Sunday, September 8, 2019

மறுபடியும் அணை நிரம்பிவிட்டது: மேட்டூரிலிருந்து கவிஞர் தணிகை

மறுபடியும் அணை நிரம்பிவிட்டது: மேட்டூரிலிருந்து கவிஞர் தணிகை

நேற்று மறுபடியும் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை கடந்துவிட்டது. பதினாறு கண்மாய் பாலத்தின் வழியே சுமார் அரை அடி கதவு திறக்கப்பட்டு 30ஆயிரம் கன அடிக்கு மேல் நொடிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று நீர் வரத்து 73 ஆயிரம் கன அடிக்கும் மேல் இருக்குமென ஹொகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Total Height of the dam is :128 feet.





120க்கும் மேல் நீர் வந்தால் அந்த நீர் தானாகவே வெளியேறுமாறு கட்டமைவு. வெளியேற்ற வேண்டிய நிலை எல்லாம் அவசியமில்லை. கொள்ளளவு: சுமார். 95 டி.எம்.சி

நேற்றே அணையும் மேட்டூருக்கு செல்லும் பாலங்களும் வியாபார வேடிக்கை நிமித்தங்களால் களை கட்ட ஆரம்பித்து விட்டன.
இன்று ஞாயிற்றுகிழமை வார விடுமுறை எனவே சொல்லவே வேண்டாம். வெளியூர் பயணிகளின் வருகை மறுபடியும் மேட்டூருக்கு ஒரு உற்சவத் திருவிழாதான்.

இப்போதாவது வெளியேறி வரும் உபரி நீரை சேமித்து வைத்து அதன் பிறகாவது கர்நாடகா அரசை மற்றும் நடுவண் அரசை தமிழக அரசும் மக்களும் கெஞ்சாத நிலையை தராமல் இருக்க வேண்டும் . இதை மனிதர்கள் செய்ய வேண்டும்.

இயற்கை அளிக்கும் கொடை உயிர்களுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது. மனிதம் யாவற்றையும் கெடுத்துக் கொண்டே இருக்கிறது.

2  தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் வருகை:
Image result for dharmapuri mp present present senthilkumar
நேற்று தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் எம்.டி.ஆர்/டி. எம்.பி எங்கள் தொகுதியில் ஊர்களில் நன்றி அறிவிப்பு செய்து மக்கள் மனுக்களைப் பெற்றார் நானும் அணை இவ்வளவு அருகிருந்தும் நீர் இவ்வளவு வந்திருந்தும் மக்களுக்கு 1/போதிய குடி நீர் விநியோகம் இல்லாமையை   2.பயணிகள் போக்குவர்த்து ரயில் மாலை 5 மணிக்கு வராமல் நிறுத்தப்பட்டிருப்பதை  3. குடிநீர்க் கட்ட்ணத்தை மீட்டர் ரீடிங் இல்லாமல் 50 ரூ என்றிருந்ததை 220க்கு உயர்த்தியதை, 4. தெருவிளக்குகள் ஆண்டுக்கணக்காய் எரியாமல் இருப்பதை, புகை, மது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத தொகுதியாய் மாற்றவும் என்றெல்லாம் எனது மனக்குறையை வெளிப்படுத்தினேன்

முதலில் கை குலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு வாய் வார்த்தை மொழி மூலம் இவைற்றை எல்லாம் சொன்னேன் மனுவையும் கொடுத்தேன், எல்லாம் எழுதி இருக்கிறீர் அல்லவா எனக் கேட்டு மனுவைப் பெற்றுக் கொண்டுள்ளா. பார்ப்போம் என்ன விளைவு இருக்கிறது என...ஏன் எனில் இது குறித்தெல்லாம் ஏற்கெனவே உரிய துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வருக்கும் பிரதமருக்கும்  கூட எழுதி இருந்தேன் பயனில்லை

வேறு ஒருவராக இருந்தால் இதை புகைப்படம் எடுத்து, வீடியோ எடுத்து முக நூலில் போட்டுக் கொள்வார்கள் போட்டு இருப்பார்கள் என்றேன்....மகன் இதெல்லாம் என்னாப்பா .... என்ற மறு மொழி கொடுத்துவிட்டான்...

ஆக அவரும் மிக எளிமையாகவே இருந்ததைக் கண்டேன். நானும் மிக எளிமையாகவே சென்று எனைப்பற்றி அறிமுகமெல்லாம் இல்லாமல் ஒரு சாதாரணக் குடிமகனாகவே இந்தக் கோரிக்கையை வைத்துள்ளேன் அவர் முன்.

No comments:

Post a Comment