Friday, October 28, 2016

பாலகுமாரனின் புத்தி மாறாட்டம்/ஜீன்ஸ்: கவிஞர் தணிகை

பாலகுமாரனின் புத்தி மாறாட்டம்/ஜீன்ஸ்: கவிஞர் தணிகை


Image result for balakumaran

150 நாவல்,100 சிறுகதைகள், 14 படங்கள் 2 மனைவி வயது 70 தாடி மீசை முனிவர் போன்ற தோற்றம் தினமலர் தீபாவளி மலரில் ஒரு மனந்திறந்த வக்கிரம். எதையாவது எழுத வேண்டுமே என்ன எழுத என உள் சென்று கடைசியில் தன்மேல் தானே போட்டுக் கொண்ட பிணமாலை. புத்தி தடுமாற்றம் இந்த எழுத்தாளருக்கு போதாத காலம் அல்லது இறுதிக் காலம் ஏற்பட்டு விட்டதன் அறிகுறியும் அடையாளமும்.

காவிரி மைந்தனின் ஒரு பதிவு இந்த பதிவுக்கு ஒரு அடித்தளமாகிறது.எனது நண்பர் ஒருவர் கேட்டார், பாலகுமாரனைப் படித்திருக்கிறீர்களா என படித்திருக்கிறேன் என ஆரம்பித்த அந்த பதில் எல்லா இலக்கிய‌ உலகையும் சுற்றி வந்தது அப்போது. இப்போது இவரை சுற்றிவருகிறது.

 இவரது எழுத்துகளை கல்கி, ஆனந்த விகடன். குமுதம் போன்றவற்றில் தொடராகவும், புத்தகமாகவும் நிறைய படித்தேன். சில புத்தகங்கள் எனது தனி நூலகத்திலும் உண்டு.படங்களும் பார்த்துள்ளேன். ஆனால் தினமலரில் இவர் இப்போது எழுதியுள்ள அவரது சொந்த வாழ்வு இலக்கியத்தில் சேர்க்கப் படக்கூடாதது.Image result for balakumaran



இவரது எழுத்துகளில் ஒரு மீறல் இருக்கும் ஆனால் அது ஜெயகாந்தனின் சமூக அக்கறையுடனான எழுத்து போன்றது அல்ல பாலுறவு மீறல் அதிகம் தொனிக்கும் நெடி. அதையே பெண் விடுதலை எனச் சொல்லி கருதி எழுதி இருப்பார் போலும். காவிரி மைந்தன் தொடாத பகுதியை நான் தொடுகிறேன். தி.ஜ.ரா கூட கள்ள உறவுகள் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார் ஆனாலும் அதில் அவருக்குண்டான ஒரு மென்மையான ஸ்டைல் முத்திரை இருக்கும். ஆனால் பாலகுமாரனில் ஒரு கர்வம், ஒரு ஆணவம், ஒரு திமிர் இருந்து கொண்டே அந்த கள்ள உறவுகள் செய்வது சரி எனச் சொல்லும். இது போன்ற உறவுகள் சில தற்கொலைகளில் முடிந்து போயிருக்கின்றன என்பதை நான் நடைமுறையில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவருடைய எழுத்துகள் அது போன்றவற்றிற்கு ஊக்கப்படுத்துவதாக சில கதைகள் அமைந்துள்ளன. 

கிடைக்கும் காசு என்ற ஆசை இன்னும் இவரை எல்லாம் எழுதும் தேவையை உண்டு பண்ண வைத்திருப்பதை இவரின் எழுத்துப் பஞ்சத்தைப் போக்க இவர் தன்னையே தான் சொறிந்து கொண்டு இவரது உண்மை வாழ்வை தாயுடன் தந்தை நடந்து கொண்ட விதத்தை எழுதி கொச்சைப் படுத்திக் கொண்டு விட்டார்.

தினமலர் நாளேடு சர்ச்சைக்குரியது அதிலும் இந்த தீபாவளிமலரின் பாலகுமாரனின் பதிவு மிகுந்த கேள்விக்குரியது. இவரது எழுத்துகளில் ஏன் அவ்வளவு பாலியல் கலப்பு ஏன் வந்தது என்ற கேள்விக்கு இவரின் தாய் தந்தையரின் வேரைக் காண்பித்து இவர் பதில் அளித்து விட்டார்.

அவரே அவர் தந்தையைப் பற்றி சொல்கிறார்: குடி இல்லை சீட்டாடுவதில்லை, வெற்றிலை போடுவதில்லை, பொம்மனாட்டி சகவாசம் இல்லை என்று அவரின் தந்தையை அவரின் தாய் கொண்டாடுவாராம், ஆனால் அதில் ஏதாவது ஒன்று இருந்திருந்தாலும் பரவாயில்லை இவரின் வக்ரம் குறைந்திருக்கும் என இவர் சொல்கிறார். தந்தையின் கோபம், அவர் வன்முறை,அவரின் பயம், அவரின் கோழைத்தனம் பற்றி தந்தையை சாடுகிறார். மனிதரே அல்ல மனிதனே அல்ல என்றும் வெறும் உண்டு, கழித்து, உயிர் வாழ்ந்த மிருகம் என்கிறார்.

தந்தையை அடிக்க முனைந்ததை பறை சாற்றுகிறார். மேலும் தாயை அவமானப்படுத்தி மற்றவரை இழிவு படுத்த எப்போதும் தயாராய் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பைத்தியக்காரன் என்கிறார்.மேலும்  அதை விட அதிகமாய்: அடுத்த வீட்டுப் போர்ஷன் பெண்மணியை நாணி, திகைக்க வைக்க, அவமானப்படுத்த நள்ளிரவில்  பாலகுமாரனின் அம்மாவை எழுப்பி, பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்பதையும் கூட கவனத்தில் கொள்ளாது இவரது தந்தை தாயை கட்டி அணைத்து,முத்தமிட்டு, கண்ட இடங்களில்  கை வைத்து , காம சரசங்களை, கெட்ட வார்த்தைகளை உரக்க நடத்தியவன், பிள்ளைகள் எழுந்து உட்கார்ந்து கவனிக்கின்றனர் என்று தெரிந்தும் தொடர்ந்து நடத்தியவன் மொத்தத்தில் அந்த இழிமகனிடம் எப்படி நீ குடும்பம் நடத்தி மீண்டாயோ? என்று தமது இறந்து போய் பல வருடங்கள் ஆன தாய்க்கு கடிதம் எழுதுகிறாராம் அது எதற்கு என்றால் தற்கால பெண்கள் அப்படிப்பட்ட கணவரோடு வாழ்ந்தால் மீட்டுக் கொள்ளத் தானாம், மீண்டு வரத்தானாம்...என்னே ஒரு இலக்கியம்,,,புல்லரிக்குது பாலகுமாரன்.இவரது தந்தை செய்தது இழி செயல் என்றால் இவர் செய்வதும் செய்ததும் இழி செயல்தான். அந்த விந்தில் இருந்து முளைத்ததுதானே? விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்?

எந்தவிதத்திலும் கம்பீரம் இல்லாத மனிதனாம், மொழியறிவோ , சந்தியாவந்தனமோ, பூஜையோ புனஸ்காரங்களோ செய்யாதவனாம், காய்கறி, துணிமணி ஏதும் வாங்கத்தெரியாதவனாம்..இப்படி எவ்வளவோ தாயை தந்தையைப் பற்றி எழுதும்போது தந்தையை சாடி எழுதி தமது புத்தி மாறாட்டத்தை எழுதி தனது எழுத்து வறட்சியை புலபடுத்திக் கொண்டுள்ளார். இந்த அரைவேக்காடு.

இப்போது தான் புரிகிறது இவரது ஜீன் அப்படி. எனவேதான் அப்படி எல்லாம் இவரால் எழுத முடிந்திருக்கிற்து என்று.எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜனின் மனைவி சுஜாதா அவர்கள் ஒரு முறை சுஜாதா எழுத்தாளரைப்பற்றி தமது கணவரைப்பற்றி தமது எழுத்து அத்தனைக்கும், தம் பேரை விட தமது மனைவியின் பேரே இருக்கட்டும் என தாம் உயர்ந்து வெளித் தெரிந்த பிறகும் கூட கடைப்பிடித்த அறிவியலாளர் பற்றி குறைவு பட எழுதி அசிங்கப்பட்டுப் போனார். அதற்கும் நாம் மறுப்புப் பதிவு இட்டோம். அது போல இந்த பாலகுமாரனும் தாய் தந்தை பற்றி எழுதி தாயை உயர்த்துவதாக எழுதி தந்தையை தோலுரித்துக் காண்பித்து தாம் அந்த வழி வந்தவர்தான் என தம்மை அடையாளப்படுத்தி வெளிப்படுத்திக் கொண்டு விட்டார்.

பொதுவாகவே அடியேனாகிய நான் எந்த சாதி ஆச்சாரம் பற்றியும் உள் புகுந்து எழுதுபவனல்ல என்றாலும் இந்த பார்ப்பனர்கள் எதைப்பற்றியுமே வெட்கம் இல்லாதவர்கள். எதற்கும் தயாரானவர்கள் தாம் என்பது இது போன்ற பாலகுமாரனின் பதிவு மூலம் நன்கு தெரிந்து கொள்ளலாம். மற்றொரு நண்பர் ஒருவர் மற்றொரு பார்ப்பனர் வீட்டில் நிகழ்ந்ததாக சொன்ன வக்கிரமான சம்பவங்களும் இப்போது எனக்குள் நிழலாடுகிறது. அது வேண்டாம் விடுங்கள்\\\

2000 ஆண்டில் தாரமங்கலத்தில் எனக்கு ஒரு அரட்டை அரங்கத்தில் பேச வாய்ப்பு வந்தது அதில் பேசும்போது எனக்கு எனது குடும்பத்தின் ஏழ்மை குறித்து பேச பேச்சுகள் கருவுற்றன..ஆனால் அந்த ஆற்றோட்டப் பேச்சை  flow   அப்படியே முழுக்கி விட்டேன் ஏன் எனில் எமது குடும்பத்தின் நிலையை பிறருக்கு ஏன் வெளிப்படுத்த வேண்டும் . ஆனால் அப்படி வெளிப்படுத்தி இருந்தால் அது சபைக்கு நல்ல சுவையாய் இருந்திருக்கும் என விசு கருதினார். ஆனால் நமது வேர்களை நாமே காயப்படுத்தி அப்படி என்ன புகழ் வேண்டிக் கிடக்கிறது நமக்கு?

இந்த பாலகுமாரன் ஒரு யோகி போலவும் தவவாசி போலவும் வேடம் அணிந்து வருகிறார் என்பதற்கு இவரது உண்மைப் பேச்சு அதுவும் பிரசுரமான எழுத்துகள் சான்றாகிவிட்டன.

நதி மூலம், ரிஷி மூலம் காண்பது கூடாது என்பதெல்லாம் இதற்குத்தான். இதைத்தான் பைபிளில் ஏசு சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர வேறெங்கும் இறைவாக்கினர் மதிப்பு பெறுவர் என்று.

பொதுவாகவே இறுதிக் காலத்தில் மனிதர்க்கு ஒரு புத்தி மாறாட்டம் என்று ஒன்று நிகழ்வதுண்டு. இந்த தினமலரின் தீபாவளி மலரின் ப்ரியமுடன் பாலகுமாரன் எழுதிய பதிவு இவருக்கு அந்தக் காலக் கட்டம் நெருங்கி விட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. வேறென்ன சொல்ல....புகழடைந்த மனிதர்கள் கூட மேலும் மேலும் புகழுகும் பொருளுக்கும் ஆசைப்படுகிறார்கள். ஆசையை யாரால் அறுக்க முடிகிறது? அது ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் .பெரியார் தாசனுக்கு ஒரு வழியில், சசிபெருமாளுக்கு ஒரு வகையில், பாலகுமாரனுக்கு இவ்வழியில்.

இவர் எழுதிய வசனத்தில் உருவான ஜீன்ஸ் என்னும் சங்கரின் படம் மிகவும் ஆர்ப்பாட்டமாக வாயைத் திறந்து கொண்டு பார்ப்பது போல அமெரிக்காவிலிருது உலக நாடுகள், உலக அதிசயங்கள் யாவற்றுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் கடைசியில் ராதிகாவும், நாசரும் ஊத்தையாக புலை நாற்றமெடுக்கும் கதையை கட்டவிழ்ப்பார்கள் தரம் தாழ...அது போல இந்த பாலகுமாரனின் கம்பீரமும் இங்கு குடை சாய்ந்து மண்ணில் வீழ்ந்து நாசப்பட்டு விட்டது.


எல்லாவற்றுக்கும் மேலாக விறகுக் கட்டையால் கையைக் காலை உடைத்து, மண்டையைப் பிளந்து இருக்க வேண்டும். , சுத்தியல் வைத்து பற்களைத் தட்டியிருக்க வேண்டும்,முதுகெலும்பை முறித்திருக்க வேண்டும், கால்கள் நடக்க இயலாதபடி வெட்டுக்காயங்கள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்,,,அப்படீன்னா இன்னும் எவ்வளவு வன்மம் இருக்கிறது பாருங்கள் அம்மா இறந்து 16 ஆண்டு ஆன பின், அவரின் 40 ஆண்டுகால மணவாழ்வில் ஒரு மனநோயாளியான தந்தையுடன் வாழ்ந்ததாக சொல்கிறார். தந்தை இறந்த பின் 12 ஆண்டுகள் இந்த அம்மா புருஷன் இல்லாத காலம் பொற்காலம் என்று வாழ்ந்ததாக சொல்கிறார். அவரைக் கேட்டால் தெரியும் அவர்தான் போய் 16 ஆண்டு ஆகிவிட்டதே...ஆக இவர் தந்தை இறந்து 28 ஆண்டுகள் ஆன பின்னும் இவரிடம் இவ்வளவு வெறி, வன்மம் புதைந்து கிடக்கிறது எனில் இவரின் தாடி மீசை எல்லாம் வெறும் ஆஷாடபூதித்தனம் தானே? ஜீன் சரியாக வேலை செய்திருக்கிறது....

Image result for balakumaran


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

11 comments:

  1. Vakram is not based on Caste. It is applicable for Human being. Why do you want to mix Caste in this issue?

    ReplyDelete
    Replies
    1. yes you might be true. But I heard about lot of real experiences belongs to particular Caste .So here I Added.anyhow Thanks for your feedback on this post. vanakkam.please keep contact.

      Delete
  2. hi your estimation of balakumaran might be true.
    but your estimation of one community shows you are biased and jealous....

    ReplyDelete
  3. sorry, no way I am biased and jealous about any caste or community or even with an individuals.But I deeply moved with that particular community and have so many friends in that community and many types of experiences they shared with me, so; with that impact here I displayed...I am not biased and jealous anybody in this world that much of confidence I have.something I learned from those community and I studied up to 11th SSLC in that school managed by that community only.Anyhow thanks for your feedback and comment on this post. vanakkam. Please keep your contact.

    ReplyDelete
  4. குடிகாரக் கொடுமைக்கார கணவனின் தலையில் ஆட்டும் கல்லை எல்லாம் எடுத்த்ப் போட்டு கொன்ற பெண்மணிகள் எல்லாம் இருக்கிறார்கள். சிலரை எனக்கும் தெரியும். ஆனால் அவர்களை எல்லாம் விட பாலகுமாரனின் வன்மம் அதிகம். ஒரே வார்த்தையில் கொன்றிருக்கலாம் என்று சொல்லியிருந்தாலும் போதும் ஆனால் இத்தனை வசை பாடும் தேவை இருந்திருக்காது....

    ReplyDelete
  5. yo can see my comments in TODAY AND ME blog also regarding the same balakumaran...

    ReplyDelete
    Replies
    1. YES I VISITED AND SAW YOUR SITE.I am little bit confused about kavirimainthan and Nat Chander is same? thanks for your feed back on this post vanakkam.please keep contact

      Delete
    2. ok no problem Nat Chander. I want to know about you. let me know about you.. thanks. vanakkam. please keep contact

      Delete
  6. கடைசி காலத்தில் இவருக்கு இது வேண்டாத வேலை என்றே தோன்றுகிறது இவர் நேசிக்கும் தாயாரின் ஆன்மா இவரை மன்னிககாது.

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல பாடம் நடத்துகிறார் முதலில் இவரது மக்கள் இதை கடைப்பிடித்து இவருக்கு வார்த்தைகளால் சவுக்கடி கொடுப்பார்கள்.

    இவரது வாசகனாய் இருந்தமைக்கு வெட்கப்படுகிறேன்
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback and comment on this post KILLERGEE Devakottai. vanakkam. please keep contact.

      Delete