியும் இருக்கிறது.... ஆனால் என்னைப் போன்ற மனிதர்கள் யாவரும் அவரவர் வாழ்வை பார்த்தபடி அவர்களைக் கடந்த படி இருக்கிறோம்...மனிதர் என்பதற்கே வெட்கப்படுகிறேன். நாடு ஆட்சி என்பதற்கே சொல்ல நா கூசுகிறது.மனம் வெறுக்கிறது...

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதற்கண்டும்
சிந்தை தெளியாரடி கிளியே
செம்மை மறந்தாரடி....பாரதி...

மேட்டூர் மண்ணை நீர்வளத்தை கெடுத்த இந்த பெருமுதாலாளியான நிறுவனம், இன்று இந்த சிறு இளைஞர்களை குறிவைத்து பந்தாடி வருகிறது இதற்கு அரசும் உடந்தை.

கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி கொளத்தூர் மேட்டூர் பிரிவு ஒன்றுதான் போஸ்டர் அடித்து தமது கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

கடந்த நாடுதழுவிய அளவில் நடந்த வேலை நிறுத்தத்தில் இந்த பயிற்சி தொழிலாளார்கள் அதாவது அரசிடம் பாதி, ஆலையில் பாதி என ரூ. 8000 பயிற்சி ஊதியம்  பெற்ற‌ பெறும் ஓராண்டு பணி முடிவடைந்த இளைஞர்கள் வேலையை பணி நிரந்தரமாக்கக் கோரியதை மனதில் வைத்தும்
Image result for chemplast sanmar ltd mettur
ஏற்கெனவே இந்தக் கம்பெனியின் இரண்டாம் பிரிவு ஒரு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியதன் எதிரொலியாக‌ எங்கே சங்கங்கள் வலுவடைந்து விடுமோ என்று பணக்கார ஆளும் வர்க்கம் குறிவைத்து காய்நகர்த்தி நாடு தழுவிய வேலை நிறுத்த நாளன்று தேர்வு வைத்து வராதவர்களை நீக்கி விட்டதாக அறிவித்து விட்டது. இந்த இளைஞர்கள் தொழிற்சங்கங்களை நம்பி அன்று சென்று தேர்வு எழுதுவதற்கு மாறாக வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டு தங்களது வாழ்வில் ஒரு பேரிடரை சந்தித்து விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு தங்களது தலைக்கே தாங்களே குறிவைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவர்களுடன் சேர்ந்து சாகவேண்டுமானால் துணிந்து சென்று சாகலாம்

ஆனால் இவர்களை நாம் செத்தால் கூட காப்பாற்ற முடியாமல் இருக்கும் நிலையே நிலவுகிறது. இந்நிலையில் தொகுதியின் மாபெரும் அரசியல் வாதிகள் எல்லாம் கூட செய்தி தெரிந்தும் தெரியாதார் போல இருந்து வருவதுதான் வேதனைக்குரிய துன்பம். ஏன் என்றால் அவர்கள் தேர்தலுக்கும் முன் இவர்களை எல்லாம் கண்டு கொண்டதுண்டு. இப்போதும் தேர்தல் வருகிற நேரம் காலம் வந்து விட்டதல்லவா?
Image result for chemplast sanmar ltd mettur
என்று தணியும் இந்த இளைஞர்களின் சோகம், இறந்த பின்னா?

அவர்கள் என்ன வேலைதானே கேட்கிறார்கள், நிரந்தரமாக‌
அவர்கள் என்ன ஊதியம் தானே அதிகம் கேட்கிறார்கள் வாழ்க்கை நடத்த‌

அதற்கா இந்த பெரும் தண்டனை ...அரசும் இவற்றுக்கு யாவும் உடந்தைதான்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மேலான தடையும் மக்கிய மனிதர்களும்: கவிஞர் தணிகை

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மேலான தடையும் மக்கிய மனிதர்களும்: கவிஞர் தணிகை

Image result for usage of one time using plastic carry bags


பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்ற ஒரு அரசின் தடை எந்நிலையில் இருக்கிறதோ

பொது இடங்களில் பான் பராக், குத்கா, பான் மசாலா பயன்படுத்த தடை என்ற ஒரு அரசின் தடை எந்நிலையில் இருக்கிறதோ

அதை விட கேவலமாக ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மேலான தமிழக அரசின் தடையும் இருக்கிறது.

நீலகிரியில் நெகிழிப் பைகள் உல்லாசப் பயணிகளிடம் காண் நேர்ந்தால் ரூபாய் இருநூற்று ஐம்பது அபராதமாம்

ஆனால் சேலத்தில் நான் சென்று வரும் இடங்களில் அதாவது மேட்டூர் முதல் சேலம் மற்றும் அரியானூர் வரை நான் இந்த சில நாட்களில் கண்டது இந்த மக்கிப் போகும் மனிதரிடம் இந்த மக்காத பைகள் புழக்கத்தில் இருப்பதாகவே.

ஒரு மருத்துவர் இப்படிப்பட்ட நெகிழிப்பையில் தாம் சிற்றுண்டி வாங்கிச் சென்றார் நானே கண் கூடாகவே பார்த்தேன்

சேலம் சந்திப்புக்குச் செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் இன்னும் தேநீர் நெகிழிப்பைகளில் தயாரிக்கப்பட்டு ஊற்றி கட்டிக் கொடுக்கப்படுவதை கண் கூடாகவே கண்டேன்.

எனது துணைவியார் நேற்று சென்று வாங்கி வந்த மளிகைப் பொருட்களில் இரண்டு பொட்டலங்கள் செய்தித் தாள்களில் பழைய மாதிரி கட்டப்பட்டு சணல் கயிறுகள் மூலம் பிரியாமல் இருக்கக் கட்டப்பட்டிருந்தன என்பது வரவேற்கத் தக்கதாகவே இருந்தாலும் மற்ற பாக்கெட்கள் அதாவது பெரிய கம்பெனிகளின் பாக்கெட் பைகள் அப்படியேதான் இருந்தன...
Image result for usage of one time using plastic carry bags
நான் எனது விலாசத் தொடர்பு அட்டையை ஒரு நெகிழிப்பையில் போட்டு வைத்திருப்பது வேர்க்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக வைத்திருப்பதைக் கூட எடுத்து விட்டேன்...நான் மாறி விட்டேன்...ஏன் எந்தப் பொருளையுமே நெகிழிப்பைகளில் வாங்குவதை அறவே பல ஆண்டுகளாகவே தவிர்த்தே வருகிறேன்.

இந்நிலையில் ஒரு நாள் புகைவண்டிப் பயணத்தின்போது ஒரு ரயில்வே ஊழியர் அல்ல அலுவலர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து விட்டு மேடையில் அவர் எம்.ஜி.ஆர் பாடலுக்கு நடனமும் ஆடியதை அவரே விவரித்தபடி மற்ற இருவரிடம்,,.என்னுள் உள்ளே புகைந்து கொண்டிருக்க...அவர் சொல்கிறார் என்ன ஆட்சி இது...குஸ்கா முப்பத்தைந்து ரூபாய்க்கு வாங்கினேன்  பைக்கு கட்டிக் கொடுக்க என ஐந்து ரூபாயாம் ஆக மொத்தம் நாற்பது ரூபாய் எடுத்துக் கொண்டான் கடைக்காரன் பிளாஸ்டிக் பையாக இருப்பதே பரவாயில்லை...நாசமாகட்டும் இந்த தடை ...என்றெல்லாம் பேசியபடி வந்தார் அந்த அறிவு ஜீவி.

அரசு இந்த விவகாரத்தில் பெரும் அறுவடை ஒன்றை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஏன் எனில் மது பான வியாபாரத்தை தடை செய்யாத அரசு, இந்த நெகிழிப்பை விசியத்தில் மட்டுமென்ன ஒழுங்காகவா நடந்து கொள்ளப் போகிறது>?

இல்லை இல்லை இருக்கவே போவதில்லை

ஏன் எனில் ஒரு நல்லாட்சி புரியும் ஒரு அரசு எனில் மதுபான ஆலைகளை எல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் மூடிவிட்டால் பிரச்சனைக்கு எளிதான முற்றுப் புள்ளி
Image result for usage of one time using plastic carry bags
ஒரு நல்லாட்சி புரியும் அரசு எனில் நெகிழிப்பைகள் தயாரிக்கும் அத்தனை ஆலைகளுக்கும் மூடு விழா நடத்தி விட்டால் ஒரு எளிதான முற்றுப்புள்ளி

பான் பராக், குத்கா,பான் மசாலா கம்பெனிகள்,
சிகரெட் பீடி கம்பெனிகள் இவற்றுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தி விட்டால் இந்த கண்துடைப்பு சட்டஙக்ளும் ஏமாற்று திட்டங்களும் தேவைப்படுமா என்ன?
Image result for usage of one time using plastic carry bags
ஆக எல்லா இடங்களிலும் சட்ட ஒழுங்கு கடைப்பிடிக்கப் படுவதாக ஒரு பாவனை நிலவுகிறது...ஆனால் எல்லா இடங்களிலுமே கடுமையான சட்டம் அமல்படுத்தப் படுவதாக எல்லாம் எவரும் நினைக்க முடியாது...ஏன் எனில் எல்லா இடங்களிலும் இந்த அழிக்க முடியா அரக்கன் நெகிழிப்பை பூமி அழிப்பான் உயிர்கள் கொல்லி வழக்கம்போல் புழக்கத்தில் பழக்கத்தில் பயன்பாட்டில் இருந்தபடிதான் இருக்கிறது... அதன் ஆபத்தைப் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் சொல்லப் புகுவது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல...எனவே அது பற்றி தனியே அறிந்து கொள்ளுங்கள்...
Related image
இதனால் பெரும் பயன் பெற்றார் எவரோ அவருக்கே வெளிச்சம்...

ஹெல்மெட் தலைக்கவசம் சட்டம் அவ்வப்போது வந்து போய் எவர் எவரோ பைகளை நிரப்புவது போல...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Monday, January 21, 2019

நாட்டு நடப்பும் வீட்டு நடப்பும் என் பார்வையில்: கவிஞர் தணிகை

நாட்டு நடப்பும் வீட்டு நடப்பும் என் பார்வையில்: கவிஞர் தணிகை

Image result for marubadiyumpookkum


தேர்தல் காலம் ஆரம்பித்து விட்டது. அணி சேரும் முயற்சிகள் துவங்க ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ் ராகுல் பிரதமர் வேட்பாளராக நிறைய பேரால் முன்மொழிய முடியாதபோதும் மோடிக்கு எதிர்ப்பு செய்வதில் ஒரு ஒற்றுமையின் அணியாக இருக்கிறார்கள்., மமதா அணி சேர்ப்பு அதில் ஸ்டாலின் முதல் சத்ருகன் சின்ஹா  வரையும் உ.பியில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் இப்படி எதிரும் புதிருமானவர்கள் யாவரும் பாரதிய ஜனதாவுக்கு மோடிக்கு எதிராக அணி திரள்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.கவும் கருணாநிதியும் மறுபடியும் ஆட்சிக் கட்டில் ஏறிவிடக்கூடாது என கடந்த சட்டசபைத் தேர்தலில் மாறுபட்டு அணி சேராமல் கெடுத்த வைகோ, திருமா,விஜய்காந்த் ஆகிய கட்சியினர் எல்லாம் கூட தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பாகவே இருக்கிறார்கள்.

தமிழகத்தில நடந்தது மாதிரி இந்த உதிரிகள் எல்லாம் வாக்கைப் பிரித்து, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை தனிப்பெரும் மெஜாரிட்டி வராமல் செய்து, இராகுல் மேல் இருக்கும் பிடிப்பின்மையால் இரண்டாம் அணிக்கு எதிராக மூன்றாம் அணி என அவர் வரக்கூடாது என மோடியையையே மறுபடியும் ஆள விட்டு விடுவார்களோ என்ற கோணமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மொத்தத்தில் நடந்து முடிந்து இன்னும் சில மாதங்களே மீதம் இருக்கும் இந்த ஆட்சி பணம் படைத்தாரின் ஆதரவான ஆட்சிதான்.

செல்பேசிக்கு எல்லாம் மாத வாடகை வந்துவிட்டது.

வங்கியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மக்களின் சேமிப்புப் பணத்தை ஏழைகளின் பணத்தை முடக்க முடியுமோ அப்படி, ஒன் டைம் பாஸ்வேர்ட், செல்பேசி எண்களின் அவசியம், ஏடி எம் கார்ட் மறுமலர்ச்சி இப்படி பல வகையிலும், ஏன் சமையல் எரிவாயு இன்னும் கூட இலவச இணைப்பு என்ற பேரிலும்

பெட்ரோலியப் பொருட்களின் விலைவாசி ஏற்றம், எல்லா மனிதர்களின் அன்றாடத் தேவைகள் பாலும் விலைவாசி ஏற்றம்...

பணம் படைத்தாருக்கென சுலபமான வாழ்க்கை...

குடிநீருக்கும் கூட ஏழை எளியார் கை ஏந்தும் நிலை, மருத்துவம், கல்வி ஆகியவை தனியார் கையில்...

நாட்டு நடப்பு இப்படி இருக்கையில்

வீட்டு நடப்பில்
ஒரு புத்தாண்டு நிகழ்வில் கிடைத்த விருதும், அதன் வழியே புத்தகம் விற்பனை மற்றும் போக்குவரத்துக்கான செலவு எல்லாம் சேர்த்து நாலாயிரம் தந்ததை எல்லாம் சேர்த்து ஒரு டெல் டெஸ்க் டாப் மானிட்டர் வாங்கி விட்ட செலவு. செலவு எப்போதும் எமக்கு முன் வரும் பின் தான் வருவாய் வரும் என்பதற்கேற்ப...

தமிழக அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் பொங்கல் திருவிழா ரொக்கம் மகனது கைகளை வலுவாக்க கனம் தூக்கி வாங்கி அதை செலவளித்துவிட்டான். டம்புள்ஸ் என்பதற்கு நேரடியாக சரியாக மொழிபெயர்க்க நேரம் நிறைய தேவைப்படும் என நினைக்கிறேன்

அந்தக் காலத்தில் டம்புள்ஸ் என்பது ஒன்று கற்களால் செதுக்கப்பட்டிருக்கும் அல்லது இரும்பில் இருக்கும். இது ரப்பர் கார்க் போன்ற மொத்தமான ரப்பரால் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல வேளை அந்த 16 கிலோவில் ஒர் 3 கிலோ எடை என் இடது கால் பெருவிரல் மேல் விழுந்தும் தப்பித்துக் கொண்டேன். பழைய காலத்தின் கற்கள், அல்லது இரும்பு போன்றதாக இருந்தால் தவறி விழுந்த கனமான எடையால் எனது இடது கால் பெருவிரல் துண்டாகி இப்போது இந்தப் பதிவைப் போட நான் இயன்றவனாக இருந்திருக்க மாட்டேன்.

கோபெ நாராயணசாமி என்னும் தலைமை மற்றும் தமிழாசிரியராக மேட்டூரில் தமிழ் சங்கம் நடத்தி வந்த ஒரு நல்ல மனிதர் மறைந்து விட்டார்.அவர் எனது முதல் நூல் வெளியிட்டபோது தமிழருவி மணியனை அழைத்து வந்து விழா நடத்தி அதில் எனது நூலை ,,,,நான் அதை எந்த விழாவும் இன்றி விற்க ஆரம்பித்திருந்ததை  கண்டறிந்து விழாவில் போஸ்டர் எல்லாம் அடித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூலை எல்லாம் ஒரு விலைக்கும் வாங்கிக் கொண்டு அந்த விழாவில் வெளியிட்டு அவரும் மகிழ்ந்து எனையும் மகிழ்வித்தார். கோனூர் பெருமாள், சிந்தனையாளர் அர்த்தனாரி போன்ற பெரியவர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில் எனக்கு போர்த்திய பொன்னாடையை நான் உடனே விலக்கி மடித்து வைக்காமல் தோளில் ஏந்தியபடியே எனது கவிதைத் தொகுப்பின் வெளியீட்டிற்கான ஏற்புரையை செய்தது இன்றும் எனது நினைவுள்.

ஆனால் அந்த மனிதரின் மறைவுக்கு என்னால் கலந்து கொள்ள முடியாமலே போனது. வாட்ஸ் ஆப் செய்தி மூலமே தெரிந்து கொண்டேன். மேலும் மற்றொரு நண்பர் ஜெயச் சந்திரன் என்பார் கலந்து கொண்ட நிகழ்வை எல்லாம் எனக்கு சொல்லிப் பகிர்ந்து கொண்டார்.

கொ.பெ.நாவும் நரேந்திரனும் என்று ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன். அதில் 39 வயதே ஆன இளைஞர்  விவேகானந்தரின் வாழ்வை நூற்றாண்டுக்குப் பின்னும் உலகு சிந்திக்கிறது... இளைய ராஜா ஞானிதான் ஆனால் அவருக்கு தான் என்ற கர்வம் கலைஞர்களுக்கே உரியது அதிகம், மேலும் தான் மட்டுமே இசையமைப்பாளர் வேறு யாரும் இல்லை என்று சொல்லுமளவு போய்விட்டதாக ஊடகங்களில் வந்தது எல்லாம் மெய்யாய் இருக்குமோ என்றெல்லாம் சிந்திக்குமளவு அவர் பேசத் தெரியாமல் பேசியிருக்கிறார். பொதுவாக அவருக்கு பொது இடங்களில் எப்படி பேசுவது என்று தெரியாத அளவு அவர் உண்மையிலேயே பெரிய ஞானிதான்.
Image result for marubadiyumpookkum
தத்துவம், ஆன்மிகம் பாடல்களுக்கே அவரது குரல் பொருத்தம் என்றபோதும் ஒரு நல்ல பாடலை மற்ற பாடகர் பாடும்போது நன்றாக் இருக்கும் என்றால் தானும் பாடுவார், மேலும் காதல் பாட்டெல்லாம் பாடி தமிழ் கூறும் நல்லுலகத்தின் மேல் அவர் தமது மேலாண்மையை நிர்பந்தித்து திணிப்பார்.  என்றாலும் அவர் ஞானிதான் அதில் வேறுபட்ட கருத்து இருப்பதற்கில்லை

இதை எல்லாம் எழுத ஆர்வம் கொண்டிருந்த நிலையில் எனது மேஜைக் கணினியின் திரைக் காட்சி பழுதுபட்டாகிவிட்டது . அதை புதிதாக மாற்றிக் கொண்டு எழுதுவதற்கு இத்தனை நாட்கள் பிடித்தது...

பொங்கல் போய்விட்டது...இனி வரும் இந்த ஆண்டில் வரும் விடுமுறை யாவும் சனிக்கிழமைகளிலேயே வருகிறது ஒரு கவலைதான்.

கடந்த சனிக்கிழமையில் கூட ஒரு பள்ளிக்கு சென்றிருந்து சுமார் 700 மாணவ மணிகளை சந்தித்து வந்தேன். எனது எண்ணெய்க்குளியல் நாளான அதை பொதுநலத்திற்காக மாற்றிக் கொண்டு தனிமனித நலத்தை தள்ளிப் போட்டு ஒரு தலைமைப்பண்புடன்  அன்று நடந்து கொண்டேன். இல்லையெனில் பொதுவாக வசதிக் குறைவான பணி நாளாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விடுமுறை எடுக்க வாய்ப்பு இருந்தால் எடுத்துக் கொள்வதே என் பழக்கம்.

 வங்கிகள் எல்லாம் ஏடிஎம் புதிது, அதை செயல்படுத்தவேண்டிய புதிது, அதன் பின் கடவுச் சீட்டு எண் குறித்த தகவல் புதிது என சாமான்ய மக்களுக்கு பலவகையிலும் தொந்தரவு செய்து கொண்டு அவர்களது சேமிப்பு பணத்தை முடக்குவதில் குறியாக உள்ளன என்பதை பலரும் பகிர்ந்து கொண்டனர். ஆனால் இணையம் பற்றி அறிந்திடில் இவை மிக எளிதே. ஆனால் இந்த வங்கிப் பணியாளர்கள் பெரும்பாலான வாடிக்கையாளர்க்கு அதை பெரிதான பிரச்சனையாக்குகிறார்கள் உடன் செல்பேசி கம்பெனிகளும் தம் பக்கத்திற்கு மாத வாடகை வசூலிக்க ஆரம்பித்து விட்டன. இதற்கு ட்ராய் உடந்தையாம், வேலிக்கு ஓணான் சாட்சியாக...

விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத தந்தையை விஸ்வாசம் இல்லாமல் கேவலம் ஒரு சினிமாவுக்காக குத்திக் கொன்ற தனயனைப் பற்றிய செய்தியை பத்திரிகையில் படிக்க நேர்ந்தது எனது காலத்தில் நாங்கள் படித்தறிந்த ஒரு அவல நிலை.

சுமார் ஒன்னரை ஆண்டுக்கும் பிறகு எப்படியோ மிரட்டி உருட்டி எங்கள் வீட்டருகே இருக்கும் தெரு மின் விளக்கை கம்பத்தில் எரிய வைத்திருக்கிறேன்.

எதையும் எதிர்பார்ப்பவர்க்கு(ம்)
எதையும் எதிர்பார்க்காதவர்க்கும்(ம்)
ஏமாற்றம் இல்லை

பால் நிலா பாலை நிலா பாழ் நிலா
பார் நிலா பா நிலா நிலா

என்றெல்லாம் எனது சுவர் எழுத்துகளில் மறுபடியும் வாசகங்கள் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளன.

மறுபடியும் பூக்கும் வரை
Image result for marubadiyumpookkum
இது எழுத வேண்டுமே என்று எழுதப்பட்ட எனது உளறல்கள்...தொடர்பு விட்டு விடக்கூடாதே என்பதற்காக...
 பார்த்த இரண்டு படங்களைப் பற்றி நான் எழுத தயாரில்லை



கவிஞர் தணிகை.