Friday, October 28, 2016

பட்டாசு வெடிக்காத தீபாவளித் திருநாளில் வாழ்வில் வழி காட்ட ஒளி கூட்ட வாழ்த்துகள்: கவிஞர் தணிகை.

பட்டாசு வெடிக்காத தீபாவளித் திருநாளில் வாழ்வில் வழி காட்ட ஒளி கூட்ட வாழ்த்துகள்: கவிஞர் தணிகை.
Image result for deepavali


சிவகாசி குட்டி ஜப்பான், பட்டாசு தொழிலை மட்டுமே நம்பி வாழவில்லை, அங்கே அச்சு,காலண்டர்,தீப்பெட்டித் தொழில், மெஷின் மேக்கிங்,இப்படி பல தொழில்கள் உண்டு. இந்த பட்டாசுத் தொழில் தம்மையும் அழித்து பிறரையும் அழிக்கும் இரசாயனப் பொருள் வேடிக்கையால் விளைகிறது.பொருள் அவாவினால் நடப்பது. அதிலும் பல நூறு சதம் இலாபமாக இடைத் தரகர்களுக்குத்தான் போய்ச் சேர்கிறது. அரசு, மற்றும் அறிவார்ந்தார் கடன் இதை மடைமாற்றம் செய்து இதில் உடல் நலத்தை இழந்து சொற்ப வருவாய் ஈட்டிவரும் மனித குலத்தை காக்க வேண்டும் என்பதே.

சீனத்துப் பட்டாசும், சீனப் பொருள்களும் கூட பயன்படுத்துவதிலிருந்து விலக்கப் பட வேண்டியதே. சீனத்து தொழில்நுட்பம் நமது ஏ.டி.எம்.கார்டுகளின் இரகசியக் காப்பில் எப்படி ஊடுருவல்கள் நடத்துகின்றன என ஊடகங்கள் வழி காண முடிந்தது.

 தீபாவளி என்ற திருநாள் கிருஷ்ணன் நரகாசுரன் (சூரன்) வதம் என்ற அடிப்படை இல்லாத கதையின் மூலம் படிக்காத படிக்கத் தெரியாத படிப்பதைப் புரிந்து கொண்டு ஏன் எதற்கு எப்படி என்று பார்க்கத் தெரியாத முட்டாள்களை ஏமாற்றி மூடர்களால்  காலம் தொட்டு வியாபாரிகளுக்கு ஆதரவாக கட்டி புனையப்பட்டிருப்பது என்பதால் அதைப் பற்றி முற்றிலும் அக்கறை கொள்ளத் தேவையில்லை.

நமது முகநூல் தோழர்கள் வேடிக்கையாகச் சொன்னார்கள், மற்றவர்கள் வென்றால் அவர்கள் எதிரிகள் சூது செய்தால் அவர்கள் சகுனிகள், அதுவே நமக்கு ஆதரவானால் அவர் கிருஷ்ணர். கடவுள்

உள் கட உள் கட உள் கட என்ற சொற் பிரயோகமே கடவுள் என்றும் தமிழ் மொழியில் மட்டுமே இந்த உயர்ந்த சொல்வடை இருக்கிறது என்பதை அறியலாம். நாம் கூட 1983 வாக்கில் திண்டுக்கல் இளம் வர்த்தகர்களின் ஒரு கூடலில் : புறம் கட உள் பார்க்க, புறம் கட ; கடவுள் பார்க்க என்று faith in God   என்ற தலைப்பில் ஒரு கவிதை சமர்ப்பித்தோம். அது என்றும் நிலையாக நிற்கிறது காலத்தை விஞ்சி அல்லது காலத்தைக் கடந்து என்றும் சொல்லலாம்.

இப்போது ஐப்பசி அடைமழைக்காலம் எல்லாம் காணாமல் ஓடி மறைந்தது. இன்னும் குளிரவே ஆரம்பிக்கவில்லை நவம்பர் மாதத்துள் நாம் நுழைவில் இருந்தும் .அமெரிக்காவின் விண்வெளியின் அதிக காலம் இருந்த பெருமையுடைய விண்வெளி வீரர் ஒருவர் சொல்கிறார்  இந்தியாவும் சீனாவும் பெரும் காற்று மாசடைவில் இருக்கிறது. இதை விண்வெளியில் இருந்து நன்கு காண முடிகிறது எனச் சொல்லி இருக்கிறார். மக்கள் தொகையும் அதிகம் மாசடைதலும் அதிகம் என்கிறார் மணியம் பொறியாளர் படிப்பை படிக்க ஆரம்பித்திருப்பவர்.

ஐக்கிய நாடுகள் சபை சொல்கிறது இன்றைய உலகு 90 சதவீதம் மாசடைந்து விட்டது. மனிதர்கள் வாழ்வதே பெரும் சோதனையாய் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் மேலும் மேலும் நமது இயற்கைக்கு ஒவ்வாத செயல்பாடுகள் செய்யாமல் நாம் இருப்பதே இந்த பூமிப் பந்துக்கு நாம் செய்யும் நம்மால் முடிந்த புண்ணியம். பறவைக்கு, விலங்குகளுக்கு, நோயாளிக்கு, முடியாதவர்க்கு, முதியவர்களுக்கு எல்லாம் வேண்டாம் முதலில் உங்களுக்கு நீங்களே நன்மை செய்து கொள்ள முயற்சி செய்வது இதிலிருந்தே இப்படிப்பட்ட சிறிய காரியங்களில் இருந்தே ஆரம்பிக்கிறது. பட்டாசை தவிர்ப்போம் தீபாவளித் திருநாளில் வாழ்விற்கு ஒளி கூட்டுவோம், மாசைக் குறைப்போம் என உறுதி எடுப்போம்.

ஆண்டுக்கு ஆண்டு இந்த பட்டாசு வெடிக்கும் அவா குறைந்து வருவது ஆரோக்யமான செயல்பாடு.நாளை தீபாவளியானாலும் இன்று இந்த 3 மணி மதியம் வரை கூட பட்டாசு வேட்டு சத்தம் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்த சத்தம் கார்த்திகைத் தீபத்திலிருந்தே கேட்க ஆரம்பித்து விடும் என்பதையும் மறந்து விட முடியாது.காரணம் பட்டாசு விலை என்பதும் ஒன்றாக இருக்கலாம்.மக்களிடம் உள்ள பொருளாதார நிலைகளும், மதுபானமும், காசை இப்படி விரயம் செய்யக் கூடாது என்பதாகவும் பல காரணங்கள்.


தீபாவளித் திருநாள்: என்பது தீபங்களின் அணிவரிசையில் அழகு ஒளி பெறும் ஒரு நாள் என்பதே. எனவே காசை விரயம் செய்யாமல் ,நோய்வாய்களை உருவாக்கும் இரசாயன பொட்டாஷ், கந்தகம், நைட்ரேட் போன்ற பொருள்களின் காற்றுக் கலப்பினால் உருவாகும் மாசிலிருந்தும்  சுவாசக் கெடுதல்களிலிருந்தும் தப்பியுங்கள். மேலும் இனிப்பு, உடலுக்கு அதிகம் நன்மை பயப்பதல்ல என்பதால் அதையும் அளவுடன் சுவையுங்கள். மற்றவை எல்லாம் திருநாளுக்கு ஏற்றவைதான். உறவின் கலத்தல், நட்பின் இருத்தல், குடும்பம் சுவைத்தல், மகிழ்தல் யாவுமே நமது கால பாரம்பரியத்தாலும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியவையே என்று கூறி இந்த தீபாவளித் திருநாளில் அனைவருடைய வாழ்விலும் இயற்கை நல் ஒளிக் கீற்றுகள் சிந்தட்டும் ....என வாழ்த்தி மகிழும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment