Saturday, January 20, 2018

மக்கள் நல அரசின் மாயாஜால பேருந்து கட்டண உயர்வு:/ நாய் வாலை நிமிர்த்த முடியாது: கவிஞர் தணிகை

மக்கள் நல அரசின் மாயாஜாலம் பேருந்து கட்டண உயர்வு:/ நாய் வாலை நிமிர்த்த முடியாது: கவிஞர் தணிகை


Image result for bus fare hike in tamilnadu

மேட்டூர் டூ சேலம் 24 ரூபாயிலிருந்த கட்டணம் இன்று 36 ரூபாய் ஆகிவிட்டது. தெர்மாக்கூல் செல்லூர் ராஜு ஒரு ரூபாய் என்பது எல்லாம் இன்று மதிப்பில்லாதது என்கிறார் மதிப்பில்லாதவர், மேலும் போக்குவரத்து மந்திரி ஒரு ரூபாய்தாம் ஏற்றி உள்ளோம் மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும், இது மக்கள் நல அரசு வேறு வழி இல்லாததால்தான் ஏற்றி உள்ளோம், கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் எல்லாம் பேருந்து ஓட்டை உடைசல் இங்குதான் (இறந்தபின் செல்லும் சொர்க்க ரதமாக) மிகவும் நன்றாக‌ இருக்கிறது என்கிறார். முதல்வர் மனமுவந்து ஏற்றவில்லை என்கிறார். உள்ளாட்சி தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.கவே வெல்லும் என்கிறார் பொதுமக்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

ஏழை எளியோர் தொழிலுக்கு செல்வோர் அடிவயிறு கழுவ பயணம் செய்வோரிடமிருந்து இந்த அரசு வயிற்றில் நெருப்பெரிய , வய்ற்று எரிச்சலைக் கொட்டி மிக அதிமான கட்டண உயர்வை செய்திருக்கிறது. அதுவும் குறைக்கவே போவதில்லை அதற்கான வழி இல்லை என்கிறார்கள்.

ஏழைகளிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச காசையும் பிடுங்கி தனியார் பேருந்து முதலாளிகளிடம் குவிக்கவும், அரசுப் பேருந்து வழியாக அரசுக்கு பணம் சேர்க்கவும் மோடி வித்தை செய்திருக்கிறார்கள்.

இவர்கள் பேருந்து ஊழியர்களின் போராட்டத்தை முடித்தபோதே விவரம் அறிந்தார் அறிவார் இப்படி பேருந்து கட்டணத்தை உயர்த்தித்தான் நிதிச் சுமையை மக்கள் செலுத்தித்தான் செய்வார்கள் என...

யாருக்கு என்ன என்ன வேலை செய்யத் தெரியுமோ அந்த வேலையை கையில் எடுப்பார்கள்.,,,பாலம் கட்டுதல், பஸ்போர்ட் கட்டுதல், கட்டடம் கட்டுதல் இதெல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை எங்களூரில் ஒரு கெமிகல் கம்பெனிகாரர் கோவில் என்ற பேரில் கட்டடம் கட்டிக் கொண்டே செல்வது போல...

ஸ்பேர் பார்ட்ஸ் விலை அதிகம், கடும் டீசல் விலை அதிகம் எனவே காரை விட்டு விட்டு நடந்து போங்களேடா பாவிகளா? மக்களின் பணத்தில் இருந்து செலவுக்கு என எடுத்துக் கொண்டு நீங்கள் காரில் போய்க்கொண்டு வேதந்தம் பேசுகின்றன வேதாளங்கள்.

கக்கனைப் போல காமராசரைப் போல, எளிமையான நட்சத்திர பிரபலங்களைப்போல நீங்களும் காரில் செல்லாமல் பேருந்தில் சென்று கொண்டே இப்படி எல்லாம் சொல்லி இருந்தால் இந்தப் பதிவுக்கே அவசியம் இருந்திருக்காது பன்னாடைகளா? ஸ்பேர் பார்ட்ஸ் ஊழலைப் பற்றி ஒவ்வொரு டிப்போவில் இருக்கும் பணி செய்யும் ஊழியர் எல்லாம் வேறு வழியில் வாயில் இல்லாமல் வேரு புறத்தில் சிரிக்கிறார்கள்...

சகாயம், போன்றோரிடம் விட்டு விடுங்கள், கோ...ஆப்டெக்ஸை நட்டத்திலிருது விடுவிப்பார், சுதந்திரமான தலைமையேற்க அவர் போன்றோரை தலமைப் பொறுப்பை கொடுங்கள் நல்லது நடக்கும்...

மாறாக கூலித்தொழிலாளி , மாதாந்தர தனியார் ஊழியர்களின் தலையில் கைவைத்து பிழைப்பைக் கேள்விக்குறி ஆக்கிவிட்டீர்களே அரசியல் பதர்களே...

நீங்கள் அரசுப் பணியாளரை ஒன்றும் பிடுங்க முடியாது. பிடுங்க வேண்டாம். தனியார் மற்றும் சிறு நிறுவனங்களில் , தனியார் பள்ளி, தனியார் கல்லூரி போன்ற  தொழில் நிறுவனங்களில் ஊழியர்க்கு சுமார் குறைந்த பட்ச ஊதியம் ஒன்ற நிர்ணயம் செய்து உத்தரவு இடுங்கள் அதன் பின் இது போன்ற கட்டண உயர்வை செய்யலாம், அல்லாது இப்படி கட்டண உயர்வை செய்து தனியார் முதலாளிகளின் பையை அரசியல் வாதிகளான உங்கள் கையை நிரப்புவது என்ன நியாயம் அதற்காக நாங்கள் எல்லாம் நூற்றுக்க்கு நூறு சதம் வாக்குச் சாவடி சாவடிப்பதுதான்  வந்து வாக்களித்தோம்\

எல்லாம் கத்துவார்கள்  20 சதம் எனச் சொல்லி விட்டு 100 சதவீதம் ஏற்றிவிட்டு அதில் ஒரு 50 காசை குறைத்து விட்டு கோரிக்கையை நிறைவேற்ற குறைத்து விட்டோம் என்ற நாடகத்தை அடுத்து அரங்கேற்றுவதை அரங்கேறுவதைப் பார்க்கலாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment