Sunday, October 23, 2016

மைக்கேல் டி ஜோசப் குன்ஹாவிற்கு இழைக்கப் பட்ட அநீதி: கவிஞர் தணிகை

மைக்கேல் டி ஜோசப் குன்ஹாவிற்கு இழைக்கப் பட்ட அநீதி: கவிஞர் தணிகை

Image result for kunha

மிகவும் அரிதான உழைப்புடன் ஒரு தீர்ப்பை முன் வைத்தார். அது சில வாரங்களில் முறிந்து போனது ஒரு 2 நிமிட தீர்ப்பால். குமாரசாமி என்ற நீதிபதி எனச் சொல்லிக் கொண்ட நபரால் , அவருக்கும் அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நட்பூ இருந்தது என அன்று ஊடகங்கள் எழுதின.

இந்த தீர்ப்பு முரண்கள் உச்ச நீதிமன்றத்திடம் இறுதிக்காக வைக்கப் பட்டன. இதோ இதோ என்றார்கள், என்கிறார்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலான பின்னும் இன்னும் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கவில்லை. பன்னாட்டு நீதிமன்றம் தி ஹேக் இடம் விடப்பட்டிருந்தாலும் கூட ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மாண்பு மிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் ஒரு மாதத்துக்கும் மேல் அப்பல்லோவில் இருக்கிறார் உடல்நிலை 95 சதவீதம் தேறிய நிலையில். என செய்திகள்.இந்தப் பதிவு அம்மாவின் உடல் நிலைக்கு எந்த வகையிலும் தொடர்புடையதாக கருதி விடாதீர். இது முற்றிலும் இந்திய நீதி பரிபாலனம் பற்றியதே.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலீவர் அம்மையாரின் ஒரு வானொலிப் பேட்டி காதில் விழுந்தது. இந்த நாட்டின் தீண்டாமை இன்னும் நிலவ காங்கிரஸ் அரசே காரணம் , அது சுதந்திரம் அடைந்த பின் 70 ஆண்டுகளில் பெரும்பாலும் அதுவே ஆட்சியில் இருந்தது என்றும், ஸ்டாலின் தி.மு.க கூட்டும் காவிரி நீர் பிரச்சனை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் உறுதி பட அறிவித்திருக்கிறார்.

கர்நாடகாவின் ஒற்றுமையும், தமிழ் நாட்டின் வேற்றுமையும் இதிலிருந்து தெரிந்து கொள்க.

இவர்களின் தற்கால  மத்திய அரசின் ஆட்சியில் எப்போது எப்படி இந்த தீர்ப்பு வரும் என எவரும் கேட்கப் போவதில்லை. இந்த கருத்துக்குள் புகவே போவதில்லை. ஏழைக்கும் பாளைக்கும் சட்டம் , நீதி எல்லாம் கயிற்று சுருக்காகும். ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும் இவை கழட்டிய செருப்பாகும்.

Image result for kunha

எல்லாவற்றையும் ஆம் எல்லாவற்றையுமே நிதியால் வாங்கிட முடியும் நிரந்தர முதல்வர்களால்...காலத்தை வாங்கிட முடியுமோ? எல்லாம் மனித உயிர்கள்தானே? உயிருள்ள எல்லாவற்றுக்குமே முடிவு ஒன்று என்பது உண்டுதானே? இந்திய சரித நீதியை விட இயற்கை நீதியும், நியதியும் சீற்றமுடையவை.எப்போதும் போல் இருக்க முடியுமா? திரும்பவும் நாம் சராசரி நாட்களுக்கு திரும்ப முடியுமா? திரும்பவும் சிறுவர் சிறுமியாக ஓடி ஆடத்தான் முடியுமா? அல்லது பாடத்தான் முடியுமா? எனவேதான் சித்தர் சொல்லியபடி நாடாறுமாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்த தோண்டியை கவனமாக கையாண்டு சற்று இந்த பூவுலகில் உடல் நலச் சிறப்புடன் புன்னகை விரிப்புடன் சற்றே நீட்சி பெற்று சென்று சேர வேண்டுமாய், பதினாறும் பெற்று பெரு வாழ்வு பெரு வியாதி வாழ்வல்ல, வாழ வேண்டுமாய் இந்தப் பதிவு அனைவரிடமும் பிரார்த்திக்கிறது.

நல்ல மனிதர் செய்யும் உழைப்பை சிறப்பிக்காவிட்டாலும், சிறுமைப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறது. அந்த மனிதர் செய்த உழைப்பை இந்த நாடு அவமானப்படுத்தி இருக்கிறது. உழைப்பை நேசிப்பவர்க்குத்தான் தெரியும் அந்த அவமானத்தின் வலி எத்தகையதென்று. சகாயத்தைக் கேட்டுப்பார்த்தாலும் அவருக்கும் அந்த வலி தெரியும். ஆயிரம் வழிகள் அனைவர்க்கும் தெரியும் அழிந்து போக.., உழைப்பு என்ற ஒரே வழிதான் உண்டு உயர்ந்து போக...

Image result for kunha

what about the apex court's verdict? regarding with all political related cases dealt with all political parties in India....?

Image result for kunha

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment