Friday, August 30, 2024

இந்தியன்‍‍‍‍‍‍~‍ரியல்:அத்தியாயம் ஒன்று

 இந்தியன்‍‍‍‍‍‍~‍ரியல்: அத்தியாயம் ஒன்று



இறந்த பின்னே மகாத்மாவுக்கும் அல்பாத்மாவுக்கும் பெயர் ஒன்றுதானே நிற்கிறது.அவனுக்கு சுமார் 11 அல்லது 12 வயதிருக்கும் அப்போது.சேலம் மாநகரத்தின் ஒரு மூன்றெழுத்து பிரபலமான சீட்டுக் கம்பெனியில் அவனது மூத்த சகோதரன் ஒருவனுக்கு திருமணம் செய்ய சீட்டு போட்டு வந்தனர். இவன் பசங்களில் மூன்றாவது அல்லது கடைசி. குடும்பத்தில் எல்லோரையும் சேர்த்தால் 8 வது.


சில வருடங்கள் அல்லது பல மாதங்களாக சீட்டு கட்ட மால்கோ பள்ளி வாசலில் அப்போதிருந்த இந்தியன் வங்கி மூலம் டி.டி. வரைவோலை எடுத்து அனுப்பும் பணி இவனுடையது.இவனை விட எல்லாம் பெரிய கொம்பன்களாக வீட்டில் இருந்தாலும் இவன் தானே இளிச்ச வாயன் எனவே எல்லா எடுபிடி, சிட்டாள் பணி முதல் முட்டாள் பணி வரை எல்லாப் பணியும் இவனுடையதே.


ஒரு மாதம் வரைவோலை சென்று சேரவில்லை என சேலத்து கிங்காங் கம்பெனி பிரதிநிதி கூறிவிட்டதாக இவன் வீட்டு பெரிய கொம்பன் ஆட்டம்...காரணம் கல்யாண மோகம்.என்னடா இது பெரிய வம்பாகி விட்டதே என அப்போதே இரு தலைக் கொள்ளி எறும்பாக தத்தளித்த இவன் ஒரு 15 பைசா அஞ்சல் அட்டை அப்போது இன்னும் விலை  குறைவாகவும் இருந்திருக்கலாம்.அதை வாங்கி அந்த கிங்காங் கம்பெனிக்கு நல்லாப் பாருங்கள் அனுப்பி இருக்கிறோம் என அவனுக்குத் தெரிந்த மொழியில் எழுதிப் போட்டு விட்டான்.


நல்லாப் பார்த்திருப்பார்கள் போலும். அந்த வரைவோலை அவர்களிடம் இருக்க...கணக்கு வைத்துக் கொண்டு, அதன் தோல்வியை ஏற்க முடியாமல் பிரதியாக யார் அவன் கடிதம் எழுதியவன் அவனை அனுப்புங்கள் அவனுக்கு பாடம் புகட்டுகிறோம் என கிங்காங் கம்பெனி நபர்கள் பெரிய கொம்பனை உசுப்பி விட அவன் குதிக்கிறான் அவனை அந்த சிறுவனை அங்கே சேலம் போகச் சொல்லி...அவர்கள் எடுத்தவுடன் கை நீட்டுவார்களாம் பெரிய புடுங்கிகள் கம்பெனி ஆயிற்றே...சிறுவனான அவன் மீண்டும் இருதலைக் கொள்ளி எறும்பெனவே....தவித்தபடி என்னடா இது தவிலுக்கு இரு பக்கமும் அடி என்பார்களே அப்படியாகிறதே நம் பிழைப்பு என அந்தக் காலத்திலேயே எண்ணமிடுகிறான்.


தடுமாறியபடி இருந்தவனின் ஆறுதலாக அவனது தந்தை< என்னடா சும்மா மிரட்றீங்க> அவன் எல்லாம் ஒன்றும் அவங்க கிட்ட‌ போக வேண்டியதில்லை என பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


அவனின் நினைவுக்கு எட்டிய வரை அப்போதிருந்தே அவன் எழுத்து மூலம் போராடி வெற்றி அடைய முடியும் என்பதையும் புரிந்து கொண்டிருந்தான். வெற்றியின் சுவை எவ்வளவு கொடியது என அவனுக்கு அப்போது தெரியாததாயிற்றே அவன் என்ன ஒரு சிறுவன் தானே.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




2 comments: