Thursday, September 8, 2016

குற்றமே தண்டனை: கவிஞர் தணிகை

குற்றமே தண்டனை: கவிஞர் தணிகை


Image result for kutrame thandanai length of movie


ஆங்கில பனிஷ்மென்ட் தமிழில் குற்றமே தண்டனை ஆகி இருக்கிறது. நன்றாக இருக்கிறது என்றும் சொல்லும்படியாக...காக்கா முட்டை எடுத்த மணிகண்டன் முதலில் இந்தப் படத்தை எடுத்தாலும் இது இப்போது செப்டம்பர் 2ல் இந்த ஆண்டுதான் வெளி வந்துள்ளது.

படமாகவே தெரியவில்லை இதுதான் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி. யதார்த்தமாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் கதாபாத்திரங்கள் இயல்பாக வாழ்ந்துள்ளனர் இந்த சினிமாவில்.

விதார்த்  ரவி என்ற பாத்திரத்துடன் பின்னப் பட்ட கதை எனவே வேறு எந்த நடிகருமே இதில் பெரிதாகத் தெரியவில்லை அது நாசர் , ரகுமான் இருந்தபோதிலும். ஏன் எனில் கதைக்கு வலுவான அடித்தளம் உள்ளதால்.

சுமார் 1மணி 35 நிமிடம் இருக்கும் இந்தப் படத்தில் பாடல்களுக்கோ, மற்ற நடிகர் நடிகைகளுக்கோ அதிகம் வேலை இல்லாத படம். அதிகம் வேலை தராத படம்.

பார்வை நிரந்தரமாக இருண்டு குருடாக போய்க் கொண்டிருக்கும் ரவிக்கு அலுவலகத் தோழியும் உண்டு. குடி இருக்கும் இடத்தில் எதிரில் ஒரு பெண் கொலை செய்யப் பட, அவள் ரவிக்கு தெரிந்த நபராக இருக்க கொலை செய்த நபர்கள் ரகுமான் வீட்டில் முதலில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பெறுகிறார். அதுதான் அவரது கண் ஆபரேஷனுக்கு தேவையான பணம் என்று கண் மருத்துவ மனையில் ஒரு மருத்துவர் தெரிவிக்கிறார்.

எனவே ரகுமானிடம் இருந்து பெறும் அந்தப் பணம் போதவில்லை.ஏன் எனில் முதலில் சொன்ன கணக்கு தவறு..நீங்கள் 4 இலட்சத்துக்கும் மேல் கட்ட வேண்டும் எனச் சொல்ல இப்போது அந்த அதிகபடியான பணத்தையும் அந்த கொலைகார ரகுமானிடம் இருந்தே கேட்க முனைகிறார். ஆனால் ரகுமான் பிடி கொடுக்க மறுத்து விட...

இந்த கொலை குறித்த விசாரணை இவரது வீடருகே நடக்கும்போது காவலரிடம் அங்கு வந்து சென்ற பணக்கார இளைஞர் ஒருவரை அடையாளம் காட்ட அந்தக் குடும்பத்திலிருந்து மேலும் மேலும் பணத்தை பெற முயல்கிறார்.

இதனிடையே இவரது பார்வை மேலும் மங்கி வருகிறது. இவர்மேல் பரிதாபம் கொண்ட இவரது தோழி இவருக்கு பலவகையிலும் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்கிறார்.

இதனிடையே இவனை தற்செயலாக ஒரு சாலையில் கண்ட அந்த மருத்துவர் , இவருக்கு பார்வை வரும் எனச் சொன்னதே பொய். இவருக்கு அந்த வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நோய் அது. என்றும் மருத்துவமனைக்கு வருவாய் சேர்க்கவே அந்தப் பொய் சொல்ல வேண்டியதாயிற்று எனச் சொல்கிறார்.

கண் மருத்துவத்துக்கு கொலையை மறைத்து தாம் பெற்ற பணம் பயனாகதது மட்டுமல்ல...சட்டம் நீதி ஆகியவற்றிலிருந்தெல்லாம் தப்பி விடலாம் ஆனால் இயற்கையிடமிருந்து மனச் சாட்சியிடமிருந்து தாம் செய்யும் குற்றமே தண்டனைதானே என்ற கேள்வியுடன் படத்திலிருந்து அதன் கேள்வியிலிருந்து வெளியேறுகிறோம்.

நமது குடிகார மதுபான நண்பர்களுக்கு எல்லாம் இதெல்லாம் சுஜுபி பா...

நல்ல படம் பார்க்க வேண்டிய படம் . நான் தியேட்டரில் பார்க்க விரும்பிய எவரும் தொந்தரவு தராமல் பார்க்க விரும்பிய படம். ஆனால் தியேட்டர் பிரிண்ட் போல ஆன்லைனில் பார்த்தேன் சமயங்களில் வசனம் சற்று விளங்காமலே...ஆனால் உள்ளீடு நன்றாக தெரிந்ததால் செரித்துக் கொண்டு பார்க்க முடிந்த படம்.

இதற்கு 60 மதிப்பெண் நூற்றுக்கு தாரளமாக வழங்கலாம். ஆனால் நமது தமிழ் இரசிகர்களுக்கு இதெல்லாம் பிடிக்குமோ என்னவோ?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment