Monday, August 5, 2024

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: கவிஞர் தணிகை

 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: கவிஞர் தணிகை



சில வரிகளில் எனைப் பகிர்ந்து கொள்ள அவா. உலக அளவிலான ஒலிம்பிக்ஸ் ஒரு விளையாட்டுத் திருவிழா உலகத்துக்கே. காண கண் கோடி வேண்டும். பார்த்து பார்த்து கண்ணைக் கெடுத்துக் கொள்வோம் போல இருக்கிறதுJuly  26ல் ஆரம்பித்தது11 ஆகஸ்ட் நிறைவு. (15 நாள்)


1. இந்த விளையாட்டுத் திருவிழாவில் இன மற்றும் நிற பேதம் நிலவுகிறது என்பதை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடிகிறது.பரவலாக இது பற்றி செய்திகள் உள்ளன


1. 100 மீ.ஓட்டத்தில் தேர்வின் போதே கிரேட் பிரிட்டனைச் சார்ந்த கறுப்பு இன வீரரை நீக்கியது.

2. இந்திய வளைக்கோல் பந்தாட்டத்தில் (ஹாக்கி) இந்திய வீரரை நீக்கியது

3. பொதுவாகவே பார்வையாளர்களும், ஊடகங்களும் வெள்ளை இன விளையாட்டு வீரர்கள் பால் காண்பிக்கும் பிரியத்தை கறுப்பு இன வீரர்கள் பால் காண்பிக்காதது.


4. இஸ்ரேல் நாட்டை அப்படியே ஏற்றுக் கொண்டது

5. ரஷியா பெயருடன் விளையாட அனுமதிக்காமல் அதன் விளையாட்டு வீரர்களை அகதிகள் என்றும் பதக்கம் பெற்றால் தனி மனிதருக்கு, நாட்டுக்கு அல்ல என்ற விதியுடன் விளையாடச் சொல்லி உள்ளது.


6.கறுப்பு இன விளையாட்டு வீராங்கனை ஒருவரை முன்னேற்பாட்டு (வார்ம் அப்) உடல் ஏற்பாடு செய்து கொள்ள வந்தவரை இது புது விதி இங்கெல்லாம் வரக்கூடாது எனத் திருப்பி அனுப்பியது


7. முடிந்த வரை கறுப்பு இன வீரர்கள் வெற்றி பெறாமல் வைக்க சில்லறை வேலைகளை செய்து பார்ப்பது என நான் பார்த்து வந்ததை வைத்து என்னால் இந்தளவு சொல்ல முடிகிறது. பிரான்ஸ் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நடத்தும் நாட்டுக்கும், அகில உலக ஒலிம்பிக்ஸ் கமிட்டிக்கும் இதை நாடுகளின் தலைமைகள் பிரதிநிதித்துவம் செய்து தெரியப்படுத்தினால் நல்லது.


இதை மட்டுமே சொல்லும் நோக்கத்துடன் பார்த்தால் இன்னும் அவர்கள் சிறுமைத்தனம் வெளிப்படலாம்.


ஆனால் தலையாய விளையாட்டுகள்,இந்தியா காலிறுதி வரை ஈடு கொடுக்க முடிகிறது அதன் பின் நமது வீரரகளால் சாதிக்க முடியவில்லை என்பதைக் காண முடிகிறது. 117 பேர் போய் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். 


ஒலிம்பிக்ஸ் வரும்போது மட்டும் இதை நாம் பேசிப் பயனில்லை.

ஹாக்கி விளையாட்டில் க்ரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக கால் இறுதியில்  10 பேர் மட்டுமே விளையாடி அரை இறுதிப் போட்டிக்கும் நுழைந்த நமது இந்திய அணியை பாரட்டத்தான் வேண்டும் அதிலும் கோல் விழாமல் தடுத்து அணையாக நின்று தடுத்த கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேசுவுக்கு வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: ஈரானும் இஸ்ரேலும் போருக்கு ஆயத்தம் சில நாளில் போர் மூளும் அபாயமும் இருப்பதாக செய்திகள்

வளிமண்டல நதிகள்/பறக்கும் ஆறுகள்/ கேரள வயநாட்டுத் துயருக்கு காரணம் என்று அறிவியல் கூறுகிறது.


No comments:

Post a Comment