Thursday, September 5, 2019

தரமில்லா ஆசிரியர்களால் நேர்ந்த கதி: கவிஞர் தணிகை.

தரமில்லா ஆசிரியர்களால் நேர்ந்த கதி: கவிஞர் தணிகை.
Image result for teachers day voc birthday teresa memory day
ஆசிரியர் தினம்,வ உ சி ,டாக்டர் ராதாகிருஷ்ணன் ,பிறந்த நாள் மற்றும் அன்னை தெரஸா நினைவு நாள்: கவிஞர் தணிகை.

இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் நிறைய எழுதியாகிவிட்டது. அனைவரும் பிரபலமான வார்த்தைகளையே அள்ளி வீசிக் கொண்டிருப்பார்கள். அதற்கு நிறைய ஆசிரியர்களையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.அவரவர் ஆசிரியர் அவரவர்களுக்கு அதிசயம்தான்.

ஒரு நல்ல முதல் ஆசிரியர்: இயற்கை
இரண்டாம் ஆசிரியை: தாய்
மூன்றாம் ஆசிரியர்: தந்தை
நான்காம் ஆசிரியர்கள்: சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பம்/
ஐந்தாம் ஆசிரியர் என்றால் அது உறவுகள்
ஆறாம் ஆசிரியர் என்றால் அது நட்பு
எழாம் ஆசிரியர் என்றால் புற உலகு

ஏராளமான ஆசிரியர்களை சந்தித்து அஞ்சலி செலுத்தவே நானும் கூட ஒரு ஆசிரியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பெறுகிறேன். அதுவும் எந்தவித ஊதியமும் பெறாத ஆசிரியர்.

எமது குடும்பத்தில்  ஆசிரியர் எண்ணிக்கையில் நிறைய‌ உள்ளனர்.

அவர்களுக்கு அடிப்படையாய் ஒரு சிறு துரும்பாய் உதவி இருக்கிறேன்.

சரி சொல்ல வேண்டியதை சொல்லில் விடுவோமா:
கலாமின் ஆசிரியர் சுப்ரமணியர் என்பார் சொல்வாராம்: ஒரு நல்ல மாணவர் ஒரு கெட்ட ஆசிரியரிடமிருந்தும் கூட கற்றுக் கொள்ளலாம், ஒரு கெட்ட மாணவர் ஒரு நல்ல ஆசிரியரிடமிருந்தும் கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்றாராம்.

கெட்ட ஆசிரியர் அப்போதும் இப்போதும் எப்போதும் இருந்தே வருகிறார்கள்.அவர்களால் நேர்ந்த கதிதான் யாவற்றுக்கும் அடிப்படை.அதாவது இன்று இருக்கும் நிலை மோசமான சொல்லத் தரமில்லாது போய்க் கொண்டிருக்கும் உலகின் நிலைக்குக் காரணம்.

குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்
தன்னை விட வயது குறைவான மாணவரை மணந்து கொண்ட ஆசிரியை
தன்னிடம் படிக்க வரும் பெண்ணையே மணம் செய்து கொள்ளும் ஆசிரியர்
புகைக்கும், போதைக்கு அடிமையான ஆசிரிய குலம்
 குடித்துவிட்டு மதுபானக் கடையில் விழுந்து கிடந்த ஆசிரியர்க்கு நல்லாசிரியர் விருது என்று கொடுத்த அரசின் நிலைமை
பணத்தைப் பெருக்குவது மட்டுமே குறிக்கோள் எனக் கொண்டு எல்லா வகையான உத்திகளையும் கையாண்டு எல்லா தொழில்களையும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் செய்யும் நிலை...
அக்காவையும் தங்கையையும் சேர்ந்து மணந்து கொண்ட நிலை
தனது பிள்ளைகளை சரிவர வளர்க்காத ஆசிரியர்கள்...

இவர்களை எல்லாம் நேராக நேர் கொண்ட பார்வையுடன் நேர்மையுடன் செயல்பட வைக்காத அரசு....

இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்...அதெல்லாம் உங்களது கோணத்திற்கு பிடிக்காமல் போகலாம் இவர்களால் கெட்டழிந்து போன சமுதாயமும் மாணவர்களும் என்ன பெரிதாக சாதித்துவிடப் போகிறார்கள்...அறிவியலை காமக் களியாட்டத்துக்கு எரிய விடும் விட்டில்கள் அவர்கள் குறுகிய கால அளவிலேயே அழிந்து போகிறார்கள். இந்தியாவில் தான் இன்றைய உலகில் அதிகம் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியும் நம் கவனத்தில் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

இன்றைய காலக் கட்டத்தில் எனக்குத் தோன்றுவது என்னவெனில் : மாணவர்க்கு எது தேவையோ அந்தப் பாடத்தை சுருங்கச் சொல்லி விளங்கி வைப்பார் யாரோ அவரே நல்லாசிரியர் எனச் சொல்லத் தோன்றுகிறது. பாடமுறைகளை பாரமுறைகளாக அல்லாமல் எளிய முறையில் அதன் சூழலுக்கே சென்று இயற்கை உறவுகளுடன் கலந்து புரியும்படிச் செய்வாரே நல்லாசிரியர் எனத் தோன்றுகிறது. சிங்கம் என்பது பொம்மை அல்ல வார்த்தை அல்ல அது நமது மொழியில் ஒரு விலங்கின் பேர் அது இதுதான் என நேரிடையாக விளக்கவும் யானையைக் காட்டவும் காட்டை நோக்கி சென்று அதைக் காட்டவும் இப்படி எது விளக்கமோ அதை வார்த்தையில் சொல்லாமல் அவர்களுக்கு அதன் அருகாமையை கொண்டுவரச் செய்வதையே நல்லாசிரியரின் கடமையாகக் கொள்ள வேண்டும் அப்படிப்பட்ட ஆசிரியரிடம் கற்றுக் கொள்ளும் மாணவரே ஒரு நல்லாசிரியராக முடியும்

நமது உலகில் ஒவ்வொரு மனிதருமே ஒரு நல்ல மாணவராக இருந்ததை ஒரு நல்ல ஆசிரியராகவும் இருந்து காட்ட வேண்டும். அதன் மூலம் நிரூபிக்க வேண்டும்

நல்லாசிரியர் விருதை பெறுவார்தான் நல்லாசிரியர் என்றால் மற்ற ஆசிரியர் எல்லாம் நல்லாசிரியர் இல்லையா...இந்த போட்டி பொறாமைகளை முதலில் ஒழிக்க வேண்டும்

ஒரு நல்ல ஆசிரியர் என்பார் ஒரு தனிப்பட்ட பாட நூலில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு தங்கள் அனுபவத்தை பகிர முடியுமளவு நல்ல  வாழ்வு முறையையும் கொண்டிருப்பது அவசியம்/

மொழி என்ற கல்வி அறிவு அறிவை அளக்க கருவி அல்ல என்பதை  யாவருக்கும் உணரும் அளவு நல்ல கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். ஆங்கில, அமெரிக்க இங்கிலாந்து முறைகள் எல்லாம் தேவையுமல்ல அப்படி இருப்பாரை அந்த நாட்டினரே கூட ஊக்குவிப்பதில்லை என்பதை உணரவேண்டும்.

இந்தப் பதிவை எனது தமிழாசிரியர் மறைந்த இராசசேகரன் என்பார்க்கு காணிக்கையாக்குகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment