Monday, August 19, 2019

கால நதியின் பிரவாகத்தில்: கவிஞர் தணிகை

ரயில் நிலையத்தில் எவருக்கும் பயன்படாமல் நின்று கொண்டிருந்த 8 பெட்டி பயணிகள் ரயிலை ஒரு எத்து எத்தி உதைத்தான் அது தூரப் போய் விழுந்தது. அதை ஓடி எடுத்து அணை மேல் வீசினான். அணையின் நடுப்பகுதி உடைந்தபடி நீர் பொங்கி பிரவாகமாக வெளியேறிக் கொண்டிருந்தது.

*****************
Image result for person with infinite energy

கையில் கைக்குழந்தையுடன் நின்று நிரம்பிக் கொண்டிருக்கும் காவிரி நீரை வேடிக்கைப் பார்த்தபடியே கைபேசியிலும் பேசிக் கொண்டே புகைத்துக் கொண்டிருந்தான் அவன்

அவன் பின்னால் போய் அந்தக் குழந்தையை நெருங்கிப் பார்த்தேன் சிரித்தது.. அதன் கைவிரல்களை நீட்டியது. பிடித்துக் கொண்டேன்.

குழந்தையின் தந்தை திரும்பிப் பார்த்தான்.

வழக்கம் போல எனது வாயைக் கட்டுப் படுத்தாமல் இந்தப் பிஞ்சுக் குழந்தையை கையில் வைத்தபடியே எப்படி உன்னால் இப்படி புகைக்க முடிகிறது எனக் கேட்டேன்

உனக்கென்னடா அதைப்பற்றி, நான் குடித்தால் என்ன புகைத்தால் என்ன என்று  கேட்ட அவன்  வேண்டுமானால் குழந்தையை நீயே வைத்து நன்றாக வளர்த்துக் கொள் எனச் சொல்லி விட்டு  போயே போய்விட்டான்.

அது முதல் அந்தக் குழந்தையை தன்னந்த் தனியாய் நானே வளர்த்தேன். அதற்கு இப்போது வயது 12 பெண் குழந்தை வேறு.

எனக்கும் வயது முதுமை தள்ளாமை வந்து விட்டது

இனி அந்தக் குழந்தையை பராமரிப்பவர் , வளர்த்துபவர் யாரோ....
Image result for who is going to sacrifice
............

காலம் வெகுவாக மாறி இருந்தது.

அப்போதெல்லாம் ஆற்று நீரை ஓடி வரும்போதே எவர் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் எடுத்து துணி துவைப்பர், குளிப்பர், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வர், வீட்டுக்கும் எடுத்துச் செல்வர். நீர்த்தேக்கத்திலும் நீந்திச் செல்வர், குளிப்பர், துவைப்பர். நீர் ஏழைகளின் பயன்பாட்டுக்கு தடை இல்லாமல் கிடைத்தது.

ஆனால் இப்போது நீரை எல்லாம் நீர் தேக்கத்தில் காவல் காத்து பூட்டு பூட்டு வேலியிட்டு மத்திய போலீஸ் மாநில போலீஸ் துணை இராணுவப் படை என்றெல்லாம் போட்டு காவல் காத்து ஒருவர் கூட ஒரு குஞ்சைக் கூட நீர் அருகே விடுவதில்லை. தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் நீர் எடுக்க எந்த தடையும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள.

மக்களுக்கு அவர்கள் நிலத்தடி நீரையும் கெடுத்து இரசாயன விஷமாய் ஆக்கிவிட்டு இவர்களிடம் மாதமொன்றுக்கு ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய்க்கு மேல் கொடுக்கும் கட்டணத்தொகையை தீர்மானித்துவிட்டு வசூல் செய்தபடி மாதத்தில் 10லிருந்து 12 நாட்களுக்கு மட்டுமே நீர் விநியோகம் செய்யும் இந்த அரசுகள் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளுக்கு 7 குடம் தண்ணீர்க்கு மாதம் 200 ரூபாய் கேட்டு கெடுபிடி செய்து வசூலிக்க அதை விட கொடுமையாக காலமும் விநியோகமும் இருக்கிறது என்ற உபரிச் சேதி சொல்லுன் ஊழியர்களுடன் ஒரு தலைமுறை முடிந்த அடுத்த தலைமுறையின் பயணம்.
Image result for water scarcity even in floods

Image result for water scarcity even in floods
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை



No comments:

Post a Comment