Tuesday, September 17, 2019

தெய்வத்தின் குரலா ஆன்மாவின் குரலா: கவிஞர் தணிகை

தெய்வத்தின் குரலா ஆன்மாவின் குரலா: கவிஞர் தணிகை
Image result for meditation side effects


சகுனமும், நாள் கிழமைக் கணக்கீடுகளும் என்னைப் பொறுத்தவரை சரியாகவே செயல்படுகின்றன. இதை நான் ஏற்றுக் கொண்டதை சொல்ல ஒளிக்க அவசியமே இல்லை. பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரைப் படித்தபின்னும் எனக்கு  நேர்ந்த இவற்றை பெரியார் பிறந்த நாளில் சொல்லக் கூச்சப்பட்டாலும் உண்மை உண்மைதானே.

நேற்று கல்லூரி முடிந்தவுடன் பயணம் முடித்து வீடு சேர்ந்தேன் துணைவியாரின் மனைவி தனது கூந்தலை அவிழ்த்து முடிந்து கொண்டிருந்தார் அதுவே நான் பார்த்த காட்சி. அது எனக்கு சரியாகப் படவில்லை

அடுத்து குளித்து முடித்து சுமார் மாலை 6 மணி நடைப்பயிற்சி புறப்பட்டேன் தினமும் மாலையில் வரும் மழை. இன்றும் வானெங்கும் கருக்கல் மேகம் திரண்டிருந்தது எனக்கு அமெரிக்கன் படமான இன்டிபெண்டன்ஸ் படத்தில் மேகம் திரண்டு செல்வதைப் பார்ப்பது போல் இருந்தது.

வேண்டாண்டா, வேண்டாண்டா என இரு முறை ஒரே வாசகமாய் ஒலியற்ற குரலின் மென்மையான எச்சரிக்கை. மீறி நடந்தேன் உடல் நலம் தேவைப்படுவது மிகவும் முக்கியமாகப் பட..

வழியில் கோம்பூரான்காட்டில் இரண்டு நண்பர்கள் நீங்கள் அந்தப் பாலத்தருகே செல்வதற்குள் மழை வந்து விடும் என்றார்கள். அப்படியே ஆரம்பித்தது மழை. கருப்பு ரெட்டியூர் வரை மட்டுமே செல்ல முடிந்தது கையில் குடையும் , அத்தியாவசிய கல்லூரி கைபேசியும், சிறு துண்டும், கைடார்ச் லைட்டும், அத்துடன் பூச்சி கண்ணில் அடிக்காதிருக்க ஒரு பவர் மூக்குக் கண்ணாடியுடன் பெட்டியில் இப்படி இத்தனை தேவைப்படுகிறது ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கூட...

ஒரு டைலர் கடை முன் புறம் எவருமில்லை. நானும் அஜித் என்னும் இளைஞர் தெர்மல் பணிக்குச் செல்பவர் எதிர் வீட்டுக்காரர் இருவரும் தஞ்சம் அடைந்தோம் அரை மணி நேரத்துக்க்கும் மேல் நல்ல மழைப்பொலிவு.

சற்று குறைய பொறுமை இழந்து குடை இருக்கும் தைரியத்தில் வீடு திரும்பலாம் என முடிவெடுத்து எதையும் மறக்காமல் எடுத்துக் கொண்டேனா எனப் பார்த்துவிட்டு புறப்பட்டேன்.

கண்ணன் வீட்டில் சற்று நிற்கலாமா இல்லை அந்தப் பெரியவர் வீட்டில் சற்று இடைவெளி கொடுக்கலாமா என்று கேட்டபடியே பாலம், அதன் பின் கோம்பூரான்காடு என நடந்து கொண்டே இருந்தேன்.

அர்ஜுனன்...கிருஷ்ணன் மட்டி மண் கம்பெனி அருகே ஒரே சேறுஞ்சகதிய்யும் அதில் குட்டையாக மழை நீர் தேக்கம், மேல் மழை. குடை கையில் இடையே ஒரு இடத்தில் சிறு நீர் கழிப்பு...அப்படியே அந்த நீர்க்குட்டையை தாண்ட வழியின்றி கம்பெனி சுவர் உள்ள புதர் ஓரம் செல்ல  முயற்சி செய்து வெளியே தாண்டி வரும்போது பார்த்தால் பாக்கெட்டில் மூக்குக் கண்ணாடிப் பெட்டியை கால் சட்டைப் பையில் சிறு துண்டுடன் வைக்க முடியாமல் செருகி வைத்திருந்ததைக் காணவில்லை. எங்கே விழுந்ததோ...தெரியவில்லை.

மனம் அடித்துக் கொண்டது..உடனே அந்த குரல்... பழி வாங்கியது போல வேண்டான்னு சொன்னோம் கேட்டியா...என..

பதறி அடித்தபடி டார்ச்சை அடித்துக் கொண்டு வந்த வழியே அந்தப் பாலம் வரை நின்று சிறு நீர் கழித்த இடம் எது எனத் தேடிக்கொண்டும், ஒரு வேளை பிரபு கடையில் சாக்ஸை கழட்டி ஷூவுக்குள் இருந்த நீரை சாக்ஸைக் கழட்டி பிழிந்த இடத்தில் ஏதாவது வைத்து இருக்கிறோமா, என்று இப்படி எல்லாம் மனம் அடித்துக் கொள்ள சென்று பார்த்தேன். அது எங்கும் காணப்படவில்லை.

மறுபடியும் சேறும் சகதியும் புதருமான பகுதியில் எங்காவது கிடக்குமென்ற நம்பிக்கையில் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை. அதை எவரும் எடுத்தாலும் அவருக்கு அது பெரும்பயனாக இருக்கப் போவதில்லை என்பது உண்மைதான் என்றாலும் பொருளாதாரம் நலிவடைந்திருக்கும் நேரத்தில் சுமார் இரண்டாயிரம் பெறுமான ஒரு அத்தியாவசியப் பொருளை தொலைத்தது எனது கவனக் குறைவால் என்பதை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை

என்றாலும் இது  வரை வாழ்வில் எவ்வளவு இழந்திருக்கிறேன், எவ்வளவு அரிய உயிர்களை இழந்திருக்கிறேன் எத்தனை பொருள்களை இது போல் இழந்திருக்கிறேன், மேலும் இந்தக் கண்ணாடி எங்கே எங்கே என்று விசாரித்து எப்படி எப்படிஎல்லாம் செய்ய வேண்டும் என முயன்று செய்து விலை கொடுத்து வாங்கி இப்படி வீணாக போனதே என்ற கவலையை நிலையாமையை சொல்லி எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு நால் எல்லாமே போவதுதானே எனத் தேற்றிக் கொள்கிறேன்.

போனது எல்லாம் போனதுதானே..

வருவது எல்லாம் வருவதுதானே...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Image result for meditation side effects
மறுபடியும் என்னை விட எனது நானை விட அந்த வார்த்தைகளே பிரதானமாகி நிரூபித்து விட்டது.... 

No comments:

Post a Comment