Thursday, July 18, 2019

மறுபடியும் பூக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரை: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரை: கவிஞர் தணிகை





முதல் பக்கம்:

Image result for marubadiyumpookkum.blogspot.com
 ஒரு நல்ல கவிதையின்
படிக வரிகள்
மனதை விட்டகலாது

ஒரு சிறந்த விதை
மண்ணுக்குள்ளேயே
மக்காது

இரண்டாம் பக்கம்:

என்னைத் தந்தவளுக்கும்
எனக்காக‌

தன்னைத் தந்தவளுக்கும்

இதழ்களைப் பற்றி:

நானே கருவாகி தானே உருவாகி உங்கள் உள்ளத்தில் ஒரு சிறு பகுதியை தொட்டுச் செல்ல நான் எடுத்துக் கொண்ட காலமும் சிரமமும் மிக அதிகம்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
நான் பாரதி, தாகூர் போன்ற மகாக் கவியில்லை
Image result for marubadiyumpookkum.blogspot.com
என்னால் உலகு உய்யப் போகிறது என்று சொல்லுமளவு நான் முட்டாளுமில்லை
Image result for marubadiyumpookkum.blogspot.com
என்னால் இந்த நாடு சுபிட்சம் அடையப் போகிறது என எண்ணிக் கொள்ளுமளவு நான் பெரிய தியாகியுமில்லை.
Image result for marubadiyumpookkum.blogspot.com
என் பின்னோடு எந்த மதமும் தொடர்ந்து வரப் போவதில்லை என்பதையும் நானறிவேன், என்றாலும்

நான்: கால எல்லையை குறுகிய சாதி, மதக் கோடுகளை வாழ்வின் நடைமுறை யதார்த்தத்திலும் பிடிவாதத்துடன் கடக்க ஆசைப்படும் ஓர் சாதாரண மனிதன்.

சக மனிதரின் துன்பம் கண்டு துயரம் கொள்பவன்
Image result for marubadiyumpookkum.blogspot.com
நிறைய ஏமாற்றங்கள் என்னிடமும் உண்டு

ஆனாலும் என்னால் எவருமே என்றுமே ஏமாற்றப்பட்டு விடக் கூடாது என்று பிரார்த்திப்பவன்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
எனது இளமை விடைபெறும் முன்பே என்னால் முடிந்த அளவு எனது வீட்டுக்கும், எனது நாட்டுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்து விட்டதாய் உணர்கிறேன். அந்த திருப்தியின் அடையாளமாய்த்தான் இப்போது நான் உங்கள் கைகளில் இருக்கிறேன். நான் இனி எப்போது இறந்தாலும் எனக்கு சந்தோஷமே.
Image result for marubadiyumpookkum.blogspot.com
நான் என் குடும்ப உறுப்பினர்களைக் கூட உலகின் அங்கமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முகம் தெரிந்த தெரியாத இவ்வுலகின் எல்லா மனிதர்களையுமே என் குடும்ப உறுப்பினர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் எதிரொலிதான் இந்தப் புத்தகம்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
அன்புப் பிரவாகத்தின் சுழலில் அகப்பட்டு மீளத் தெரியாத எனது அவ்வப்போதைய மீறிய துக்கமும் பீறிய சந்தோஷமுமே இந்தக் கவிதைகள்

Image result for marubadiyumpookkum.blogspot.com
பல கோணங்களின் ஒரு பரிமாணம் மட்டுமே இப்போது உங்களுக்காக!
Image result for marubadiyumpookkum.blogspot.com
                          மறுபடியும் பூக்கும் வரை

                               சு. தணிகை.
                                1991.
Image result for marubadiyumpookkum.blogspot.com

No comments:

Post a Comment