Wednesday, February 14, 2018

ஆணவம் அடியோடு அழிந்த காதை: கவிஞர் தணிகை

ஆணவம் அடியோடு அழிந்த காதை: கவிஞர் தணிகை
Image result for sivarathri nandanar


இதுவும் சிவ ராத்திரி அன்று நடந்த திருவிளையாடல்தான். ஒரு ரகசிய வெற்றியின் உண்மைச் சம்பவம்தான். வாழும் இயற்கை வழித்தடமே கடவுள் என்பதுதான், கர்ம யோகத்தில் இருப்பார் கடவுளைக் கூட கோவில் சென்று கும்பிட வேண்டிய அவசியமில்லை என்பதுதான்.

இராஜராஜன் வழக்கப்படி நடைப்பயிற்சி முடித்து விட்டு எப்போதும் அமரும் முனியப்பன் கோவிலில் சென்று தனித்துவ தியானம் செய்ய முயன்றான். அன்று செவ்வாய்க் கிழமையாதலால் பெண்களும் சிறுவர்களும் இரண்டு நாய்களும் கோவில் படி ஏறி வந்து முனியப்பனை பார்த்து பேட்டி காண முற்பட்டன...ஒரு வயதான சிவப்பு சேலை அணிந்த முதியவள் இருக்குமிடமே தெரியாமல் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்ததை இராஜ இராஜன் கொஞ்ச நேரம் கழித்துதான் பார்த்தார். இந்த முதியவளை இவர் இங்கு பார்ப்பது இரண்டாம் முறை. அந்திமக் காலம் இவர் இந்தக் கோவிலில் வந்து இருந்து தனது காலத்தை முடிக்கப் பார்க்கிறார் என்று தோன்றியது அவருக்கு. இது போல அங்கு எவருமே வந்து இருந்ததில்லை. அந்தப் பகுதியிலேயே இயற்கை சூழ் மிக உயரமான இடத்தில் இருக்கும் சீமாட்டுக்கல் முனியப்ப சாமி கோவில் அது. அது தோன்றிய பின் அங்கு நிறைய கோயில்கள் மாரியம்மன், கபாலீஸ்வரர் எனத் தோன்றிவிட்டன‌... நாய்களும், சிறுவர், மற்றும் பெண்களும் தங்களது பிரார்த்தனையை முடித்து விட்டு சென்று விட்டனர்.ஆனாலும் இராஜ இராஜனுக்கு மன ஒருமிப்பு நிகழவில்லை

சரி என வழக்கம் போல வீடு திரும்ப முற்பட்டார். போகாதே என்று ஒரு உள்குரல்.நடைப்பயிற்சி ஆரம்பிக்கும்போதே யோகக் கிருஷ்ணன்  இராஜராஜனின் நண்பர்
கூப்பிட்டார், காதில் விழாதது போல இராஜராஜன் பல அடிகள் நடந்த பின்னும் யோகக் கிருஷ்ணனின் குரல் பெயர் சொல்லியே இரண்டு முறை அழைக்க , இனியும் நின்று திரும்பிப் பார்க்காமல் போவது அழகல்ல என, திரும்பி வந்தார், கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து யோகக் கிருஷ்ணனன் தாடியும் காவியும் வெளிப்பார்வைக்கு சாமியார் ஆனால் கெமிகல் கம்பெனி முதலாளி வெளி வந்து இன்று 7 மணி வரை பிரதோச நேரம் முடிந்ததும் நாலு கால வேள்வி இருக்கிறது, நீங்கள் வரணும், பேசணும், ஜட்ஜும் நீங்களும் தான் பேசவேண்டும் என்றார்.

என்ன பேசுவது? என்றார் இராஜராஜன்,
என்னைத்தான் திட்டுங்களேன் என்றார் யோகக் கிருஷ்ணன்
அதுதான் நேரிலேயே திட்டுகிறேனே , அது போதாதா என்றார் இராஜராஜன்.

அதற்குத்தான் போகாதே என்று உள் உணர்வின் குரல் எச்சரிக்கிறதோ என்ற நிலையில் அதுதான் நாம் ஏற்கெனவே முடிவு செய்தாகிவிட்டதே என வழக்கம்போல அருகிலிருந்த புதுரெட்டியூர் மாரியம்மன் கோவில் வழி சென்று குறுக்கு வழியில் முட்களிடை காபாலீஸ்வரர் கோவில் வாசல் வழியே வீடு வரும் சாலைக்கு வர முற்பட்டார்.

Image result for karma yoga


மஹா சிவராத்திரியை முன்னிட்டு கூத்து, விழா என பந்தல் போடப்பட்டிருந்தது கபாலீஸ்வரர் கோவில் வாசலில். பார்த்துக் கொண்டே வாசலில் இவர் வெளியேறவும் தேவரசர் வெண்ணிற வேட்டி சட்டையுடன் கோவில் பந்தலுக்குள் வரவும் சரியாக அமைந்திருந்தது. ஓ. அதுதான் நம்மை போகாதே என்று தடுத்ததோ? என தன்னிலை உணர்ந்து கொண்டார் இராஜராஜன்.

இவரை தேவரசரும் பார்த்தார், அவரை இராஜராஜனும் பார்த்தார். இருவருமே பேசிக் கொள்ளவில்லை. தேவரசரின் மனைவி பின்னால் வந்து கொண்டிருந்தார் எனவே அவரை திரும்பி பார்த்தபடி தேவரசர் உள் நுழைந்தார் இராஜராஜன் வெளியேறினார்.

நினைவு அலைக்கழித்தது. தேவரசர் அந்த மேட்டூர் மாநகரிலேயே மாபெரும் பள்ளியின் முதல்வர், தாளாளர்ஏன் ஒரு அறக்கட்டளையின் உறுப்பினர் கூட ஆகிவிட்டார் என்று செய்தி. முன்னால் இருந்த கணபதியாரை சரியில்லை என இவர் வந்தார். சுமார் 4000 மாணவ மாணவியர்க்கு சென்று சேர வேண்டிய அறிவுச் செறிவு நிகழ்வைத் தடுத்து விட்டாயே நீயெல்லாம் கபாலீஸ்வரரை வணங்க வந்துள்ளாயே? உனது வேண்டுதல் நிறைவேறுமா?

பாவிகளை இரட்சிக்கவே வந்தேன் என கிறித்தவத்தில் யேசு   வெளிப்படையாகவே சொல்கிறார் . ஆனால் இந்து மதக் கோவில் அப்படி அல்லவே!...ஒரு வேளை இந்த செயல்பாட்டையும் அப்படி புரிந்து கொள்ளலாம்.

இந்த மூலவர், அதைச் சுற்றி உள்ள அத்தனை கற்சிலைகள், நாலாபுறம் உள்ள அஷ்டலிங்க பிரதிகள் யாவற்றையும் நீ வணங்க வந்துள்ளாயே அவை எல்லாம் அந்த சாமியார் கிருஷ்ணன் செய்தது என்று நினைத்தாயா? இல்லை அந்த கர்விக்கு அந்த வாய்ப்பு என்னதான் செலவு செய்திருந்தாலும் 3 முறை முயன்ற போதும் அவர் செய்யச் சொன்ன போது அந்த  லிங்க மூர்த்தி பின்னப்பட்டன, கோடு விரிசல் விழுந்தன, சரியாக செய்ய முடியாமல் போயின..

கடைசியில் இராஜராஜன் கேட்டுக் கொண்டபடி எல்லாரும் செய்ததால்தாம் எல்லா சிலைகளுமே வடிவம் பெற்றன வந்தமர்ந்தன...அது ஒரு நெடுங்காதை . இராஜராஜன் 18 மாதங்கள் படாத பாடு பட்டார் அந்த கோவிலின் வடிவமைப்பிற்காக. யோகக் கிருஷ்ணன் என்னதான் மூன்றில் ஒரு பங்கு பணத்தை தனது பங்காக போட்டிருந்தாலும், அந்தக் கோவில் வடிவமைய பொருளாளராக மட்டுமில்லாமல் செயல்பாடுகள், ஒருங்கிணைப்பு, கூட்டம் கூட்டுதல், வசூல், அரசு அனுமதி, எல்லாவற்றையும் ஆவணப்படுத்தல் போன்று எல்லாப் பணிகளையும் இவரே செய்ய வேண்டுமளவு செயலாளர் ஒரு எழுதப் படிக்கத் தெரியாதவர்.

அவருக்கு பாக்கி என்பதை பக்கி என்றுதான் எழுதத் தெரியும் மேலும் அவரும் இந்தக் யோகக் கிருஷ்ணனும் அறமல்லா வழிகளில் அந்தக் கோவில் உருவாவதற்குள் அடித்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல...அத்தனையும் பொறுத்துக் கொண்டு வேல், மாது , முத்து மாணிக்கம், இரத்தினம் , பச்சை, வெங்கி ஆகியோர் கை கொடுக்க இராஜராஜன் எடுத்த பணியை முடித்தே விட்டார்.
Image result for karma yoga


மிகவும் கோவில் உருவாக பங்காற்றிய கண்ணாடிக்கார கோவிந்தனும், யோகக் கிருஷ்ணனின் மனைவியும் கூட கோவில் குட முழுக்கு நடத்த போதிய அளவு பணம் சேரவில்லை எனில், வட்டிக்கு கொடுக்கிறோம், வாங்கி நடத்துங்கள் வசூல் ஆனதும் வட்டி போட்டு கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் கேட்டார்கள். இது என்ன கோவில் பணியா? வட்டிகடையா? என்று தெரியாமல்...

ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய சோதனைகள், யோகக் கிருஷ்ணனின் தலைக்கன லீலைகள் கொஞ்சம் நஞ்சமல்ல...அத்தனையும் தாக்குப்பிடித்து அவரை நேருக்கு நேராகவே கடிந்து கொண்டு, வாராந்திர கூட்டத்தில் வைத்து பொதுவாகவே மிரட்டி அமர வைத்து...இப்படி எல்லாத் தரப்பு யுக்தி, முயற்சி, உழைப்பு ஆகிய எல்லாவற்றையும் கையாண்டு  3 வழிகளில் நடந்த வரவு செலவுகளை முறைப்படுத்தி குடமுழுக்கு முடிந்த கையுடன் கணக்கு வழக்கை சரியாக ஆவணப்படுத்தி முடித்துக் கொடுத்து விட்டு இனி கோவில் உருவாக சேவை செய்தாருக்கு ஒரு கல்வெட்டு அவசியம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் இனி கோவிலுக்கு வரமாட்டேன் கோபுர தரிசனம்  கோடி புண்ணியம் என யார் வந்து அழைத்தாலும் மறுத்து ஆனாலும் வெறுக்காமல் இராஜ இராஜன் இருந்து வருகிறார். சிறிதும் வருத்தமில்லாமலே. ஆனால் அந்த கோவில் வழியேதான் தினமும் நடைப் பயிற்சியும் மேற் கொள்கிறார்.
நான் கும்பிடவேண்டிய தேவையுமில்லை. அப்படியே கும்பிட்டாலும் வெளியே இருந்து கும்பிட்டாலே போதும்...என‌


ஆனால் இவை எல்லாம் தேவரசருக்கு தெரிய வாய்ப்பில்லை. தேவரசரைப் பொறுத்தவரை இராஜராஜன் ஒரு பொது மக்கள் நல்லுறவு அலுவலர் ஒரு கல்லூரியின் சார்பாக அவரது பள்ளிக்கு முகாம் நடத்தி பள்ளிப் பிள்ளைகளுக்கு நன்மை செய்ய முயன்றவர். உள்ளூர்க்காரர். இவரைத் காரணமின்றி ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு வெளி நாட்டு மாணவர்களும், பெரிய பல்கலைக்கழகத்தின் 3 கல்லூரி பிரதிநிதிகளாக வந்த சுமார் 30 பேரை 3 ஆம் நாள் தமது பள்ளியில் முக்கியமான அறிவு சார் செய்திகளை சென்று அடைய விடாமல் தடுத்து விட்டார்.  அவர் தாம் தம் மனவியுடன் இப்போது கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு இரவில் வந்திருக்கிறார்

அவரிடம் தாம் யார் என்று தெரிவிக்கவே இல்லை. அந்தக் கோவிலுக்கும் இராஜராஜனுக்கும் என்ன தொடர்பு என்றும் தேவரசருக்கும் தெரியாது. ஆனால் அவர் வணங்க வந்தது, கை கூப்பி நின்றது யாவுமே இராஜராஜனின் அரிய சேவை மூலம் வந்தது, யோகக் கிருஷ்ணனை அவரது தலைக்கனத்தை உடைத்தெறிந்து நிகழ்த்திய உண்மைச் சம்பவத்தின் அடையாளமாகவே அந்தக் கோவில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

இயற்கை வலிமையுடையது. நினைத்துப் பார்த்தால் அது கூட ஒரு திருவிளையாடல் போலவே இருக்கிறது. சிலைகள்எடுக்க  தயார் செய்ய முன் பணம் கொடுக்க,  ஒப்பந்தம் போடப் போகும் முன்   இரவில் கோவில் வாசலில் யோகக் கிருஷ்ணனும், இராஜராஜனும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர் அடுத்த நாள் பற்றிய திட்டம் தயாரிப்புக்காக.

இராஜ ராஜன் சொல்கிறார்:
நான் விசாரித்த தகவல் பல்வாரியாக இருக்கின்றன‌
சென்னை, காஞ்சி, மாமல்லபுரம், தஞ்சை, சேலம், கோபி இப்படி பல இடங்களில் சில செய்கின்றனர் நாம் பல இடங்களில் விசாரித்து வேலைத்திறம், மற்றும் தொகை யாவற்றையும் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் கோபியில் கூட சில இளைஞர்கள் நன்றாக செய்கிறார்களாம் பக்கத்தில் ஒரு சிறு கோவிலை நிறுவிய ஒரு நிறுவனரும் சொல்கிறார் என்று சொல்ல...

ச்சீ, சீ , உங்களுக்கு கோவிலைப்பற்றி என்ன தெரியும், உங்க வேலையைப் பாருங்க , இது ஒரு பெரிய அளவிலான கோவில், எங்களுக்கு எல்லாம் தெரியும் என தகாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி விட்டு திருமுருகன் பூண்டியில் மட்டுமே ஒப்பந்தம் செய்து முன் பணம் தரமுடியும் என வசூலான தொகையில் ஒரு பகுதியை தூக்கிக் கொண்டு போய் செய்தனர்.
அதை கோவில் கட்டி வரும் சிற்பி சொல்லியதாக.

திருமுருகன் பூண்டிக்கு செல்லும் வழியில் குறுக்கு வழியில் அம்மாப்பேட்டை அந்தியூர், கோபி என இருந்தும் அதை பல மாதங்கள் எட்டியும் பார்க்கவில்லை.

பல மாதங்கள் ஓடி, குட முழுக்க் நாளும் குறிக்கப்பட்டு சிலைகளும் செய்யாமல், கொடுத்த பணத்தையும் வாங்க முடியாமல் சிக்கிக் கிடந்தனர் கோவில் குழுவினர்.

இடையில் கிருஷ்ணன் ஒப்பந்தம் போட்ட இடத்தில் மூலவரான லிங்கத்தை செய்யவே முடியவில்லை. முதல் முறை பின்னம், இரண்டாம் முறை உள் கீறல், கோடுகள்,காற்று உள் புகுந்த தடங்கள், நீடித்த நாளில் வெடித்து சிலை உடையும் தடங்கள், தடயங்கள், மூன்றாம் முறை ஆட்டுக்கல் போல கொத்து மேலே கறுப்பு தாரை மெழுகியது போல அவசரமும் ஆத்திரமும் சேர செதுக்கப்பட்ட அடையாளங்கள்...

எனவே அந்த இடத்தை கொடுத்த முன்பணத்துக்காக சிறு சிறு சிலைகளுக்காக ஒதுக்கி விட்டு கடைசியில் ஒரு நாள் யோகக்கிருஷ்ணனை ஒதுக்கி விட்டு இந்தக் குழு திருமுருகன் பூண்டிக்கு செல்லும் வழியில் கோபிக்கு வண்டியை திருப்பச்சொல்லிக் கேட்க கண்ணாடிக்காரர் , அவர்தாம் இத்தனை முறை சொல்கிறார் இல்லையா, போய்த்தான் பார்ப்போமே என முன் மொழிய வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி ஒரு நப்பாசையுடன் பொலீரொ வண்டி கோபி அந்த இளைஞர்கள் சிற்பக் கூடம் சென்றடைய , தொகையும், கைவேலையும் பார்த்து எப்படி திருமுருகன் பூண்டியின் ஆசாடபூதி ஏமாற்றி இருக்கிறான் எனப் புரிந்து கொண்டு அதிலிருந்து அந்த கோபியின் இளைஞர்களின் சிற்பக் கூடத்தையே வாடிக்கையாகக் கொள்ளுமளவும் உடனே அங்கே வேல் தமது பங்காக தொகை ரூ. 30,000 கொடுத்து மூலவரை அங்கேயே அப்போதே ஒப்பந்தம் போட்டுச் செய்யச் சொல்லியும்...திசை திருப்பம் மாறுதல்

இராஜராஜன் கேட்கிறார் ஜீப் வரும் வழியில் இயற்கை என்ற ஒன்று இருக்கும்போல் தாம் இருக்கிறது இல்லையா? கண்டிப்பாக எல்லாரும் ஆமோதிக்கிறார்கள்..அது யோகக்கிருஷ்ணனுக்கு விழுந்த இல்லை இல்லை அவரது தலைக்கனத்துக்கு விழுந்த அடி...மிகவும் அருமையாக மற்ற சிலைகள் யாவும் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்ய உரிய காலத்துள் எடுத்து வரப்பட்டு 24 நாட்கள் நெல்லிலும் 24 நாட்கள் நீரிலும் ஊறவைக்கப்பட்டு வேன்டிய யாவையும் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட கதை எல்லாம் மிக நீளம். அதற்கு குட முழுக்கு செய்ய கோபியில் ஒரு மாபெரும் கடையில் சாமான் வாங்கிய கதையும், கோவில் மூலவர் அம்பிகா படம் போட்ட டாலர்கள் விற்ற கதையும்...இப்படி ஒரு புத்தக்ம். எழுதலாம் என இராஜராஜன் எண்ணுமளவு....
Image result for karma yoga


தமது கல்லூரி முதல்வர் தம்மை முற்றிலும் புரிந்து கொண்டவர் அந்த மேட்டூரின் மாபெரும் பள்ளியின் முன்னால் மாணவர் ஜேம்ஸ், அவரை 3 ஆம் நாளில் அந்தப் பள்ளிக்கு அழைத்து வந்து பேச வைப்பது என்றும் தாமும் அந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு அப்துல் கலாம் வழி நின்று நிறைய  விழிப்புணர்வு அறிவுரை நம்பிக்கை தருவதென்றும் நினைத்திருந்த கனா எல்லாம் கானலாகப் போக இந்த தேவரசர் என்ன காரணம் பற்றியோ அந்த 3 நாள் நடக்க சம்மதித்து ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொண்ட முகாமை இரண்டு நாளோடு தமது சொந்த விருப்பு வெறுப்பு உணர்வை உள் வைத்து சுமார் 4000 மாணவர்களுக்கு போய்ச் சேரவேண்டிய அறிவுச் செல்வத்துக்கு தடை ஏற்படுத்தி விட்டாரே....

இந்த பொது நல சேவா வாதியான இராஜராஜனை மதிக்காமல் விட்டாரே அதன் விளைவாய் அந்தக் கோவிலின் அச்சாணியாய், ஆணிவேராய் இராஜராஜன் உருவாக்கிய கோவிலில் இன்று தேவரசன் கைக் கட்டி நின்றிருக்க வந்திருந்ததன் பின் உள்ள வெற்றியும் தோல்வியும் வெளியே எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த இரகசிய வெற்றியை இராஜராஜன் எண்ணி எண்ணி கடவுளின்,இயற்கையின் திருவிளையாடல் அந்த மூன்றாம் நாளில் நிறைய வய்ப்புகள் மற்றொரு பள்ளிக்கு சென்று விட்டதே அதுதான் அங்குதான் போய்ச் சேர வேண்டும் என்றிருந்ததோ என்னவோ அதனால் தாம் இப்படி எல்லாம் நிகழ்ந்ததோ!

இந்த முகாம் நாட்கள் இரண்டும் கடந்த மறு நாளிலேயே மிகவும் அருகாமையில் ஒரு தனியார் மருத்துவர் முகாம் நடத்துவதாகச் சொல்லி போஸ்டர் விளம்பரம் செய்ததையும் கவனிக்க முடிந்தது நெருடல்களுடன்.

வீட்டிலும் , சொந்த ஊரிலும் தவிர இறைவாக்கினர் வேறு எங்கும் மதிப்பு பெறுவர்  என்ற பைபிள் வாசகத்தை முறியடிக்கிறோம் என ஜேம்சை கூட்டி வந்து 3 ஆம் நாளில் அவர் படித்த பள்ளியிலேயே பேச வைக்க வேண்டும் என்றும் உள்ளூர் பள்ளியில் நமது பேர் விளங்க நாமும் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒரு அரிய உரை நிகழ்த்த வேண்டும் என்று இருந்ததை நிறைவேற்ற முடியாமல்  பைபிள் வாசகம் நின்று வென்று விட்டதையும் இராஜராஜனால் இரசிக்க முடிகிறது...


இன்னொரு விஷயம் என்ன இந்த இராஜராஜனுக்கு அப்துல் கலாம் தம் சொந்தக் கைப்பட கடிதம் எல்லாம் எழுதியுள்ளது தேவரசருக்கும் தெரியும், ஆனால் தேவரசர் அப்துல்கலாம் மார்பளவு சிலையை நடுவில் வைத்து உலகின் மாபெரும் அறிவியல் அறிஞர்களை வேலிச் சுவர்களில் எல்லாம் செய்ய வைத்து ஒரு அறிவியல் அறிஞர் பூங்காவை செய்ய முயற்சி செய்து வருகிறார்...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: