Monday, March 27, 2017

வைகோவும் ஊடகங்களும், ஹைட்ரோ கார்பனும் மத்திய அரசும்: கவிஞர் தணிகை.

வைகோவும் ஊடகங்களும், ஹைட்ரோ கார்பனும் மத்திய அரசும்: கவிஞர் தணிகை.
Related image


பொதிகை இராமகிருஷ்ணன் ஓய்வு பெற்றவர் இப்போது சன் டிவியில் இருக்கிறது நேற்றுத்தான் வைகோ மூலம் நான் தெரிந்து கொண்டேன். ரஜினிகாந்த் பற்றி டில்லியில்  போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற வைகோவிடம் கேள்வி கேட்ட ஊடகம் மட்டி மடத்தன இரகத்தை சார்ந்தது, வைகோ என்னும் மனிதர் எவ்வளவு தரக்குறைவானவராக இருந்து நாட்டின் தலைவிதியை குட்டிச் சுவர் செய்தபோதும் அங்கு அவர் நடந்த கொண்ட விதம் ஊடகங்களின் முகத்திரையை கிழித்து அவரை விட ஊடகம் எல்லாம் எவ்வளவு கேவலம் என்று சொல்லாமல் சொல்லியது

ரஜினிகாந்த் என்ன நாட்டை திருத்த வந்த உத்தமரா? பிஜேபி ஆதரவாளர் என்ற ஒரே காரணத்தால் ஆடத் தெரியாத அவர் மகளை ஐ.நாவில் ஆடவைத்த பெரும்புள்ளிதானே? she is wife of actor Tanush.

அவர் இலங்கைக்கு செல்லாததுதான் நாட்டில் பெரும்பிரச்சனையா? இந்த ஊடகவியலாளர் எல்லாம் அந்த அம்மாவின் 73 நாட்களில் என்ன செய்து கொண்டிருந்தனர், இன்னும் என்ன நடந்தது என வெளிக் கொண்டு வர இயலா இந்திய ஊடகம் என்ன மண் ஊடகம்? மதுவை விலக்காமல் இன்னும் இருக்கும் தமிழக அரசை என்ன கிழித்தார்கள்? உச்ச நீதிமன்றம் காவிரி நீர் விடச் சொல்லியும் விடாத கர்நாடக அரசை என்ன செய்தார்கள்?

இந்தியாவின் 4 வது தூண் இப்படி காசுக்காக, சுய இலாபக் கணக்குடன் எந்தவித பத்திரிகை தர்மமுமே இல்லாமல் செயல்படுவதால்தான் இந்தியாவும், தமிழகமும் இந்த இலட்சணத்தில் இருக்கிறது... தேவையற்றதுக்கு பெரும் விளம்பரம் தரும் செய்திகள், ஆக்கபூர்வமான செய்திகளுக்கு இருட்டடிப்பு, அதை வெளியிடக் கூட பெரும் எதிர்பார்ப்பு இதை எல்லாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பாமர மக்கள்

Image result for suntv journalist Ramakrishnan

அவரவர் ஒரு டி.வி, ஒரு பத்திரிகை, இதில் எது உண்மை எது பொய் எனக் கண்டறிய முடியா கேவல நிலை...இதில் ஊடகம் என்ன கிழித்து நாட்டின் தலைவிதியை மாற்றிய விதை விதைத்திருக்கிறது. என்ன ஒரு வேறுபாடு எனில் செய்தி ஊடகங்கள் அறிவியல் மலர்ச்சியால் நொடிக்கு நொடி புதிதாக செய்திகளை உடனுக்குடன் உலகெங்கும் பரப்புவது ஒன்றுதான் பலன்

மற்றபடி வைகோவும் இதுவும் ஒன்றுதான். எதை வேண்டுமானாலும் சுய இலாபத்துக்காக எதையும் செய்யக் கூடிய விஷயத்தில்..

எனவே ஒருவருக்கு ஒருவர் பழி சொல்லக் கூட அருகதை இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

2 comments: