Saturday, February 24, 2018

கமல்ஹாசன் ஒன்றும் எம்.ஜி.ஆர் அல்லவே: கவிஞர் தணிகை

கமல்ஹாசன் ஒன்றும் எம்.ஜி.ஆர் அல்லவே: கவிஞர் தணிகை


Image result for jayalalitha birthday

கலாம் படித்த பள்ளிக்குள் செல்வதை மாவட்ட கல்வி நிர்வாகம் தடுத்ததும், மதுரையில் நடைபெற்ற முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவுப்புக் கூட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பளிக்கத் தவறியதும் அவர் மேல் எல்லாக் கட்சிகளுமே ஒரே குரலில் பாய்ந்து அவரைத் தாக்கிப் பிடுங்கி வருவதுமான பேச்சுகள் எனக்கு ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதியின் அக்கப்போரைப் பொறுக்க மாட்டாது எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து வெளி வந்து அ.தி.மு.க என்ற புதுக் கட்சியை ஆரம்பித்தபோது அப்போது ஆட்சிக் கட்டில் இருந்த கருணாநிதி கொடுத்த தொல்லைகள் அளப்பரியன...ஆனால் அதை எல்லாம் தாங்கிய கட்சி வளர்ந்தது... அப்படி எல்லாம் கமல்ஹாசன் வளர வழி இல்லை போலிருக்கிறதே...நமது ஜனநாயகம் இந்தியாவில் தமிழகத்தில் அவ்வளவு வலுவிழந்து கிடக்கிறதே...

அன்று...

ஏன் பூலாவரி என்ற இடத்தில் சுகுமாறன் என்ற எம்.ஜி.ஆர் கட்சிக்காரரை கொலை செய்தார்கள்...அந்த வழக்கு நெடுநாளாக நடைபெற்று ஒன்றுமில்லாமல் போயிற்று...

இப்படி எல்லா இடங்களில் இருந்தும் வேதனைப்படுத்த வேதனைப்படுத்த வேதனைப்பட வேதனைப்பட அந்தக் கட்சி மேலும் மேலும் வளர்ந்தது...ஆனால் இன்று அதே போல.. எதிர்ப்பைத் தெரிவிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை கமலஹாசனை முடக்கிப் போடலாம் என்று அரசு ஒரு முனைப்புடன் முயல்வதாகத் தெரிவதை மேற்சொன்ன கலாம் படித்த பள்ளியில் அவர் நுழையக் கூடாது என்று தடுத்ததிலிருந்தும் அவரை கடுமையாக எதிர்த்து வசனக்கணைகளை வீசுவதும், அவரது கூட்டத்திற்கும் அவரது மேடையேற்றத்திற்கும் சரியான பாதுகாப்பளிக்காமல் வேடிக்கை பார்ப்பதுமான செயல்பாடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

எரிவாயு மானியத்தை விட்டு விடுங்களேன் எனக் கேட்கும் மோடி ஒரு இலட்சத்துக்கும் மேலான மானிய விலை ஸ்கூட்டி கொடுக்கும் ஆரம்ப விழாவை ஆரம்பிக்க சென்னை வருகிறாராம்...கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ளப் போகிறாராம்.

நல்லது...இன்று கட்சித் தலைவி நிரந்தர முதல்வர ஜெவுக்கு கட்சித் தலைமையலுவலகத்தில் சிலை வைத்ததும், சட்டசபையில் படம் வைத்ததும் இவர்கள் அவருக்கு செய்த நன்றிக் கடனைக் காட்டுகிறது..

ஆனால் சட்டமு, நீதியும் அவருக்கு வேறு பேர் அல்லவா சொல்கிறது...
இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது தானே...நீங்கள் வேறு சொல்ல வேண்டுமா என ஒரு நண்பரின் குரல் கேட்கிறது...
எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்..

Image result for jayalalitha birthday


மேலை மேற்கத்திய ஏன் கிழக்கில் இருக்கும் தாய்லாந்து போன்ற நாடுகளில் எல்லாம் கூட வரலாற்றை, சாதனைகளை என்றும் தொடரும் வண்ணம் போற்றிப் பாதுகாப்பதை தமது தலையாய கடமையாக மக்களும் அரசும் கொண்டிருக்கிறார்கள்....பழங்கால புகழ் வாய்ந்த சிற்பங்களை , கோவில்களை, ஏன் நாட்டுக்கு நல்லது செய்த தலைவர்களின் நினைவிடங்களை எல்லாம் போற்றிப் பாதுகாக்கிறார்கள்..கலாம் படித்த பள்ளி அனைவர்க்கும் பொதுவான அரசுடைமைச் சொத்தாக மாற்றப்பட வேண்டும்..அது எவர் வந்தாலும் எப்போது வந்தாலும் பார்க்க அனுமதி அளிக்கப் பட வேண்டும்...இது போன்ற சிறு பிள்ளைத் தனமான குறுகிய நோக்குடன் தனது கட்சி தனது கருத்து எது எப்படி இருக்கிறதோ அதற்காகவே ஆள நினைக்கும் இந்தக் கட்சிகளை அப்புறப் படுத்த வேண்டியது அவசியம்....ஆனால் இன்னும் 3 வருடம் இந்தக் கட்சியும் விடாது போலிருக்கிறதே...மோடிக்கு 25 எடப்பாடிக்கு 13 என பாராளுமன்றத் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு தேர்தலை சந்திப்பார்கள் போலிருக்கிறதே இவர்கள் போக்கு...ஸ்கூட்டிக்கு மான்யம் தரும் அரசு வாட்ஸ் அப்பில் வடிவேல் கேட்பது போல குவார்ட்டருக்கு என்று மானியம் தரப்  போகிறார் என்று குடி மக்கள் கேட்பது வரை விட மாட்டார்கள் போலிருக்கிறதே....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: