Wednesday, October 26, 2016

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு குழந்தைகள் தினம் நவம்பர் 14ல்: கவிஞர் தணிகை

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு குழந்தைகள் தினம் நவம்பர் 14ல்: கவிஞர் தணிகை


Image result for november 14 childrens day

விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி வரும் நவம்பர் 14 அன்று அன்றைய தினம் பல்மருத்துவ சிறார் தினமாகவும் இருக்கிறபடியால் மிகவும் அரியதொரு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.

அது சமயம்:பல போட்டிகளை பள்ளிப் பிள்ளைகளுக்கு முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்துகிறது.

சேலம் மாவட்டம் சேலம் அருகே உள்ள அரியானூரில் உள்ள விநாயாகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் இந்த விழா நடைபெறுகிறது.

ஆர்வமுள்ள பள்ளிகளின் பிள்ளைகள் , பள்ளிகள் வழியாகவும், தாமாகவும், தமது பெற்றோர் உடனும் வந்து கலந்து கொள்ளலாம்.

1. சிறந்த சிரிப்புக்கான பரிசு

2. பேச்சுப் போட்டி

3. வினாடி வினா

4. ஓவியம் வரைதல்

5. பொருத்தமான விடையைத் தேர்வு செய்தல்

போன்ற அறிவு சார் மற்றும் உடல் திறன் சார் போட்டிகளும் நடத்த உள்ளது. அது சமயம் அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிப் பிள்ளைகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு சிறப்பான பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கலந்து கொள்வோர் அனைவர்க்கும் பல் பரிசோதனை, பராமரிப்பு, பாதுகாப்பு ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும் என்பதை கல்லூரி நிர்வாகம் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Image result for father of dental science

நிகழ்ச்சி கல்லூரியின் சிறார் பல் மருத்துவத் துறை சார்பாக கல்லூரி முதல்வர் பேபி ஜான் அவர்களின் சீரிய அனுமதியுடன் துறைத்தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களின் வழிகாட்டுதலுடன்
நடைபெறுகிறது. நிகழ்ச்சியை மருத்துவப் பேராசிரியர் ரமேஷ் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்த மருத்துவ ஆசிரியர் ஸ்டீபன், மற்றும் பேராசிரியர் வினோலா, ஆகியோருடன் டாக்டர்: ராஜ்குமார்,டாக்டர்கள் பிரதீப் டேனியல், சூரஜ், மல்லிகா, மற்றுமுள்ள மருத்துவர்கள் குழு போட்டிகளை நடத்துகிறது.

நீங்கள் அந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியருடன் கல்லூரியின் தொடர்பு எண்: 04298‍ ~ 247773 என்ற எண்ணிலும் ராஜ்குமார் : 9894855919 என்ற எண்ணிலும் 8015584566  என்ற எனது எண்ணிலும் கூட தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்:


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment