Sunday, April 17, 2022

தற்கொலை எண்ணத்தைக் கொலை செய்யுங்கள்: கவிஞர் தணிகை

 தற்கொலை எண்ணத்தைக் கொலை செய்யுங்கள்: கவிஞர் தணிகை





கடந்த வாரத்தில் எனது மகனது 5 ஆம் வகுப்பு பயிற்றுவித்த ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்ததாக கேள்விப் பட்டேன்.


என்னதான்" மனந்திறந்து பேசலாம் வாங்க"

தெய்வா மக்கள் நல ஆலோசனை மையம் ( இலவசம்)


நீலக் கிரகமான பூமியைத் தவிர உயிர்கள் வேறெந்தக் கிரகத்திலும் காணப்படவில்லை

என்றெல்லாம் சொன்னாலும் எழுதினாலும் எவரும் வருவதாகவோ மீள்வதாகவோ பெருமளவு இல்லை. எப்போதோ ஒரு அத்தி பூக்கிறது...


தற்கொலைகள் அவ்வப்போது நடந்த வண்ணமே இருக்கின்றன.

எனவே தற்கொலை எண்ணத்தைக் கொலை செய்தால் ஒழிய இவர்கள் தப்பிக்க வழி இல்லை...


இந்த உலகில் அந்தரங்கமான சங்கீதத்திற்கு வடிவம் தந்து பாட முடிவதில்லை என்று சொல்லி இருப்பார்

தீபம். நா.பார்த்த சாரதி ஒரு நாவலில்.


இயற்கையை வணங்கக் கற்போம்

இயற்கையை வணங்கி நிற்போம்...


உயிர்களின் தோற்றம் மாற்றம் ஏற்றம் இறக்கம் மறைவு எல்லாம் கண்களுக்குப் புலப்படாதது...

இயற்கையை வணங்கி என்றும் உயிர்த்திருப்போம்...


வாழ்க 

 நீண்டு வாழ தற்கொலை எண்ணத்தைக் கொலை செய்யுங்கள்...




மறுபடியும் பூக்கும் வரை 

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment