Friday, August 30, 2019

ஒரு இடம்:கவிஞர் தணிகை.

 ஒரு இடம்
Post image
ஏன் மலையின் பின் ஒளிகிறாய் மேகமாய்?
ஏன் சிலையின் பின் ஒளிகிறாய் சாமியாய்?
ஏன் இரவெலாம் ஒளிர்கிறாய் ஒரே நினைவாய்...

புவி இயல் பாதி
பூ இதழ் மீதி
நிலையாமை சொன்ன சித்தர் மனசுடன்
நீரெலாம்
நிலமெலாம்
காற்றெலாம்
நெருப்பெலாம்
வாயுக் கோளப்பந்தாய் உருள்கிறேன்
கருவிடம்

வாசல் வழியே செல்கிறேன்
தெருவிடம்

உணர்வுகளோடு போகிறேன்
உடலிடம் உருவிடம்
ஒன்றுமில்லாததாய் ஆகிறேன்
குருவிடம்...
திருவிடம்...

   கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment