Thursday, September 26, 2019

அரசியலும் பணமும் விருதும்: கவிஞர் தணிகை

அரசியலும் பணமும் விருதும்: கவிஞர் தணிகை


Image result for gretta speech


குளோபல் கோல்கீப்பர் விருது பெறுபவர் நரேந்திரமோடி இந்தியப் பிரதமர் இது மெலிண்டா பில் கேட்ஸ் பவுண்டேசன் மூலம் வழங்கப்பட்டுள்ளது
இது அப்படி ஒன்றும் உலகப் புகழ் பெற்ற விருது என்றெல்லாம் சொல்லிவிடுவதற்கில்லை.

இப்போதெல்லாம் கூட்டம் சேர்ந்தபக்கம் தான் எல்லாம் கொடி பிடிக்கிறார்கள் எவரும் எதையுமே சிந்தித்துப் பார்ப்பதெல்லாம் இல்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நோபெல் பரிசுகள் நியாயமாக வழங்கப்படுவதில்லை என்றும் அப்படி வழங்கப்பட்டால் தனக்கு வழங்கப்பட வேண்டும் வழங்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் பேசியுள்ளார் அந்த நோபெல் பரிசுக்கு ஆசைப்பட்டு.

அதுமட்டுமல்ல பராக் ஒபாமாவுக்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்று அவருக்கும் எனக்கும் தெரியாது என எள்ளி நகையாடியுள்ளார். உண்மையிலேயே சிதம்பர சொல்வது போல‌ இந்தியப் பிரதமரும் ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபரும் பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்புகள்தாம்.

இருவருமே ஒருவரை ஒருவர் வெகுவாக புகழ்ந்தபடியே இருக்கின்றனர். இவரை  இந்தியாவின் தந்தை என்றும் இவரே இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும்  இவர்களை எல்லாம் கிரெட்டா தன்பெர்க் என்னும் 16 வயது சிறுமி உலக வெப்பமயமாதல் பற்றிய உச்சி மாநாட்டில் தோலுரித்துக் காட்டி நோபெல் பரிசுக்கு நிகரான பரிசை பெற்றுள்ளார்.

சீனாவை அடுத்து உள்ள இந்தியா மாபெரும் ஜனநாயக அரசு உலகளவில் இதற்கு வியாபார வாய்ப்புகள் அதிகம் உள்ளதை எல்லா பணக்கார நாடுகளும் உலகின் பெரும் பணக்காரர்களும் அறிவர் எனவே இந்தியவை ஆள்வார் எவர் என்றாலும் அவரை புகழ்ந்தே ஆகவேண்டும் அவருக்கு விசா கூட வழங்கக் கூடாது என மறுத்த தேசம் இப்படி போற்றிப் புகழ்கிறது மேலும் இவர்களே கலாம் போன்ற மாமனிதர்களை ஆடையை அவிழ்த்து விமான நிலையத்தில் சோதனை இட்டவர்கள் என்பதை எல்லாம் எவருமே மறந்து விட முடியாது.

அங்கே ட்ரம்புக்கு தேர்தல் இங்கே மோடிக்கு தேறுதல்...
எல்லாம் ஒரு தேவைக்காகவே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை 

No comments:

Post a Comment