Friday, January 26, 2018

குடி அரசு: கவிஞர் தணிகை

குடி அரசு: கவிஞர் தணிகை

Image result for 69th republic day of india


பொன் மாணிக்க வைர முத்து மரகத மணி நடைப் பயிற்சி சென்றபடி இருந்தார். ராசா கடையில் டம்ளருடன் பாலாவின் தந்தை மஹேஸ் குடித்துக் கொண்டிருந்தார் அருகே சிகரெட் சேகரும், சிப்பாய் முருகனும் கடைக்கார மும்பை சொர்ணக்காவும் இருந்தனர்.

என்ன இதுதான் குடி அரசா ? என சிகரெட் சேகரைக் கேட்டார்....

பதில் 1. இல்லை சார், சாம்பள்ளி போனாதான் குடி அரசு

என்ன சாம்பள்ளி போனாதான் குடி அரசா ? மறுபடியும் இவர் கேட்க‌

பதில் 2. இப்போது  சிப்பாய் முருகன் சொன்னார்:
           டாஸ்மார்க் போனாதான் குடி அரசு என்கிறார்கள் என்றார்,

அதற்குள்

 பதில் 3: இபோது மஹேஷ் சொன்னார், இல்ல சார்,
         சுடுகாடு போனாதான் குடி அரசு என்றார்

( சாம்பள்ளி சுடுகாட்டில் தான் அரசின் மதுக்கடை உள்ளது)

ஆமாம் ஆமாம் சுடுகாடு போனாதான் குடி அரசு ...சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர் என எதையோ நினைத்தபடி நடக்க ஆரம்பித்தார்.

மக்களின் வாக்குகளை காசு கொடுத்து வாங்கி விட்டாலும்,அதற்காக அவர்கள் கருத்துகளை கவனிக்காமல், இளைஞர் கல்லூரி மாணவர் என்றும் கருதாமல் அடித்து இழுத்து செல்வதும், சிறை வைப்பதும் , அவர்கள் வாழ்வை சூறையாடுவதும் என்ன நியாயம்?

மக்களின் வரிப்பணம் போதாது என்றுதானே இத்தனை களேபரம், போக்குவரத்து விலையேற்றம்,போராட்டம், டாஸ்மார்க் தள்ளாட்டம் எல்லாம்...

அந்த இளைஞர்கள் தாம் உண்மையாக தமது கருத்தை ஒளிவு மறைவின்றி வெளிக்காட்டுபவர்கள், ஏன் நாமே கூட எவர் படிக்கிறார் எவர் படிக்கவில்லை என்றெல்லாம் தெரியாமல் அவை என்ன மாற்றம் விளைவிக்கப் போகிறது என்றெல்லாம் கருதாமல் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் சொல்லைப் பின் பற்றி வாழ்வை அதன் வழி வாழ்ந்து கரைந்து கொண்டிருப்பார்தாம்...

அட சேலம் செல்ல வேண்டுமென்றால் ஒரு நூறு ரூபா இல்லாமல் கால் வைக்க முடியாது போலிருக்கிறதே...

குடி அரசு உரையில் ஒரு தேசப்பற்றாளர் பேசிக் கொண்டிருந்தது காலையில் கேட்டது நினைவுக்கு வந்தது அவர் சொன்னார் பெருமையாக, இந்த நாட்டின் இந்த குடியரசுக்கு கிழக்கத்திய நாடுகளின்( பத்து தலை இராவணர்கள் அல்ல அல்ல) பத்து நாடுகளின் தலைவர்கள் வந்து கலந்து கொன்டனர் என்று  அதே நேரத்தில் விளையாட்டில் விவசாயத்தில் வறுமைக்கோட்டில் நம் நாடு நலிவடைந்து வருவதையும் குறிப்பிடத் தவறவில்லை

இந்தக் குடியரசு தின விழாவில் கோட்டையிலிருந்து செங்கோட்டையிலிருந்து அணி வகுத்த வண்டி வாகன வேடிக்கை விருந்துகளில் தமிழக வாகனம் வரவில்லையாம்...

ஏன் தெரியுமா, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட என்றும் முதல்வரான ஜெ மறைவுக்கு துக்கம் அனுஷ்டிப்புதான்...அட ஜோசப் விஜய்க்கும் கூட சிலை வைத்துள்ளார்களாமே...இப்படி எல்லாம் ஒரு மேடைப்பேச்சு,

மோடி இந்த நள்ளிரவு முதல் எதையும் அறிவிக்காதிருப்பாராக...ஏன் எனில் ஏற்கெனவே அவரால் எல்லா தொழிலும் முடங்கி எழ முடியாமல் தடுமாறிக் கொண்டே இருக்கிறது ரிலையன்ஸ் குரூப் கொடி கட்டிப் பறக்க..

அட நம்ம செல்லூர் அல்ல தெர்மாக்கூல் அய்யாவுக்கு ஒரு ரூபாய் எல்லாம் பெரிதில்லையாமே...கடந்த சுமார் 2 வருட காலமாக ஒரு ரூபாய் தள்ளுபடியுயில் சேலம் போய் வந்தது அந்த தனியார் முதலாளியின் நிலைப்பாட்டால், அவரை மறுபடியும் கேட்க வேண்டும், அவரும் 24 ரூபாய் 36 என்றான பின்னும் உன்னால் சேலம் செல்ல முடிகிறது என அந்த ஒரு ரூபாயையும் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டார் போலும்.இப்போது நடத்துனர்கள் சில்லறை தராமல் எல்லாரையும் போல டிக்கட் கொடுத்து விடுகிறார்கள்...அந்த ஒரு ரூபாய் அருமை எங்களுக்குத் தானே தெரியும்...அதை அப்படியே எடுத்து வந்து டப்பாவில் போட்டு வைப்பதை மகனும்     மனைவியும்

    சில்லறை தேவைப்படும்போதெல்லாம் எடுத்து செலவு செய்வார்கள்...இனி அதற்கு வழி இல்லை...

சில்லறை பிரச்சனையே இல்லாமல் சுத்தமாக வழித்து எடுத்து விட்டார்கள்...நடுத்தரமக்களின் பணத்தை நாம் இந்தியன் எகனாமி என்பதை பிரமிட் அமைப்புடன். மிகவும் கூம்பும் இடத்திலான சதவீதம் மிகவும் அதிக செல்வ வளத்துடனும், அடியில் உள்ள அதிக மக்கள் சிறிய செல்வ அளவுடனும் என பாடம் நடத்துவதை அப்படியே பார்க்கலாம்,,,இந்தக் காசு எல்லாம் முதலாளிகளுக்கும், அரசியல் கட்சிக்கும் இலஞ்சமாக  செல்வதையும்...இவர்களுக்கு அந்த ஒரு ரூபாயையும் ஏழையின் பாக்கெட்டிலிருந்து எடுத்து பணக்கார பக்கெட்டில் போட வேண்டும் என்பது தானே...இலக்கு நிறைவேறி விட்டது... But it is not only meagre one rupee But instead of 24 now the fair is 36 to 53 km. so: 12 Rupees higher in this one hike....


நல்ல குடி அரசு....மத்திய பாராளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தலையும் ஒரு சேர நடத்த முடியாதாமே...ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர் சொல்லியுள்ளார், உனக்கே ஓய்வு கொடுத்து விட்டார்களே..உன்னை எவர் கேட்டது?... how your election commission conducted RK Nagar one constituency every body knows about it... மக்களுக்கும் பொது ஜனநாயகத்துக்கும் நலம் பயக்கும் சீர் திருத்தம் ஏதாவது செய்ய வேண்டும் அல்லாவிடில்.....மூடிக் கொண்டிருக்க வேண்டியதுதாமே...ஏன் இந்த ஊடகப் பெருச்சாளிகள் ஏதாவது இறை போட்டுவிட்டனவா..?

நடையும் நடைப் பயணமும் ஓய்ந்தது...வழி எங்கும் இந்த பழநி, திருப்பதி நடை பயண வாசிகள் பிளாஸ்டிக் குப்பையை ஆங்காங்கே சாலைகளில் போட்டுச் செல்கிறார்களே என ஒரு அம்மணி வேறு ஆற்றாமையில் வாட்ஸ் அப்பில் அழுது கொண்டு அடம் பிடிக்கிறது அதெல்லாம் இவர்களுக்கு கேட்க போகிறதா என்ன...வெற்றி வேல், வீர வேல்....




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment