Thursday, October 20, 2016

சேலம் நகராட்சி சேலம் நரகாட்சி அழுக்கு மூட்டை உலக முட்டையில் நான்: கவிஞர் தணிகை

 சேலம் நகராட்சி சேலம் நரகாட்சி அழுக்கு மூட்டை உலக முட்டையில் நான்: கவிஞர் தணிகை

சட்டத்தில் வரும் பாதி மக்களிடம் வரவேண்டும் மீதி

Image result for salem city dust and dirty in tamil nadu

இந்தியாவில் தூய்மையாக  இருப்பதில் 9 ஆம் இடத்தில் சேலம் ரெயில்வே நிலையம் என செய்தி.எனக்கு பொறுக்க மாட்டாமல் வயிற்றைப் புரட்டுகிறது. ஒரு பெண் பரத்திக் கொண்டு நடைமேடைக்கு ஏறும் படியிலும், நடைமேடையிலும் அழுக்கு மூட்டை விரிந்தது போல படுத்துக் கிடக்கிறாள் அருகே 2 வயதுக்குள்ளான ஒரு கீழாடை அணியாத பெண்குழந்தை அமர்ந்தபடி இருக்க... இந்தப் பெண் பேசும் பேச்சும், செய்யும் செய்கையும் மாநரகம்...பொது இடத்தில் பரத்தி படுத்திக் கொண்டு பிறப்புறுப்பில் கை வைத்து ....

ஏன் இப்படி என என்னன்னவோ நாம் எண்ணுகிறோம்.ஒரு சிறுவர் பாதுகாப்புப் பணி செய்யும் நிறுவன இளைஞர் ஒருவர் பேச்சு கொடுத்துப் பார்க்கிறார் .தொடர்வண்டியை சுத்தம் செய்யும் பணியாளர் அவளை எழுப்ப முயல்கின்றனர். அதன் பின் ஒரு பெண்  காவலரும் அவர் பங்குக்கு தம் கடமையை செய்கிறார். ஆனால் இந்தப் பெண்ணை அடிக்கடி நாம் பார்க்க வேண்டியதாகிறது சேலத்து ரெயில் நிலையத்தில்.

ஒருநாள் வாயில் சுவற்றிலேயே ஒரு அநாகரீகமான பெண் சிறு நீர் கழித்தபடி இருக்கிறாள். எவருமே சொல்லுமளவு அங்கில்லை.அது வழிந்தோடிக் கொண்டிருக்கிறது நடை மேடையில் அனைவரும் நடந்து செல்லும் பயன்படுத்தும் பொது இடத்தில். அவளை முதிய வயதினள் என்றுதான் சொல்ல முடியும்.

Image result for salem city dust and dirty in tamil nadu

நின்று கொண்டிருக்கும் தொடர் வண்டியில் கழிப்பறையில் அசுத்தம் செய்ய வேண்டாம், அதாவது சிறு நீர் கழிப்பது, மலம் கழிப்பது வேண்டாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது நடந்தபடிதான் இருக்கிறது.

ரெயில்வே என்றாலே முடம், கூன், குருடு, நொண்டி, அழுக்கு மூட்டை, பிச்சை, ஊன்றுகோல் என்ற நெடி அதிகமாகவே நிலவுகிறது சில சமயம் தாக்குப் பிடிக்க முடியாமல். ஒரு டிக்கட் வாங்காப் பயணி கடைசிப் பெட்டியில் நடுவில் ஏறி அமர்ந்து கொண்டார் . அவரைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு அழுக்கிலிருந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். கால் கைகள் எல்லாம் நகம் வளர்ந்து கிடக்க, ஆடையெல்லாம் , உடல் எல்லாம், முடி எல்லாம் ...முடை நாற்றம் எடுக்க...இவர்களுக்கு எல்லாம் உறவு, நட்பு, குடும்பம், என மனித உறவுகள் எல்லாம் இருக்கிறதா?
புத்தர் ஆக சிந்திக்க வேண்டியுள்ளது.

சேலத்தில் இது போன்றோர்க்கு உணவு தருவதாக ஒரு செய்தி படித்தேன். ஆனால் 5 ரோட்டில் ரத்னா காம்ப்லக்ஸ் முன் உள்ள பெரும் சாக்கடை இன்னும் பிளாஸ்டிக் மலையால் நிரம்பியே கிடக்க...மாநகராட்சி மாநரகாட்சி சேலத்தில் முதலில் பிளாஸ்டிக் பைகளும், பொருட்களும் தடை செய்யப் பட வேண்டும். செய்வார்களா நகராட்சியனர். இல்லை என்றால் அந்த பெரும் சாக்கடையருகே அவர்கள் சில நிமிடங்கள் வந்து நின்று செல்லட்டும்.

திருப்பதி போன 2000க்கும் முன் ஆண்டுகளில் அறையில் தங்க முன் பணம் வாங்கி  அதை திரும்பி வரும்போது திருப்பி கொடுப்பதாக சொல்லி நிறைய ஏமாற்றி ஊழல் புரிவோருக்கு எதிராக சண்டையிடுவது என் வழக்கம் என் வீட்டாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டபோதும்...ஆனால் நேற்று ஒரு செய்தி: இனி அறைகளில் தங்கிச் செல்வோருக்கு முன் பணம் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது அந்த 17 அறைகளும் மூடப்பட்டு அதில் பணி செய்த அத்தனை பணியாளரையும் வேறு பணியில் அமர்த்தி விட்டதாம் தேவஸ்தானம். நல்ல முடிவு. வருவாய் இரண்டு மாநிலமும் பிரித்துக் கொள்வது ஒரு பக்கம் தொடர... இந்த ஊழல் பெருச்சாளிகள் கோவிலுக்கும், அரசுக்கும் தேவஸ்தானத்துக்கும் பொதுவுக்கும் சேராமல் இவர்கள் பாக்கெட்டுக்கு இத்தனை நாள் திருப்பதிக்கு வரும் பயணிகளின் பணத்தை உண்டு பெருத்தபடி இருந்திருக்கின்றனர்.

Image result for salem city dust and dirty in tamil nadu

இதுவும் ஒரு நீக்கப் பட வேண்டிய அழுக்கே. இது போல எத்தனை விதமான அழுக்குகள். பாரதிக்கு சாப்பிடவே குடும்பத்துக்கு உதவா இந்த தேசம் அவரை மகாக் கவி எனக் கொண்டாடுவது போல எல்லாம் காலம். சிலபேர் முன் பிறந்து விடுகின்றனர். காலம் அவர்களை விழுங்கிய பல காலத்துக்கும் பிறகு அவர்கள் சொன்னபடி நடக்கிறது.

Image result for salem city dust and dirty in tamil nadu

ஆமாம் இந்த நதி நீர் இணைப்பை இந்தியாவில் செய்யப் போவது யார்? எப்போது? உடனே சாத்தியமில்லை என்பார் தமது வாதம் செய வருவார் சாத்தியம் இல்லை என்பது ஏதுமே இல்லை என்பதை அவர் உணரார்.

 .பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடாதே. மத்தாப்பு போதும்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment