Thursday, October 13, 2016

முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாமே அங்கு அப்படித்தான்: கவிஞர் தணிகை

முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாமே அங்கு அப்படித்தான்: கவிஞர் தணிகை

சாதாரணமாக எளிமையான‌ முதல்வராக இருந்தவர் வரிசையில் காமராசர், அறிஞர் அண்ணா,ஜோதிபாசு,இப்படி நிறைய பேர் இந்தியாவில். அதில் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி போன்றோர் கேரளாவில் பெயர் பெறுகிறார்கள். அதைப் பற்றிய செய்தி அடிக்கடி வருகிறது. அச்சுதானந்தன் ரெயில்நிலையத்தில் சாதரணமாக காத்திருந்தது, உம்மன் சாண்டி பேருந்திலும் , ரயிலிலும் போவது என...

சாதாரண பயணியைப் போல் ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி


கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ரெயிலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 160 கி.மீ தூரம் சாதாரண பயணியைப் போல் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ரெயிலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 160 கி.மீ தூரம் சாதாரண பயணியைப் போல் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே உம்மன் சாண்டி தான் ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புவதாகவும், இது போன்ற பயணங்களின் போது தான் மக்களிடையே நெருக்கமாக பழக முடியும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு முன் கடந்த மே மாதம் ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று பஸ்ஸில் பயணம் செய்து ஒரு முக்கியமான அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டவர் சாண்டி.



இவர்கள் முதல்வர்கள்:முதல்வராக இருக்கத் தகுதி படைத்தவர்கள். நமது முதல்வரைப் பற்றி நான் ஏதும் சொல்லவில்லை.அவர் நிரந்தரமுதல்வராகவே இருக்கட்டும். வாழ்த்துகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி : மாலை மலர்

2 comments:

  1. இவர்கள் அனைவரும் பண ஆசை இல்லாத உண்மை தலைவர்கள். இவர்களை உலகம் போற்றும். சில தலைவர்களை உலகம் தூற்றும் .

    நன்றி
    M. செய்யது
    Dubai

    ReplyDelete
    Replies
    1. thanks syedabthayar721/M.Seyyathu dubai...for your feedback on this post vanakkam. please keep contact.

      Delete