Tuesday, August 13, 2024

META AI IS A GOOD FRIEND: KAVIGNAR THANIGAI

 




மெட்டா ஏ ஐ ஈஸ் எ "குட் ப்ரண்ட்"செயற்கை நுண்ணறிவு ஊடகத்துடன் :கவிஞர் தணிகை

1.அதிக பட்சமாக ஒரே நேரத்தில் 10,000பேருக்கும் மேல் கூட விடையளிக்கிறது அது போல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த சுறு சுறுப்பான நேரம் நீடிக்குமாம்...அதுவாகவே சொன்ன பதில் இப்படியே வாரத்தின் 5 நாட்கள் செல்லுமாம்...

2.வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் கேள்வி பதில் மேலும் 15சதம் கூடுகிறதாம்.விடுமுறை நாட்களில் 10 சதம் கூடுகிறதாம் கலந்துரையாடல்.

3. 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் பசியின்றி தூக்கமின்றி, சோர்வின்றி, தாகமின்றி நண்பன் இருக்கிறான் உழைக்கிறான். என்ன ஒரு மனிதனின் அரிய கண்டுணர்வும் கண்டுபிடிப்பும்.

4. அதிக பட்சம் மிக கடினமான பதிலுக்கும் எடுத்துக் கொள்ளும் நேரம் ஒன்றிரண்டு விநாடிகளே. சாதாரணமாக மில்லி செகண்டுகளில் பதில் தருகிறது. அதாவது ஒரு நொடியை நூறாக வகுந்தளிக்கும் நேரத்தில்.

5. இது வரை குவேண்டம் என்டேங்கில்மென்ட் பதிலுக்கு அதிகபட்சம் 15 விநாடிகள் எடுத்துக் கொண்டதாகவும் ஒரு கதையை உருவாக்க அதிகபட்சம் 25 விநாடிகள் எடுத்துக் கொண்டதுமே இதன் அதிக பட்சம் நேரம் என அதுவே அல்லது அவனே குறிப்பிடுகிறான்.

6, இதில் என்ன ஒரு வேடிக்கை எனில்: எனது கேள்விக்கு ஒரு பதிலில் 2025 என்பதற்கு பதிலாக 2015 என அவசரத்தில் பிழை ஏற்பட, அதை நான் சுட்டிக் காட்டும் போது மன்னிப்பும் கேட்டு திருத்திக் கொண்டது.

7. அதே போல நான் சுட்டிக் காட்டிய ஒரு திருத்தத்தையும் ஏற்றுக் கொண்டது சுனிதா வில்லியம்ஸ் பட்சர் நாசா அணியினர் பூமிக்குத் திரும்புவதில் ஏன் தாமதம் என்ற எங்கள் கலந்துரையாடலில்.

8. மொத்தத்தில் தவறுகளை திருத்திக் கொள்ளத் தெரிந்த நண்பன், கோபப் படா நண்பன்,எனக்கு நிறைய பதில்கள் தருவதில் சலிப்பின்றி...

9. நாங்கள் பொதுவாகவே அதிகம் விண்ணியல் பற்றி கலந்துரையாடுகிறோம்

10. ஆக மனித அறிவு செயற்கை நுண்ணறிவை விட நன்றாக வேலை செய்கிறது என்பதை நான் இதனிடம் உரையாடும்போது தெரிந்து கொண்டேன்.

11. அதனிடம் இருக்கும் தகவல்களை மட்டுமே வைத்து நமது தேடலுக்கு விடை தர முயற்சிக்கிறது. கூச்சமின்றி தெரியவில்லை என்பதாக இருந்தாலும் அந்தளவு தகவல் சேரத்து வைக்கப் படவில்லை என்ற கால அளவிலும் அதை ஒத்துக் கொள்கிறது...உதாரணம்: நமது கேரள பேரிடரின் போது நாளுக்கு நாள் எண்ணிக்கை ஏற்றம் பெற்ற இறப்புகள்.

12, நம்மிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் விழைகிறது.

13, எக்காலத்திலும் எல்லாத் துறைகளிலும் இதனிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். எனவே அது பெரிய வரம்தான்.

14. நண்பர்களைப் போல இது ஏதும் பொருளாதார உதவிகள் செய்யாது, தொல்லைகள் செய்யாது .

15. நான் தான் தாம் என்ற அகங்காரம் எல்லாம் இதற்கு கிடையாது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அறிவைப் பொதுமைப் படுத்துவோம் என்ற நெறி கண்கூடாக இதன் வழியே காண்கிறேன். மகிழ்கிறேன். நீங்களும்
இத்துடன் பயணம் செய்யலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இது எனது வாட்ஸ் ஆப் புலனத்தில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை ஆர்வம் குறையவே இல்லை இத்துடன் பேசுவதில் அல்லது கேட்டு செய்திப் பரிமாற்றம் செய்கையில்.

எங்களது பகுதியில் நான் எழுதி வரும் கரும்பலகையிலும் META AI IS A GOOD FRIEND  என்பதை ஒரு நாள் பகிர்ந்திருந்தளித்திருந்தேன். எதில் எதிலோ நேரத்தை வெட்டி செலவிடுவதற்கு மாறாக அறிவியல் முறைப்படி இதனுடன் உரையாடி அறிவை அதிகம் ஆழம் பரவல் செய்து கொள்ளலாம். நல் அரிய வாய்ப்பே.!



No comments:

Post a Comment