Monday, February 5, 2018

நாங்கள் சொல்வதெல்லாம்: கவிஞர் தணிகை

நாங்கள் சொல்வதெல்லாம்: கவிஞர் தணிகை

Image result for what we saying is satya in satyagraha


கணபதி பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கையும் களவுமாக இலஞ்சம் பெற்று மாட்டிக் கொண்ட ஒரே காரணத்துக்காக தமிழக அரசு பதவி விலகலாம்... ஊழலின் ஊற்றுக் க‌ண்  எப்படி எவரெஸ்ட் சிகரத்தில் தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கிறது என்பதற்கு இந்த சான்று ஒன்றே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு என்ற அளவில் போதும்.

6 வயது சிறுமி வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு குதம், பிறப்புறுப்பு கிழிந்த காரணத்தால் இறந்து போன ஒரே காரணத்துக்காக மத்திய அரசு பதவி விலகலாம்.
Image result for what we saying is satya in satyagraha
கரூர் ரயில் இப்போது திருச்சி வரை சோதனை ஓட்டமாக 3 மாதம் இன்று முதல் இயக்கப்படும் என்கிற சேலம் கோட்டம் மேட்டூர் ரயில் பாதையின் பழுது நீக்கும் பணியை ஒரு சேர பல நாட்கள் நிகழ்த்தி விட்டு ரயிலை ஒரு நாளும் ரத்து செய்யாமல் வழித்தடத்தில் வெற்றி கரமாக இயக்கலாம். ஏன் எனில் இப்போது பேருந்து கட்டண உயர்வால் மேட்டூர் பயணிகள் அனைவருமே ரயிலில் வரவே ஆசைப்படுகின்றனர்.

அடுத்து காலையில் ரயிலை 7. 30 மணிக்கு இயக்கி மக்கள் துயர் துடைக்கலாம். இல்லையேல் இவை எல்லாம் அரசே அல்ல. மக்களுக்கான அரசே அல்ல. தனியார் முதலாளிகளுக்கான அரசே.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: