Wednesday, September 2, 2026

உயிரின் வேகம்: கவிஞர் தணிகை

 உயிரின் வேகம்: கவிஞர் தணிகை



நேற்றைய தொடர்ச்சி இன்று இன்றின் தொடர்ச்சி நாளை நாளையின் தொடர்ச்சி..

இப்படியாக காலம் நகர்ந்து செல்கிறது நிறைய கூட்டிக் கொண்டு நிறைய விட்டு விட்டு


இதில் பழையது புதியது என்றேதுமில்லை, இதில் பழையது புதியது என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது...


உயிர்கள் அணுக்கள் புதுப்பித்தல் துவங்கி பழைய அணுக்கள் இறப்பது முதல், இரவு பகல் மாறுவது வரை


உயிர்கள் பழையதாகி பசி தாகம் தீர்த்து வளர்ந்து இயல்பாக மறைவது இயற்கை


ஆனால் ...


விபத்துகள் தாம் எத்தனை எத்தனை எப்படி எப்படி எவ்வளவோ?


ஒரு இளைஞர் எந்தவித இடையூறும் இல்லாத காலியான சாலையில் என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று சரியாக சொல்ல வாய்ப்பின்றி சாலையின் வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு இறந்தார் இது ஒரு அண்மைச் செய்தி எங்கள் பக்கத்தில்...


சில காலத்திற்கும் முன், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை கியரிலேயே விட்டு விட்டு தந்தை இருந்திருக்கிறார். ஒரு ஏழெட்டு வயது சிறுமி அதில் ஏறி சாவி அப்படியே இருப்பதைக் கூடத் தெரியாமல் கியரை முறுக்கி அந்த வண்டி அவர்கள் வீட்டு சுவற்றிலேயே ஸ்டேண்ட் எடுபட்டு மோதி மண்டையில் அடிபட்டு இறந்தார். இதுவும் எங்கழ்ள் குடியிருப்புக்கு அருகாமையில் நடந்த செய்தி...


இப்படி உயிரின் வேகம் கடல் அலையின் வேகத்தோடு, ஆறுகளின் அடங்காமையின் வடிவத்தோடு, மலையாக இறுகிய பனிப்பாறைகள், பனிக் குன்றுகள், பனி மலைகள் உருகுதலோடு, எரிமலை வெடிப்புகளோடு, நிலநடுக்கத்தோடு, சுனாமிகளோடு,காட்டுத் தீ வடிவத்தோடு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...


அதில் நீங்களும் உங்களைச் சார்ந்தோரும் நலத்தோடு வாழ எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.எனவேதான் பெரியோர்கள் பிள்ளைகளை அதைச் செய்ய வேண்டாம் இதைச் செய்ய வேண்டாம் அப்படி இருக்க வேண்டாம் இப்படி இருக்க வேண்டாம் என கட்டுப்படுத்துவது மட்டுப்படுத்துவது எல்லாம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment