Saturday, September 17, 2016

ஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிரி பிரச்சனையில் சென்று மாற்றலாமே!: கவிஞர் தணிகை

ஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிரி பிரச்சனையில் சென்று மாற்றலாமே!: கவிஞர் தணிகை

Image result for bangalore cauvery issue


பெங்களூருவுக்கு பந்த்லூரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பந்த்லூர் தீ தனக்குத் தானே வைத்துக் கொண்டது.கால் ஓயும் வரை உன் சாம்ராஜ்ஜியம்தான். ஒரே பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாமே தமிழனை எல்லாம் ஏமாற்றுவோர். மாற்றுவோர்க்கு மதிப்பில்லை.... முதல் குற்றவாளி டில்லியில், இரண்டாம் குற்றவாளி சென்னையில், மற்ற குற்றவாளிகள் யாவரும் நம்மருகே...அரசியல் என்ற பிரிவினைச் சக்தி  சதி தீ எல்லா ஒற்றுமையையும் எடுத்து விழுங்கி எரித்து முடித்துக் கொண்டிருக்கிறது.

அங்கிருந்த தமிழர் எல்லாம் இங்கு வந்து விட்டார். வர முடியாத தமிழர் எல்லாம் வீடடங்கி கூடடங்கி வாழ்வதாக செத்துக் கொண்டிருக்க, மாண்டியாத் தமிழரை எல்லாம் ஒருங்கிணைத்த அரசியல் சக்திகள் அவர்களை தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழர்க்கு எதிராகவும் கோஷம் போட வைத்திருக்கின்றன.


Image result for bangalore cauvery issue

அங்கு மாநிலத்தில் தனக்குத் தானே வைத்துக் கொண்ட தீயால் எல்லாப் பணியும் தமிழர் இல்லாததால் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. 100 பிணங்களுக்கும் மேல் எடுத்து அடக்கம் செய்ய, எரியூட்டாமல் கிடக்கின்றன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் எந்தப் பணியும் நடைபெறாமல் ஆள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கின்றன. 9 வது மாடி ஏறி பணி செய்யும் மென்பொருள் பணியாளரைக் கூட எங்க தண்ணீ இருந்ததால் தானே நீங்க வேலை செய்ய வந்தீர் எனத் துரத்திய கன்னட மக்கள் அந்தப் பணியை எப்படி செய்யப் போகிறார்கள் தெரியாமல் என விழித்துக் கிடக்கிறார்கள்.

என்றாலும் அம்மா திருமண மண்டபம் கட்ட, கட்சியில் 90,000 பேருக்கு மேலானவர்களை சேர்க்க வாய் திறக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் அடையாளம் செய்ய வாய் மூடியே சாதிக்கிறார்கள். கர்நாடகத்தில் மேலைக்கோட்டையில் பிறந்தவர், பார்ப்பன அக்ர‍ஹாரத்தில் சிறையில் இருந்த பயம் இன்னும் போகவில்லை இவருக்கு, மேலும் இவருக்கும் கர்நாடகத்திற்கும், ஆந்திராவுக்கும், மோடிக்கும் நிறைய பங்குப் பணிகள் உள்ளன இன்னும் சில வாரங்களில் வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கின் தீர்ப்பு வேறு உச்ச நீதிமன்றத்தால் சொல்லப் பட இருக்கிறது.

எனவே ஆளும் கட்சி பள்ளியை கல்வி நிலையங்களை, மத்திய மாநில அலுவலகங்களை அரசுப் போக்குவரத்தை வெற்றிகரமாக காவல்துறைப் பாதுகாப்புடன் நடத்தியதாக சொல்லும், எதிர்க்கட்சிகள் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதாக சொல்லும். எப்படிப்பார்த்தாலும் பாதிக்கப் பட்ட தமிழர்களின் குரல் கூட சரியாக வெளிப் படுத்த முடியாத ஆட்சி தமிழர் அல்லாத ஆட்சி மாட்சி. மதுபானப் பிரியர்களால் தேர்தல் முடிவு நிர்ணயக்கப்பட்டதால் கிடைத்த பரிசு அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், கொல்லலாம். அதுதான் ஜனநாயகம்.

இந்திய நதிகளை இணைத்தால் அது இது போன்ற பிரச்சனைக்கு தீர்வாகும். எனவே அது பற்றி செய்வார் முதல் குற்றவாளியாக டில்லியில் இருக்கிறார். தமிழ் நாட்டை ஆண்டபடி தமிழை தமிழரை குளறுபடி செய்ய வேண்டிய, செய்த மாண்புமிகுக்கள் இரண்டாம் குற்றாவாளியாக சென்னையில் இருக்கிறார். நாங்கள் காவிரிக் கரையில் இருக்கிறோம் காலம் காலமாக. தாய்க்கெல்லாம் தாயாக அந்த நீர்த் தாயைப் பார்த்தபடி. எங்களது கருத்துகளை எல்லாம் கேட்க நாதியின்றி...மற்றோர் எல்லாம் கட்சிப்பணிகளில் சலியாது உழைக்கிறார்.

ஒரு பந்தால் உலகை மாற்றுவோம், மயிரைக் கட்டுவோம், வெட்டுவோம் என்ற புடுங்கிகள் எல்லாம் சேர்ந்து இந்தக் காவிரி விவகாரத்தில் எல்லாம் சென்று தீராத பிரச்சனையாக காலம் காலமாக அணையாமல் கொழுந்து விட்டு எரிந்தபடி தீர்க்கமுடியாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையை எல்லாம் தீர்க்கலாமே...இவர்கள் மாற்றுவோர் இல்லை ஏமாற்றுவோர்.இவனும் கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்த மலையை, மண்ணை, காற்றை வஞ்சித்து தமிழரை ஏமாற்றிப் பிழைப்பவன் தான்...

இது போல நிறைய பேர் இந்த மண்ணில் இருந்து கொண்டு தழிழரை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சாமி, பூதம் என பயமுறுத்திக் கொண்டு..இந்தப் பெரியார் நினைவு நாளில் இதை பதிவு செய்வதில் அடையாளமாகட்டும் இந்தப் பதிவு.

கர்நாடகாவில் நடக்கும் இந்த வெறியாட்டம் ருத்ரவடிவம், செயலற்ற தமிழ் வடிவம் சிவம். ஆனால் இதன் பின்னணியில் வறுமையும், ஏழ்மையும் அறியாமையும் இருக்கிறது என்கிறார்கள் அறிவு சார்ந்தோர். இது இனவெறி மட்டுமல்ல, எமது வளத்தை, எனது வாய்ப்பை, எனது அறியாமையை பக்கத்து மாநிலத்தான் வந்து பிடுங்கிக் கொண்டு நல்லா வாழ்கிறான். நான் இன்னும் இப்படியே இருக்கிறேன் என்ற அவனது ஆற்றாமையை இந்த அரசியல் பித்தலாட்டக்காரர்கள் கட்சி பேதம் கொண்டு கன்னடிகா தமிழர் என்று தூண்டி விட்டு அரசியல் இலாபம் தேடி எதிர்வரும் சட்ட சபையில் இடம் பிடித்து ஆள நினைக்கும் போட்டியே இதன் வெளிப்பாடு என்ற ஒரு கணிப்பு இருக்கிறது.

பொருளாதாரத் தீர்வு மூலம் நதி நீர்ப் பங்கீடு மூலம், நதி நீர் இணைப்பு மூலம் ஆட்சியாளர்கள் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் இத்தனை காலமும் இவர்கள் இத்தனை உயிர்கள், இழப்புகள் நடந்த பின்னும் அப்படியே சட்டை செய்யாமல் இருக்கிறார்கள். ஏன் அப்போதுதான் அவர்கள் பிழைப்பு நடக்கும் என்றுதான்.
Image result for bangalore cauvery issue




எனவே உண்மையான எதிரிகள் இந்த இனவெறியர்கள் அல்ல, அதன் பின் மறைந்து கிடக்கும் அவர்களை அப்படி பிர்த்தாளும் சூழ்ச்சியுள் சிக்க வைத்திருக்கும் அரசியல் சக்திகளே, மேலும் ஆளும் கட்சிகளே. அதன் தலைவர்களே.

ஒரு தலைமை தான் எதையும் செய்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது. ஒரு தலைமை அதை எப்போதும் ஆதரிக்கிறது இது மக்களுக்கான ஆட்சி அல்ல, அவர்களுக்கான ஆட்சி.

இதைப் புரிந்து கொண்டார் ஒன்று எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும், அல்லது எதிலுமே ஈடுபடக்கூடாது. இதற்காக விக்னேஷ் போன்ற உயிர்கள் போவது இந்த நாட்டுக்கு இன்னும் பேரிழப்பே.


முதல்வர் அம்மா பள்ளிக்கு, அலுவலகத்துக்கு, கல்லூரிக்கு செல்லுங்கள் என்றார் பாதுகாப்பு உண்டு என்று, என் வீட்டு அம்மா போகக் கூடாது என்றார், காவிரித்தாயை அதன் நீரைப் பருகியே பாதி ஆயுள் வாழ்ந்தவன் என்ற நன்றிக் கடனுடன் எங்கும் போகாமல் இருந்து விட்டேன்.

அம்மா மேல் மருவத்தூர், அப்பன் ஈஷா, வேதாத்திரி குழுமம், அம்மா அமிர்தானந்த மயி, ரவி சங்கர், பதஞ்சலிகாரு எல்லா சாமிகளும் அம்மாக்களும் சேர்ந்து காலம் காலமாக இருந்து வரும் இந்தப் பிரச்சனையை தீர்த்தால் நானும் அவர்களுடன் சென்று தியானம் செய்ய அமர்ந்து கொள்வேன்...
Image result for bangalore cauvery issue

பெங்களூரு நல்ல திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்று எப்போதும் எனக்குப் பிடிக்கும் இப்போது அதை பந்த்லூரு என்றழைக்கிறார்கள்...பிடிக்காத மனிதத் தன்மை அற்ற காட்டுமிராண்டித்தனமான கட்டடங்களாக காட்சி கொடுத்து கசப்பாகி விட்டது எனக்கு...

பொதுவாகவே மேற்கு வங்க (பங்க்ளாக்கள்) வங்காளிகள், கேரளத்து மலையாளிகள்,தமிழகத்தின் தமிழர்கள், இந்தியாவில் எல்லா மாநிலத்தவரையும் விட கொஞ்சம் முன்னணியில் உள்ளவர்கள்தான். அறிவை நம்புவார் வன்முறையை கையில் எடுப்பதில்லை. அடி வாங்கலாம் ஆனால் வெல்வது அறிவுள்ளவர்களாகவே இருப்பார்கள். உடல் வலுவை நம்பி செயல்படுவார் உடல்வலு இருக்கும் மட்டுமே செயல்பட முடியும், அறிவு நம்பிகள் அறிவை இறுதி வரை பயன்படுத்தலாம்...


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





No comments:

Post a Comment