Sunday, March 19, 2017

மேல் மருவத்தூர் அம்மாவாடா, இதுதான் அம்மா செய்யற வேலையாடா? கவிஞர் தணிகை

மேல் மருவத்தூர் அம்மாவாடா, இதுதான் அம்மா செய்யற வேலையாடா? கவிஞர் தணிகை.

Image result for melmaruvathur amma

இந்த நாட்டில் அம்மாக்கள் பெற்றவரைத் தவிர மற்றவர் அதிகம். அதில் ஒரு அம்மா இல்லை அம்மாக்கள் பங்காரு  என்பவரும், அவரது மகன்களும் அவரது குடும்பமும்..


Image result for melmaruvathur amma

ஏற்கெனவே மருத்துவ கல்லூரி என்றுதான் நினைக்கிறேன் மறந்து விட்டது, அங்கீகாரம் கோரிய விஷயத்தில் கையும் களவுமாக இலஞ்சம் கொடுத்தவரும், வாங்கியவருமாக இந்த மேல்மருவத்தூர் அம்மாக்கள் வழக்கு அளவில் செய்தி ஊடகங்களில் செய்தி அலை பாய்ந்து கொண்டிருந்தது.
Image result for melmaruvathur ammaRelated image

Related imageRelated image


அம்மாக்கள் சும்மாவா விட்டிருப்பார்கள், என்ன செய்தாரோ, ஏது செய்தாரோ, அரசும் அடிமைகளும் அதாங்க இலஞ்சம் ஊழல் அடிமைகளும் இருக்கும் வரை இது போன்ற அம்மாக்கள் வெளிவருவது கஷ்டமா என்ன? ஜெயலலிதாவை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னபிறகும் குற்றவாளி அம்மாவை தியானபீடத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள் ஒரு அம்மா கூட்டம்

அது போல இந்த அரசுகள் இருக்கும் வரை , இப்படிப்பட்ட அரசியல் தமிழகத்தை சீரழிக்கும் வரை, குமாரசாமி போன்ற நீதிபதிகள் இருக்கும் வரை இந்த அம்மாக்கள் வெளிவருவதில் எந்த கஷ்டமும் இல்லையே...

இப்போது அந்த விஜய் என்னும் திருநெல்வேலி மாணவரை அடித்து அவர் மருத்துவமனையில் அனுமதி, காவல் துறை நிர்வாகியை தேடி வருகிறதாம்..

பெற்றவருக்குத்தானே பிள்ளையின் அருமை தெரியும், நீங்கள் எல்லாம் அம்மாவாடா, அம்மா என்றால் சும்மா இல்லைடா, பால் வரும் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் ஊற்றி வளர்க்க.... உங்களுக்கு எது எங்கடா வருது? பார்த்து தெரிந்து கொண்டு அதன் பிறகு நீங்க அம்மாவா இல்லை ஆட்டுக்குட்டியா என்பது பற்றி முடிவு செய்து கொள்ளுங்கள்...

விஜய் என்ற மாணவரை தாக்கிய இந்த மேல்மருவத்தூர் கூட்டத்தை வன்மையாக கண்டிக்கவே இந்த பதிவு. இவர்களை எல்லாம் தூக்கி உள்ளே வைத்து இவர்கள் நடத்தி வரும் அத்தனை அறக்கட்டளை அமைப்பையும் அரசே உடனே எடுத்துக் கொள்ள வேண்டும், அதுதான் நீதி, சட்டம் இருக்கும் நாட்டில் செய்யப்பட வேண்டியவை.

Image result for melmaruvathur amma


ஆனால் இந்த நாட்டில் ஏதாவது அப்படி இருக்கிறதா என்ன?

மறுபடியும் பூக்கும் வரை

 I request Podhigai TV may investigate this news and telecast about it...

கவிஞர் தணிகை.

2 comments:

  1. எல்லோரும் சாமியார்கள் பின்னால் அலைகிறார்கள்.
    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. thanks for your feedback on this comment sir. vanakkam.

    ReplyDelete